Thursday, March 27, 2008

ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா


ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா?

அரசர்கள் பிற மதத்தினரை துன்புறுத்துவதும், பிற மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களை இடிப்பதும் வரலாற்று உண்மை. ஜைன மதத்தைச் சார்ந்த முதலாம் மகேந்திரவர்மன் சைவ மதத்தை போதித்த அப்பரை சுண்ணாம்புக் கால்வாயில் வைத்து சுட்டான். இந்து மன்னர்கள், ஜைன திருத்தலங்கள் மற்றும் புத்த விகாரங்களை வீழ்த்தினர். இன்றுள்ள பல இந்துக் கோயில்கள் ஒரு போது ஜைனத் திருத்தலங்களாகவும், புத்த விகாரங்களாகவும் இருந்தவையே. இந்து மன்னர்களில் சைவப் பிரிவு மன்னர்கள் வைஷ்ணவப் பிரிவினரின் திருத்தலங் களையும், வைஷ்ணவப் பிரிவினர் சைவத் திருத்தலங்களையும் தாக்கியதுண்டு, தகர்த்ததுண்டு. வைஷ்ணவர்களைக் கொன்று குவித்து, சிதம்பரத்தில் உள்ள கோவிந்தராஜர் சிலையை கடலில் எரிந்ததால்தான் சோழமன்னன் இரண்டாம் குலோத்துங்கன் 'கிருமி கண்ட சோழன்' என்றழைக்கப்பட்டான் என்பது வரலாறு.
இது இங்ஙனமிருக்க ஒளரங்கசீப் ஒரு அதிதீவிர முஸ்லிம், அவர் இந்துக்களை இன்னலுக்கு உள்ளாக்கினார், இந்துக் கோயில்களை தகர்த்தார் என்பது மட்டும் பிரபலப்படுத்தப்படுகிறது. உண்மையில் ஒளரங்கசீப் இந்துக்களை இன்னலுக்கு உள்ளாக்கினார் என்பதும், இந்துக் கோயில்களை தகர்த்தார் என்பதும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.
ஒளரங்கசீப் இராஜபுத்திர இளவரசியின் பேரன். அவரின் நான்கு மனைவியரில் இருவர் இந்துக்கள். அவரின் நம்பிக்கைக்குரிய இரண்டு உயர் பெரும் தளபதிகள் லி ஜெய்சிங், ஜஸ்வந்த் சிங் இந்துக்கள் ஆவர். முகுந்த்சிங் ஹாதா, ரத்தன்சிங், தயாள்சிங், ஜல்லா, அர்சுன் சிங், குமார்சிங் ஆகியோர் அவர் படையிலே இருந்த பல இந்து தளபதிகள்.
இதைத்தவிர அவரின் நிர்வாகத் துறையில் எண்ணற்ற இந்துக்கள் இருந்தனர். அவர்களில் பலர் மிக உயர்நிலையில் இருந்தனர். அவருடைய 393 மன்சப்தார்களில் 182 பேர் இந்துக்கள். இவர்கள் 1000 முதல் 7000 குதிரை வீரர்களின் அதிபதிகள்.
அக்பர் காலத்திலோ அல்லது ஷாஜஹான் காலத்திலோ இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் இந்து மான்சப்தாரிகள் இருந்ததில்லை. ஒளரங்கசீப் ஒரு அதிதீவிர மதசகிப்பற்ற முஸ்லிமாக இருந்திருந்தால் இது எல்லாம் எங்ஙனம் நடந்திருக்கும்?
இதுமட்டுமல்ல. ஒளரங்கசீப் இந்துக் கோயில்களுக்கு மானியமும் இந்துத் துறவிகளுக்கு ஆதரவும் அளித்துள்ளார். உஜ்ஜனியின் பாலாஜி ஆலயம் சாவஹத்தியிலுள்ள உமானநித் கோயில், சந்குஞ்சயின் ஜைனர்கள் கோயில், வாரனாசி ஜங்கம்பதி சிவன் கோயில் ஆகியன ஒளரங்கசீப்பினால் மானியங்கள் அளிக்கப்பட்ட பல நூறு கோயில்களில் சில. தமிழகத்தைச் சேர்ந்த குமரகுருபரர் காசியிலும் மடம் அமைத்து சைவ மதப் பிரச்சாரம் செய்ய ஒளரங்கசீப் உதவினார். ஒளரங்கசீப்பின் ஆட்சியின் போது லஷ்மிலால், பாபாலால், வைராஜா, விப்ரயோத் என்னும் நூலின் ஆசிரியர், இன்னும் பற்பல இந்துமத போதகர்கள் எல்லாம் யாதொரு தீங்குமின்றி தங்கள் மதக்கருத்துகளை பரப்பி வந்தனர். வைணவம் வளர்ந்தது. ஒளரங்கசீப்போ அவரின் அதிகாரிகளோ இவர்களை தடைப்படுத்தவில்லை.ஒளரங்கசீப் ஒரு வைதீக முஸ்லிம். இதனால் உங்கள் மதம் உங்களுக்கு, என் மதம் எனக்கு என்னும் கோட்பாட்டை தீவிரமாக பின்பற்றியவர். இதனால் மத மாற்றத்தை இவர் ஊக்குவிக்கவில்லை. சத்திரபதி சிவாஜியின் பேரன், சாம்பாசியின் மகன் ஷாகு, இவருடைய மாளிகையில் தன் ஏழாம் வயது முதல் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு வளர்ந்தார். ஒளரங்கசீப்பின் புதல்வி ஜுனைத்துன்னிசாவினால் வளக்கப்பட்டார். சிவாஜி, சாம்பாஜி, இராஜாராம் என அனைவரும் மறைந்து விட்ட நிலையில், ஒளரங்கசீப்பின் அவையிலும், முகலாயர்களின் சுற்றுச் சார்புகளிலும் சுமார் 25 ஆண்டுகள் வளர்க்கப்பட்டும், ஷாகு இந்து மதத்தை சுதந்திரமாகப் பின்பற்ற அனுமதிக்கப் பட்டதிலிருந்து, ஒளரங்கசீப்பின் தாராள மனப்பான்மை தெளிவாகப் புரியும். அதேபோல் இராஜ புத்திர இராணி ஹாதி, 'ஜோத்பூரை தனது வாரிசுக்கு உரிமை யாக்கினாள். அங்குள்ள இந்து ஆலயங் களைத் தடுத்துவிட்டு பள்ளிவாசல்களை நிர்மாணிக்கிறேன் என்று சொன்னபோது அதனை ஏற்றுக் கொள்ளாதவர் ஒளரங்கசீப். விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் கடைசி அரசர் ரங்கராயலு தானும் தனது உற்றார் உறவினர்களும், குடிமக்களும் முஸ்லிமாக மதம் மாறுவதற்கு சம்மதிப்ப தாக அறிவித்த போதும் அதை ஏற்றுக் கொள்ளாதவர். ஒளரங்கசீப் குறித்து வரலாற்று மாமேதை ஜாதுநாத் சர்கார் குறிப்பிட்டுள்ளதை உற்றுநோக்கினால் ஒளரங்கசீப்பின் மதசகிப்புத்தன்மை புரியும்.
தனது பரிபாலனத்தின் கீழ் உள்ள இந்து மதத்தைச் சார்ந்த குடிமக்கள் அமைதியாக வாழவேண்டும் என்பதில் ஒளரங்கசீப் கவனமாக இருந்தார். ''பிராமணர்களையோ, மற்ற இந்து குடிமக்களையோ சட்டவிரோதமாகத் தலையிட்டு தொல்லைக்குட் படுத்தக்கூடாது'' என்பது குறித்து இவரின் பனாரஸ் ஆணை குறிப்பிடுகின்றது. பேராசிரியர் கே.கே.தத்தாவின் நர்ம்ங் எர்ண்ழ்ம்ஹய்ள் நஹன்ஹக்ள் ஹய்க் ல்ஹழ்ஜ்ஹஜ்ஹள் (1578 லி 1802) என்றும் நூல் ஒளரங்கசீப் இந்துக் களுக்கு குறிப்பாக பிராமணர்களுக்கு மானியம் வழங்கியதையும், அதுகுறித்து பிறப்பித்த அரச ஆணைகளை யும் பட்டியலிடுகிறது. ''ஒளரங்கசீப்பின் ஆட்சியின்போது பாரசீகர்கள், கிருத்தவர் கள், இந்துக்கள் ஆகிய அனைவரும் தங்களது மதக் கடமைகளை ஒழுங்காக ஆற்றிட முடிந்தது'' என்று கேப்டன் அலெக்சாண்டர் ஹாமில்டன் குறிப்பிட்டுள்ளது ஒளரங்கசீப்பின் தாராளத்தன் மையையும் மத சகிப்புத்தன்மையையும் மறுபடியும் நிரூபிக்கின்றது.
பேரரசர் ஒளரங்கசீப் படை வங்கா ளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது வாரணாசி வந்தடைந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் வாரணாசியில் படை ஓர் நாள் தங்கினால் தங்களுடன் வந்துள்ள தங்களது குடும்பப் பெண்கள் கங்கையில் குளித்துவிட்டு காசி விஸ்வநாதரை தரிசித்து செல்ல முடியும் என்ற கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஒளரங்கசீப், தன் படை காசியில் ஓர் நாள் தங்கிச் செல்ல அனுமதியளித்தார்.
தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப இந்து அரசிகள் மூடுபல்லக்கில் சென்று கங்கையில் நீராடிவிட்டு, காசி விஸ்வநாதர் கோயில் சென்று வழிபட்டுத் திரும்பினர். ஆனால் ஆலயத்திற்கு வழிபடச் சென்ற கட்ச் இளவரசி மட்டும் திரும்பவே இல்லை. இராணியைத் தேடிக் கண்டு பிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனால் வெகுண்ட ஒளரங்கசீப், அந்த இளவரசியை கண்டுபிடிக்க தன் மூத்த அதிகாரிகளை அனுப்பினார். அவ்வதிகாரிகள் தீவிர தேடுதலில் ஈடுபட்டபோது விஸ்வநாதர் ஆலயத்தின் சுவற்றிலுள்ள ஒரு கணபதி சிலை மட்டும் சுழலும் வகை யில் அமைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதனை சுழற்றியபோது, பாதாள சுரங்கத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் காணப்பட்டன. அந்த பாதாள சுரங்கத்தில் சென்று பார்த்தபோது கட்ச் இளவரசி கற்பழிக்கப்பட்ட நிலையில் முக்கி முனகிக் கொண்டு கிடந்தாள். விசுவநாதர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடத்திற்கு நேர் கீழே அந்தத் துயரச் சம்பவம் நடைபெற்றிருந்தது.
நடந்த சம்பவம் குறித்து விசாரித்த போது, மேற்படி கட்ச் இளவரசி விஸ்வநாதர் ஆலய புரோகிதரால் கற்பழிக்கப்பட்டு துன்புறத்தப்பட்டது உறுதியாகத் தெரிந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டினர். மேற்படி விஸ்வநாதர் சிலைக்கு நேர் கீழே இருந்த சுரங்க அறையில் கற்பழிப்பு நடைபெற்று இருந்ததால், கற்பக்கிரகத்தின் புனிதம் அழிந்து விட்டதாகக் கருதி மேற்படி விஸ்வநாதர் சிலை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. கோயில் இடிக்கப்பட்டது.
இந்து இளவசர்களின் கோரிக்கையின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி மிக ஆதாரப்பூர்வமானது. இதன் விரிவான விளக்கம் ஒரிசா மாநில கவர்னராக இருந்த பி.எஸ்.பாண்டே அவர்களின் இஸ்லாம் அண்ட் இந்தியன் கல்ச்சர் (ஒள்ப்ஹம் ஹய்க் ஒய்க்ண்ஹய் ஈன்ப்ற்ன்ழ்ங்) என்னும் நூலில் தரப்பட்டுள்ளது.
மத சகிப்புத்தன்மையைப் பொறுத்த மட்டில் ஒளரங்கசீப்பின் உண்மை வரலாறு வேறு, பாடநூல்கள் வாயிலாக நமக்கு போதிக்கப்படுகின்ற வரலாறு வேறு. நமக்கு போதிக்கப்படுவது போல் ஒளரங்கசீப் ஒரு மதவெறியராக, இந்துக்களை துன்புறுத்துகிற ஓர் அரசராக இருந்திருப்பின் இந்துக்களை பெரும் பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டை ஐம்பது ஆண்டுகள் ஆண்டிருக்க முடியுமா?
ஒரு வைதீக முஸ்லிம் ஒருபோதும் பிற மதத்தினரை துன்புறுத்த மாட்டார். ஒளரங்கசீப் பற்றி பரப்பப்படும் தவறான கருத்துக்கள் இனியாவது நிற்கட்டும். இல்லையேல் விஸ்வநாத ஆலய இழி நிகழ்ச்சியைப் போன்ற பல நிகழ்ச்சிகள் வெளிவரக்கூடும்

Wednesday, March 12, 2008

கொசோவோ விடுதலை! தொடரும் உலக ஆதரவு!!
ஐரோப்பாவில் இஸ்லாம் பண்டைய காலத்திலேயே பரவிவிட்டது. ஸ்பெயி னில் 800 ஆண்டுகாலம் முஸ்லிம்களின் ஆட்சி நடைபெற்றது. 14ஆம் நூற்றாண் டில் உருவான சக்திமிக்க உதுமானிய பேரரசு 20ஆம் நூற்றாண்டு வரை கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் வடஆப்பிரிக்க பகுதிகளிலும் ஆட்சி செலுத்தியது.
முதல் உலகப் போருக்குப் பிறகு உதுமானிய பேரரசின் கீழ் இருந்த பகுதிகள் பிரிந்து செல்ல ஆரம்பித்தன. 1917ல் ரஷ்யாவில் வெடித்த கம்யூனிஸப் புரட்சியின் ஈர்ப்பால் பல பகுதிகள் கம்யூனிச குடையின் கீழ் ஒன்றிணைக்கப் பட்டன. அவ்வாறு இணைந்தவைகளில் யூகோஸ்லோவியா போன்ற பல நாடு களைச் சார்ந்த முஸ்லிம்களைப் பெரும் பான்மையாகக் கொண்ட பிராந்தியங்கள் உண்டு. போஸ்னியா ஹெர்ஸகோவினா, கொசோவோ போன்ற பகுதிகளும் அடக்கம். அவற்றிற்கு நீண்டகாலமாக சுதந்திரம் மறுக்கப்பட்டதோடு அடக்கு முறைக்கும் ஆளாக்கப்பட்டன.
போஸ்னியா 90களில் விடுதலைப் பெற்றது. கொசோவோ கடந்த மாதம் சுதந்திரம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உட்பட பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவு பெருகினாலும் கொசோவோவுக்கு எதிர்ப்பும் பல வழிகளில் வந்தவண்ணம் உள்ளன.
இந்நிலையில் கொசோவோ சுதந்திரத் திற்கு ஆதரவு வழங்கிய அமெரிக்காவை எதிர்த்து செர்பியர்கள் பெரும் கலவரத்தில் இறங்கினர். கொசோவோவின் சுதந்திர அறிவிப்பினை எதிர்த்து ஒன்றரை லட்சம் செர்பியர்கள் பெரும் வன்முறையில் இறங்கினர். தலைநகர் பெல்கிரேடில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தாக்கப் பட்டது வாகனங்கள் அடித்து நொறுக்கப் பட்டன.
வெறிபிடித்த செர்பிய இளைஞர்கள் அமெரிக்க தூதரகத்தை தங்கள் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்தனர். காவல் துறையினரும் தாக்கப்பட்டுள்ளனர். ஜெர்மனி மற்றும் கனடா நாட்டு தூதரகங் களும் தாக்கப்பட்டன. வன்முறையாளர் களின் வெறியாட்டத்தில் போஸ்னியா, க்ரோஷியா மற்றும் துருக்கி நாட்டு தூதரகங்கள் மீதும் தாக்குதல் நடத்தப் பட்டன.
ஐரோப்பிய யூனியன் 2 ஆயிரம் உயர் அதிகாரிகளை கொசோவோவுக்கு அனுப்பி வைத்தது. அவர்கள் காவல் துறை, நீதித்துறை மற்றும் நிர்வாகத்துறை யில் பயிற்சியளிப்பார்கள் என ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.
கொசோவோ என்ற புதிய நாட்டின் உதயம் உலக அளவில் பெரும் வரவேற் பைப் பெற்றுள்ளது. ரஷ்யாவும், செர்பியா வும் கடுமையான அதிருப்தியைத் தெரிவித்துள்ளன. நமது அண்டை நாடான இலங்கை கூட தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ள

Tuesday, March 11, 2008

காஸா ஹமாஸின் பதிலடியால் பின்வாங்கி ஓடியது இஸ்ரேல்!
அபூசாலிஹ்.

1979ல் அமெரிக்காவின் அடிவருடி யாக இருந்த ஈரான் மன்னர் ஷாவின் ஆட்சி அகற்றப்பட்டு இஸ்லாமியக் குடியரசாக பிரகடனம் செய்யப்பட்டது.
2006ல் தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலி ஆக்கிரமிப்பு படைகள் ஹிஸ்புல்லாஹ் போராளிகளால் விரட்டியடிக்கப்பட்டன. இதைப் போன்று ஒரு வரலாற்று நிகழ்வு சமீபத்தில் நிகழ்ந்துள்ளது.
2008 மார்ச் 3 ஆம் தேதி மூர்க்கமான இஸ்ரேலியத் துருப்புகள் வீரப் போராளி களான ஹமாஸின் பதிலடியை எதிர் கொள்ள முடியாமல் காஸாவை விட்டு காலி செய்துள்ளனர். சமாதான ஆர்வலர் கள் கெஞ்சியபோது முரண்டு பிடித்த இஸ்ரேல், ஹமாஸின் பதிலடிக்குப் பிறகு ஓட்டம் பிடித்துள்ளார்கள்.
படுகொலைகளைப் புரிந்த பாதகர்கள் பின்வாங்கி ஓடினார்கள். உலகின் மிகமோசமான ஆக்கிரமிப்பு சக்தியான இஸ்ரேல் காஸாப் பகுதியை விட்டு தனது ராணுவத்தை திரும்பப் பெற்றது.
பாலஸ்தீனர்களின் பேராதரவுப் பெற்ற மக்கள் இயக்கமான ஹமாஸ் நாடாளு மன்றதைக் கைப்பற்றியது. தூய்மையான ஆட்சியையும் வழங்கி வருகிறது. பாலஸ் தீனர்களது வெற்றியின் வீச்சைகண்டு பொறுக்காத இஸ்ரேலும், அமெரிக்காவும் ஹமாஸுக்கு வாக்களித்த அப்பாவி பாலஸ்தீன மக்களை கொடூரமாக தண்டித்தன.
பாலஸ்தீனத்தில் செல்வாக்கிழந்த மற்றொரு இயக்கமான ஃபதாஹையும் தனது கைப்பாவையாக மாற்றிக் கொண்டு பாலஸ்தீன மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் இறங்கினர்.
ஹமாஸின் செல்வாக்குப் பெற்ற காஸா பகுதி திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. மக்களின் அத்தியாவசிய தேவைகளான தண்ணீர், மின்சாரம் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் மறுக்கப்பட்டன.
வான் தாக்குதலில் பச்சிளம் பாலகர்கள் உட்பட பல அப்பாவிகள் கொல்லப்பட்ட னர். வாழ்வாதாரங்களைத் தேடி அப்பாவி பாலஸ்தீன மக்கள் காஸா எல்லையைத் தாண்டி எகிப்தில் நுழைந்தனர். வெள்ள மாய் புகுந்த பாதுகாப்புப் படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர்.
தடுப்புச் சுவர்கள் உடைக்கப்பட்டன. கடந்த ஐந்து நாட்களில் இஸ்ரேலின் வான்தாக்குதலில் 116 அப்பாவி பாலஸ் தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 22 பேர் ஒரு பாவமும் அறியாத பச்சிளம் பாலகர்கள் என்பது நெஞ்சை உலுக்குகிறது.
பாலஸ்தீனப் பிரதமர் இஸ்மாயில் ஹனியாவின் அலுவலகம் அருகேயும் குண்டு வீசப்பட்டுள்ள விமானங்களும் ராக்கெட்களும் சீறிப்பாய்ந்து கவச வாகனங்களும் நெருக்கத் தொடங்கின.
அடர்ந்த இருட்டில் மெழுகுவர்த்தி ஒளியில் குழந்தைக் கொழுந்துகள் தங்கள் பள்ளிப் பாடங்களை படிக்க நேர்ந்தது.
பாலஸ்தீன மக்களின் அவலநிலை குறித்து தாங்கள் மிகவும் வேதனை அடைவதாகவும் ஆனால் ஹமாஸால் தான் பிரச்சினை எனவும் நடுநிலையான (!) கருத்தொன்றை உதித்தார் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டலீஸா ரைஸ்.
இந்திய விண்வெளி ஏவுதளத்திலிருந்து இஸ்ரேலின் உளவு செயற்கை கோள் ஏவப்பட்டதின் பிறகே பாலஸ்தீ னின் காஸாப் பகுதியில் இஸ்ரேலின் கொடூர தாக்குதல் நிகழ்ந்துள்ளதாக சர்வதேச அரசியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.கிட்டத்தட்ட உலகமே கைவிட்ட நிலை யில் பாலஸ்தீன மக்களின் துயரவாழ்க்கை தொடகிறது.
இந்நிலையில், 2008 மார்ச் மூன்றாம் தேதி அதிகாலையில் இஸ்ரேல் படைகள் இடத்தைக் காலி செய்தன.
முதலாவதாக காஸாநகரின் வடக்குப் பகுதியான ஜபலிய்யா அகதி முகாமிலிருந்து இஸ்ரேலின் கவச வாகனங்கள் திரும்பத் தொடங்கின.
இஸ்ரேலின் திடீர்பின் வாங்கலுக்கு ஹமாஸின் பதிலடியே காரணம் என வளைகுடாவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு வருடத்திற்கும் மேலாக இஸ்ரே லின் கடுமையான தாக்குதலுக்கு மோசமாக தாக்கப்பட்ட ஹமாஸ் போராளிகளிடம் இருந்து மிகமோசமான பதிலடியை இஸ்ரேல் எதிர்பார்க்கவில்லை.
இஸ்ரேலின் தெற்குப் பகுதி நகரான ஆஸ்க்லான் குடியிருப்புகள் மீது ஹமாஸ் போராளிகளின் கட்யூஸா ராக்கெட்டுகள் முதல்முதலாக சீறிப்பாயத் தொடங்கிய ஒரு மணி நேரத்தில் இஸ்ரேலிய கவச வாகனங்கள் காஸாப் பகுதியை விட்டும் திரும்பத் தொடங்கின.
அவர்களும் ராக்கெட் தாக்குதலை தொடர்ந்தால் நாங்கள் தாக்குதலை தொடர்வோம் என இஸ்ரேலிய ராணுவப் படையின் முக்கிய அதிகாரி கூறியதாக இஸ்ரேலின் பிரபல ஹாரெட்ஸ் நாளேடு குறிப்பிடுகிறது. இந்த அறிவிப்புக்கு பின்னரும் ஹமாஸின் 33 ராக்கெட்டுகள் தெற்கு இஸ்ரேலை நோக்கி பாய்ந்துள்ளன.
காஸா எப்போதுமே எதிரிகளின் கல்லறையாக இருக்கும் அதில் மாற்ற மில்லை என மூத்த ஹமாஸ் தலைவர் அபூ ஜெôஹ்ரி தெரிவித்திருக்கிறார்.
ஹமாஸின் ராக்கெட்டுகள் தான் இஸ்ரேலின் பெரும்பாலான ஆட்டத்தை நிறுத்தியிருப்பதாக இஸ்ரேலின் ஊடகங் கள் குறிப்பிட்டுளளன.
தற்போது இஸ்ரேலிய அமைச்சர் அமி அய்லோன் வெளியிட்டிருக்கும் கருத்து சர்வதேச அளவில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இஸ்ரேல் கவுரவம் பார்க்காமல் ஹமாஸ் இயக்கத்தினரிடம் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். இதற்கு எகிப்து மத்தியஸ்தம் செய்ய வேண்டும். அதுவே இந்தப் பிராந்தியத்தில் அமைதி திரும்ப வழிவகுக்கும். என அமி அய்லோன் தெரிவித்ததோடு 5 ஆம் தேதி கூட்டப்படவுள்ள இஸ்ரேலிய அமைச்சர வைக் கூட்டத்தில் இது குறித்து ஆலோசிக் கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
ஹமாஸை அங்கீகரிக்க மறுத்து. அழிச்சாட்டியம் செய்து வந்த இஸ்ரேல் ஹமாஸிடம் சமரசம் பேசுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.
ஹமாஸ் போராளிகளுக்கு போர்க் களத்தில் கிடைத்த முக்கிய வெற்றியாக இது கருதப்படுகிறது. வாழ்க பாலஸ்தீனம்