Monday, May 14, 2012

இந்திய முஸ்லிம்கள் பயங்கரவாதத்தை வெறுப்பவர்கள் அமெரிக்க ரகசிய ஆவணத்தை மேற்கோள் காட்டியது விக்கி லீக்ஸ்

E-mail Print PDF
இந்தியாவில் வாழும் பெரும் பான்மையான முஸ்லிம்கள் பயங்கரவாதத்தை விரும் பவில்லை என்றும், அவர்கள் தேசியத் திலும் ஜனநாயகத்திலும் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள் எனவும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்காவின் ரகசிய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்திய முஸ்லிம்கள் எப்போதும் சமாதான சக வாழ்வு போன்றவற்றில் நம்பிக்கை உடையவர்கள்  முஸ்லிம்கள் தான் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்படுகின்றனர். அது மட்டுமின்றி பயங்கரவாத குற்றச் சாட்டில் பாதிக் கப்படுகின்ற னர் என்ற அவல தகவல்கள் எல்லோ ரும் அறிந்த ஒன்றுதான். எனினும் அமெரிக்கக் தூதர் ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது சாத்தான் வேதம் ஓதுகிறது என ஒதுக்கி விடலாம். எனினும்  ஓங்கி அறையும் விதமாக ஒலிக்கும் உண்மையை, உலகம் அறியும் உண்மையை மறைக்க முடியாது என்பதையே இந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

அதில் அமெரிக்கத் தூதரகங் கள் தங்களது தலைமை யிடத் துக்கு அனுப்பிய பல்வேறு ரகசிய அரசுமுறை ஆவணங் களை விக்கிலீக்ஸ் இணைய தளம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவுக்கான அமெரிக் காவின் முன்னாள் தூதர் டேவிட் முல்ஃபோர்டு அனுப்பிய செய்தி தற்போது வெளியாகியிருக்கிறது.

பிரிவினைவாதமும் மதத் தீவிரவாதமும் இந்திய முஸ்லிம்களிடையே பரவலான ஆதர வைப் பெறவில்லை எனவும் பெரும்பாலான முஸ்லிம்கள் மிதவாதக் கொள்கைகளில் பிடிப்புள்ளவர்களாக இருக்கிறார்கள் எனவும் டேவிட் முல்ஃபோர்டு அந்த ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்திய முஸ்லிம்கள் தேசப்பற்றாளர்களாக இருக்கிறார்கள் என்றும் புகழ்ந்துள்ளார்.

இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சி, வலுவான ஜனநாயகம், பல்வேறு பண்பாடுகளையும் உள்ளடக்கிய தன்மை போன்றவை காரணமாக சமூகத்துடன் இணைந்து வாழ்வதையே இந்திய முஸ்லிம்கள் விரும்புவதாகவும் அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் வேக வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்கெ டுப்பு பெரும் பங்கு வகிப்பதை இந்த ஆவணம் வெளிச்சப்படுத்தியுள்ளது.  பெரும் பாலான முஸ்லிம் இளைஞர்கள் சமூகங் களுடன் சமூகத்துடன் கலந்துவிட விரும்பு வதால், பயங்கரவாதச் செயல்களுக்கு ஆதரவு  மிகமிகக் குறைந்துவிட்டதாகவும் அந்த ஆவணம் கூறுகிறது.

No comments: