தமிழர் இனப்படுகொலைக்கு ஆதரவு. இலங்கைக்கு ஆதரவாக களமிறங்கும் ஆர். எஸ். எஸ்
ஐ.நா. மனித உரிமைக் குழுவில், தமிழர்களை பல்லாயிரக்கணக்கில் கொடூரமாகக்
கொன்று குவித்த இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சேனல் 4
தொலைக்காட்சி அம்பலப்படுத்திய காட்சிகள், தமிழர்களை மட்டுமின்றி உலகமக்கள்
அனைவரின் உள்ளங்களையும் உலுக்கின.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிவது அப்பாவிகளை அழித்தொழித்த அமெரிக்கா என்றபோதும், இத்தீர்மானத்தின் மூலமாவது இனப்படுகொலைகார இலங்கையைத் தண்டிக்க வேண்டும் என மனிதநேயமுள்ள அனைத்து அமைப்புகளும் இத்தீர்மானத்தை ஆதரித்து, இலங்கைக்கு கண்டனம் தெரிவித்தன.
ஆனால், சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதமான காந்திப் படுகொலையை அரங்கேற்றிய ஆர்எஸ்எஸ், இனப்படுகொலை செய்த இலங்கையை வலிமையாக ஆதரித்துள்ளது. இலங்கையை எதிர்க்கக்கூடாது என வரிந்து கட்டிக் களமிறங்கி, நஞ்சு தொனிக்கும் வார்த்தைகளால் கொஞ்சமும் நெஞ்சிரக்கமின்றி அறிக்கை விடுகிறது. ஆர்.எஸ்.எஸ் ஸின் அதிகாரப்பூர்வ இதழான ஆர்கனைசரில், இலங்கைக்கு பகிரங்க ஆதரவளித்து எழுதப்பட்டத் தலையங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
இலங்கையை ஆர்.எஸ்.எஸ் ஆதரிப்பதற்கான காரணங்கள்
காரணம் 1:
இராமாயணத்தை உண்மையாக நடந்த கதையாக ஆர்எஸ்எஸ் நம்புகிறது. இராமன்தான் ஆர்எஸ்எஸ்ஸுக்கு மூலதனம். இராமன் போரிட்டது இராவணனோடு. இராவணன் ஆண்ட தேசம் இலங்கை. இராவணன் ஒரு தமிழ் மன்னன். ஈழத் தமிழர்கள் இராவணனின் வழித்தோன்றல்களே. எனவே இராவணனின் வாரிசுகள் அழிக்கப்பட்டது நியாயமே என்று கருதுகிறது இராமபக்த ஆர்எஸ்எஸ்.
காரணம் 2:
ஒருநாட்டில் வசிக்கும் சிறுபான்மையினர் பெரும்பான்மையினருக்கு இணையான உரிமைகளோடு வாழக்கூடாது. பெரும்பான்மையினரின் அடிவருடி, அவர்களின் தயவைப் பெற்றுத்தான் சிறுபான்மையினர் வாழவேண்டும். சிறுபான்மையினர் தங்களின் உரிமைகளைக் கேட்டுப் போராடக்கூடாது என்பதே ஆர்எஸ்எஸ்ஸின் கோட்பாடு. சிறுபான்மையினர் அறவழியில் உரிமைப் போராட்டங்களில் இறங்கினால் ஆயுதமுனையில் அவர்களை அழித்தொழிக்க வேண்டும் என்பதும் ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கையாகும். தமிழர்களை இனப்படுகொலை செய்துள்ள இலங்கை ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கைக்குச் செயல்வடிவம் தந்துள்ளது.
காரணம் 3:
இந்தியாவிலும் பலமுறை இனப்படுகொலைகளை ஆர்எஸ்எஸ் பரிவாரம் நடத்தியுள்ளது. ஸ்டீவ் வில்கின்சன் என்பவர் இந்தியாவில் மதக்கலவரங்களில் நடந்துள்ள மரணங்களைக் குறித்து ஆய்வு செய்துள்ளார். சுதந்திரம் அடைந்த இந்தியாவில் நடந்த மதக்கலவரங்களில் இதுவரை 40 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் முஸ்லிம்கள் என்கிறது இவரது ஆய்வு.
பாகல்பூர், மீரட், பீவண்டி, கான்பூர், முராதாபாத், டெல்லி, அலிகர், சூரத், கோவை, குஜராத், பட்கல் என நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களைப் படுகொலை செய்துள்ள ஆர்எஸ்எஸ் இன்னும் பல்லாயிரம் பேரைப் படுகொலை செய்யும் பயங்கரத் திட்டங்களைப் பயிற்சி செய்து வருகிறது.
இந்நிலையில் ஐ.நா.வில் உலக நாடுகளால் இலங்கை கண்டிக்கப்பட்டால் அது ஆர்எஸ்எஸ்ஸின் கொலை நோக்குத் திட்டங்களுக்கு குறுக்கீடாகக்கூடும் என்று கருதுகிறது.
இது தமிழர்கள் இந்துத்துவ சக்திகளை அடையாளம் கண்டுகொள்ள வேண்டிய தருணம். தமிழகத்தில் வளரத்துடிக்கும் ஆர்எஸ்எஸ்ஸை ஒரு புற்றுநோய் என்று உணரவேண்டும். தமிழகத்திலிருந்து அந்தப் புற்றுநோயை சுவடே இல்லாமல் அகற்ற ஓரணியில் திரளவேண்டும். ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் பிரிவான பா.ஜ.க.வோ ஈழத்தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறது. இந்த தேசம் இந்த இரட்டைவேடக்காரர்களின் முகத்திரையை விரைவில் கிழிக்கும்.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிவது அப்பாவிகளை அழித்தொழித்த அமெரிக்கா என்றபோதும், இத்தீர்மானத்தின் மூலமாவது இனப்படுகொலைகார இலங்கையைத் தண்டிக்க வேண்டும் என மனிதநேயமுள்ள அனைத்து அமைப்புகளும் இத்தீர்மானத்தை ஆதரித்து, இலங்கைக்கு கண்டனம் தெரிவித்தன.
ஆனால், சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதமான காந்திப் படுகொலையை அரங்கேற்றிய ஆர்எஸ்எஸ், இனப்படுகொலை செய்த இலங்கையை வலிமையாக ஆதரித்துள்ளது. இலங்கையை எதிர்க்கக்கூடாது என வரிந்து கட்டிக் களமிறங்கி, நஞ்சு தொனிக்கும் வார்த்தைகளால் கொஞ்சமும் நெஞ்சிரக்கமின்றி அறிக்கை விடுகிறது. ஆர்.எஸ்.எஸ் ஸின் அதிகாரப்பூர்வ இதழான ஆர்கனைசரில், இலங்கைக்கு பகிரங்க ஆதரவளித்து எழுதப்பட்டத் தலையங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
‘‘இலங்கைக்கு எதிரானத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக்கூடாது. இந்தத் தீர்மானத்தின் மூலம் இலங்கையின் மீது மேற்கத்திய ஐரோப்பிய நாடுகள் ஆதிக்கம் செலுத்த முயல்கின்றன. ஒரு ஜனநாயக அரசின் மீது அமெரிக்காவோ ஐரோப்பிய நாடுகளோ ஆதிக்கம் செலுத்த முயல்வதை இந்தியா அனுமதிக்கக்கூடாது.என்று ஆர்.எஸ்.எஸ் ஏடான ஆர்கனைசர் காட்டமாகத் தலையங்கம் எழுதியுள்ளது. இதன்மூலம் ஆர்.எஸ்.எஸ் ஸின் தமிழின எதிர்ப்பும், இனப்படுகொலைத் திட்டங்களும் அம்பலப்பட்டுள்ளன. ஆர்.எஸ்.எஸ் ஸின் தமிழர் விரோதப் போக்கை இன வரலாற்று ரதியாகவும் பார்க்கலாம்.
ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இதனால் இந்த விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
இதில் நடுநிலையான நிலைப்பாட்டை எடுக்காமல் தீர்மானத்தை துணிச்சலாக எதிர்க்க வேண்டும். இலங்கையில் விடுதலைப்புலிகள் எவ்வளவோ அராஜகம் செய்தார்கள். புலிகள் செய்த தவறுகள் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் குறிப்பிடப்படவில்லை’’
இலங்கையை ஆர்.எஸ்.எஸ் ஆதரிப்பதற்கான காரணங்கள்
காரணம் 1:
இராமாயணத்தை உண்மையாக நடந்த கதையாக ஆர்எஸ்எஸ் நம்புகிறது. இராமன்தான் ஆர்எஸ்எஸ்ஸுக்கு மூலதனம். இராமன் போரிட்டது இராவணனோடு. இராவணன் ஆண்ட தேசம் இலங்கை. இராவணன் ஒரு தமிழ் மன்னன். ஈழத் தமிழர்கள் இராவணனின் வழித்தோன்றல்களே. எனவே இராவணனின் வாரிசுகள் அழிக்கப்பட்டது நியாயமே என்று கருதுகிறது இராமபக்த ஆர்எஸ்எஸ்.
காரணம் 2:
ஒருநாட்டில் வசிக்கும் சிறுபான்மையினர் பெரும்பான்மையினருக்கு இணையான உரிமைகளோடு வாழக்கூடாது. பெரும்பான்மையினரின் அடிவருடி, அவர்களின் தயவைப் பெற்றுத்தான் சிறுபான்மையினர் வாழவேண்டும். சிறுபான்மையினர் தங்களின் உரிமைகளைக் கேட்டுப் போராடக்கூடாது என்பதே ஆர்எஸ்எஸ்ஸின் கோட்பாடு. சிறுபான்மையினர் அறவழியில் உரிமைப் போராட்டங்களில் இறங்கினால் ஆயுதமுனையில் அவர்களை அழித்தொழிக்க வேண்டும் என்பதும் ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கையாகும். தமிழர்களை இனப்படுகொலை செய்துள்ள இலங்கை ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கைக்குச் செயல்வடிவம் தந்துள்ளது.
காரணம் 3:
இந்தியாவிலும் பலமுறை இனப்படுகொலைகளை ஆர்எஸ்எஸ் பரிவாரம் நடத்தியுள்ளது. ஸ்டீவ் வில்கின்சன் என்பவர் இந்தியாவில் மதக்கலவரங்களில் நடந்துள்ள மரணங்களைக் குறித்து ஆய்வு செய்துள்ளார். சுதந்திரம் அடைந்த இந்தியாவில் நடந்த மதக்கலவரங்களில் இதுவரை 40 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் முஸ்லிம்கள் என்கிறது இவரது ஆய்வு.
பாகல்பூர், மீரட், பீவண்டி, கான்பூர், முராதாபாத், டெல்லி, அலிகர், சூரத், கோவை, குஜராத், பட்கல் என நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களைப் படுகொலை செய்துள்ள ஆர்எஸ்எஸ் இன்னும் பல்லாயிரம் பேரைப் படுகொலை செய்யும் பயங்கரத் திட்டங்களைப் பயிற்சி செய்து வருகிறது.
இந்நிலையில் ஐ.நா.வில் உலக நாடுகளால் இலங்கை கண்டிக்கப்பட்டால் அது ஆர்எஸ்எஸ்ஸின் கொலை நோக்குத் திட்டங்களுக்கு குறுக்கீடாகக்கூடும் என்று கருதுகிறது.
இது தமிழர்கள் இந்துத்துவ சக்திகளை அடையாளம் கண்டுகொள்ள வேண்டிய தருணம். தமிழகத்தில் வளரத்துடிக்கும் ஆர்எஸ்எஸ்ஸை ஒரு புற்றுநோய் என்று உணரவேண்டும். தமிழகத்திலிருந்து அந்தப் புற்றுநோயை சுவடே இல்லாமல் அகற்ற ஓரணியில் திரளவேண்டும். ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் பிரிவான பா.ஜ.க.வோ ஈழத்தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறது. இந்த தேசம் இந்த இரட்டைவேடக்காரர்களின் முகத்திரையை விரைவில் கிழிக்கும்.
--ஹாஜாகனி


1806ல்
எற்பட்ட எழுச்சியும், அதில் முஸ்லிம்களின் பங்களிப்பும் பரவலாக இன்று
அறியபட்டாலும், 1839ல் வேலூர் முஸ்லிம்கள் மீண்டும் ஓரு எழுச்சிக்கு
தீவிரமாக திட்டமிட்டு அது தோற்றுப்போன வரலாறு பலருக்கு தெரியாத செய்தியாக
இருந்து கொண்டு இருக்கிறது. 1806க்கு பிறகு பல இஸ்லாமிய மௌல்விகளும்,
பக்கீர்களும் வட இந்தியாவில் இருந்து வேலூருக்கு குடிபெயர்ந்தனர். இந்த
மௌல்விகளும், பக்கீர்களும் வேலூர் பகுதியில் ஆங்கில விரோத தீயை பற்ற வைத்து
கொண்டிருந்தனர். அந்த கால கட்டங்களில் ஜøம்மா பயான்கள் ஆங்கில அரசுக்கு
எதிரான கொந்தளிப்புகளை ஊருவாக்க கூடியதாக இருந்தன.
1857
புரட்சியின் போது சென்னையில் ஆற்காடு நவாப் அவர்களின் தலைமையிடமாக
கருதப்பட்ட திருவல்¬லிக்கேணியில் புரட்சியின் தாக்கம் தென்பட வாய்ப்புகள்
இருந்ததாக கருதிய ஆங்கிலேயர்கள், இந்த பகுதியை இராணுவ கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வந்தனர். குலாம் கௌஸ் மற்றும் ஷேக்மன்னு என்கின்ற இரண்டு நபர்கள்
சென்னை மாகாணத்தை சேர்ந்தவர்கள் புரட்சியில் பங்கேற்க வேண்டும் என்கின்ற
அவர்களின் எண்ணத்தை வழியுறுத்தி போஸ்டர்கள் ஓட்டிய காரணத்தால் கைது
செய்யப்பட்டனர். அன்றைய வடஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த சையத் குசா
முஹம்மத் ஆவ்குர்ஹா ஹøசைன் என்பவர் வேலூர் மற்றும் புங்கனூர் பகுதிகளில்
1857 புரட்சிக்கு ஆட்களை திரட்டிய காரணத்தால் மார்ச் 1857ல் கைது
செய்யப்பட்டார் ஆகஸ்டு 1, 1857ல் சேலம், புட்நூல் தெருவில் ஆய்யம் பெருமாள்
சாரி என்பவரின் வீட்டுக்கு முன் ஆங்கில ஆட்சி அன்றைய தினம் வீழ்ந்துவிடும்
என்ற செய்தியை எதிர்பார்த்து பலர் கூடியிருந்தனர். அந்த கூட்டத்தில்
ஓருவராக இருந்த ஹைதர் என்பவர் இவ்வளவு நேரம் சென்னையில் இந்திய தேசிய கொடி
எற்றப்பட்டிருக்கும் என்று தெரிவித்தது அரசு ஆவணங்களில் பதிவு
செய்யப்பட்டுள்ளது. 1857 புரட்சியின்போது செங்கல்பட்டில் அருணகிரி மற்றும்
கிருஷ்ணா என்கின்ற இருவர் இந்த பகுதியில் மக்களை திரட்டி கலகம் விளைவித்து
கொண்டிருந்தனர். செங்கற்பட்டில் எற்பட்டிருக்க கூடிய இந்த எழுச்சியை
ஓருங்கிணைக்க சென்னையில் இருந்து சுல்தான் பக்ஷ் என்பவர் செங்கல்பட்டு
சென்றார். இந்த தகவல்களையும் சுல்தான் பக்ஷின் நடவடிக்கைகள் சம்மந்தமாகவும்
செங்கற்பட்டு மாஜிஸ்ரேட் சென்னை மாகாண அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழக முஸ்லிம் 1857 புரட்சிக்கு முன்னரும், புரட்சியின் நேரத்திலும்
மட்டும் இல்லாமல் புரட்சிக்கு பின்னரும் தொடர்ந்து ஆங்கில எதிர்ப்புணர்வை
பல இன்னல்களுக்கிடையே கடைப்பிடித்துதான் பரப்பியும் வந்தனர்.