மோடியை முன்நிறுத்தும் ஏகாதிபத்திய சக்திகள்
இந்த செய்தி தொடர்பான தகவல்கள் ஊடகங்களில் வெளியானபோது குபீர் என மக்கள் சிரிக்கத் தொடங்கினர். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கான வேட்பாளராக இருப்பார் என நம்பப்படுவதே ஒரு நகைச்சுவைக்குரிய அம்சமாக பார்க்கப்படுகிறது. ராகுல் காந்தியை முன்நிறுத்தி நடைபெற்ற தேர்தல்களில் சொல்லி வைத்தாற்போல எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றன. எதிர்க்கட்சிகளை வெற்றிபெற வைப்பதற்காகவே தனது பணிகளை ஆற்றும் ஒருவர் பிரதமர் பதவிக்கு முன் நிறுத்தப்படுவதாக வைத்துக்கொண்டால் கூட ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம். காரணம், காங்கிரஸ் கூட்டணிக்கு ராகுலின் எதிர்காலம் குறித்த நம்பிக்கை இருக்கக்கூடும்.
ஆனால் ராகுலுக்கு மோடி சவாலாக விளங்குவார் என்ற கூற்று குலுங்கக்குலுங்க சிரிப்பை வரவழைக்கக்கூடியது. மோடியை சொந்தக் கட்சியி னரும் கூட்டணிக் கட்சிக் காரர்களும் தங்கள் மாநில தேர்தல் பிரச்சாரத்திற்கு வரக்கூடாது என மறுத்து வெறுத்து ஒதுக்கப்பட்ட நிலைமை இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை நிகழாத ஒன்று. மோடி இவ்வளவு பரிதாபப் பின்னணியைக் கொண் டவர் மட்டுமல்ல, குஜராத் இனப்படுகொலை மூலம் கொடூரப் பின்னணியும் கொண்டவர்.
மோடி-ராகுல் இருவர் மட்டும் தான் பிரதமர் பதவிக்கு மக்களால் எதிர்பார்க்கப்படும் புள்ளிகளா? இவர்களை மேற்கு ஊடகம் ஏன் தூக்கிப் பிடிக்க வேண்டும்? மூன்றாவது அணி 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் முக்கிய இடத்தினைப் பெறும் என எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில் டைம் பத்திரிகையின் இந்த வினோத பரப்புரை பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

No comments:
Post a Comment