Thursday, April 3, 2008
பள்ளிவாசலில் நாங்கள்தான் குண்டு வைத்தோம்! மீண்டும் வெடிக்கும்!!சங்பரிவார் மிரட்டல்!இந்திய எல்லையில் இமயமலைபரப்பில் இருக்கும் நேபாளம் மன்னர்ஆட்சியின் அதிகார இறக்கைகள்வெட்டப்பட்டு ஜனநாயகப் பாதைக்குதிரும்பி வருகிறது. இந்நிலையில்,நேபாளத்தை மதவாத நாடாக மாற்றவேண்டும் என ஒரு கும்பல் தீவிரமாகதிட்டமிட்டுவருகிறது. நேபாள மக்களின்ஒற்றுமைக்கு வேட்டுவைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டது. நேபாளபாதுகாப்புபடை என்ற பெயரில் செயல்பட்டு வரும் மதவாத அமைப்பு இது.இது நேபாளத்தை சங்பரிவார் நாடாகமாற்ற தொடர்ந்து கலவரம் விளைவித்துவருகிறது. இந்நிலையில், நேபாளத்தலைநகர் காட்மாண்டுக்கு தென்கிழக்கில்200 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளபிராட்நகரில் உள்ள சின்ன பள்ளிவாசலில் குண்டுவெடித்தது. இதில் பள்ளிவாசலில் தொழுகைக்காக வந்திருந்தஇருவர் கொல்லப்பட்டனர். 60க்கும்மேற்பட்ட முஸ்லிம்கள் மாலை நேரத்தொழுகை யில் ஈடுபட்டிருக்கும் போதுமூன்று குண்டுகள் வெடித்துள்ளன. இதுமார்ச் 29ஆம் தேதி நடந்தது.குண்டுகள் வெடித்தவுடனே ''தாங்கள்தான் இந்த தாக்குதலை நடத்தினோம்''நேபாளத்தை ஹிந்துத்துவா நாடாகமாற்றும் வரை இது போன்ற தாக்குதல்கள்தொடரும் என்றும் தேசிய பாதுகாப்புபடை என்ற பெயரில் செயல்படும்கோட்சே கும்பல் தெரிவித்துள்ளது.நேபாளம் 2006 ஆம் ஆண்டுவரைஉலகின் ஒரே ஹிந்து நாடாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அரசியல் சாசனசட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுநேபாளம் மதசார்பற்ற நாடாகஅறிவிக்கப்பட்டுள்ளது. சி.ஐ.ஏ.உலக உண்மைகள் என்ற நூலில்குறிப்பிடப்பட்டு உள்ளதைப் போல்இரண்டு கோடியே 80 லட்சம்மக்கள் வாழும் நேபாளத்தில் 80சதவீதத்தினர் ஹிந்துக்களாவர்.இந்நிலையில், பள்ளிவாசலின் மீதுநிகழ்த்தப்பட்ட தாக்குதல் எதிர்வரும்ஏப்ரல் 10ஆம் தேதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலைசீர்குலைக்கும் சதி என்றும் அதற்குதாங்கள் ஒருபோதும் அடிபணியமாட்டோம் என்றும் நேபாளப் பிரதமர்கிரிஜா பிரசாத் கொய்ராலா தெரிவித்திருக்கிறார்.நேபாளத்தில் முகாமிட்டிருக்கும்ஐக்கிய நாடுகள் சபையின் பார்வையாளர்குழு பள்ளிவாசல் மீதான குண்டு வெடிப்புதாக்குதலுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளது. ஐ.நா.பார்வையாளர் குழுவின்தலைவர் தனது கடும் கண்டனத்தைதெரிவித்துள்ளார். இது மதவாத விஷமிகளின் திட்டமிட்ட தாக்குதல் தான்சந்தேகமே இல்லை என்றும் ஆவேசத்துடன் குறிப்பிட்டிருக்கிறார்.பள்ளிவாசலில் வெடிகுண்டுதாக்குதல்நிகழ்த்தப்பட்ட சிறிது நேரத்தில் முஸ்ம்கள்வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். எங்கள் போராட்டம்கலவரமாக வெடிக்காமல் தவிர்த்துக்கொள்ள எங்களால் முடியும் எனதெரிவித்த முஸ்லிம் இத்திஹாதுல்அமைப்பின் தலைவரான ஜாஃபர்அஹ்மத் ஜமாலி முஸ்லிம்களுக்குநாடாளுமன்றத்திலும், ராணுவத்திலும்அதிக அளவு இடம் ஒதுக்க வேண்டும்என்றும் கூறியிருக்கிறார்.காந்தியைக் கொன்ற கோட்சேமதவெறி கும்பலின் கொடிய கரங்கள்இந்தியாவை தாண்டியும் விரியத்தொடங்கியிருப்பது உலக அமைதிக்குஏற்பட்டிருக்கும் ஆபத்தாகவே முடியும்என அரசியல் பார்வையாளர்கள் கருத்துதெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)
