Friday, June 27, 2008



மும்பை குண்டுவெடிப்பு: சங்பரிவார் பயங்கரவாதியின் வீட்டில் பயங்கர வெடிகுண்டுகள், ஆயுதங்கள் சிக்கின!!
-அபூசாலிஹ்
மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் நிகழ்ந்த தியேட்டர் குண்டுவெடிப்பு சதி தொடர்பாக கைது செய்யப்பட்ட தீவிரவாத தடுப்பு காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
கடந்த மாதம் மகாராஷ்டிர மாநிலம் வாஷி பகுதியில் விஷ்னுதாஸ் பவே ஆடிட்டோரியத்திலும், தானேயில் உள்ள கத்காரி ரங்கயாதன் ஆடிட்டோரியத் திலும் குண்டுகள் வெடித்தன. இதில் பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்த வெடிகுண்டு சம்பவம் தொடர் பாக உடனடியாக செய்தி வெளியிட்ட சில 'முந்திரிக் கொட்டை' பத்திரிகைகள் வழக்கம்போல் முஸ்லிம்களை வேத னைப்படுத்தும் விதமாகவும், நாட்டின் ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் விதமாகவும் இவர்களே சிறப்பு புலனாய்வு செய்து கண்டுபிடித்ததைப் போன்றும் விஷமச் செய்திகளை வெளியிட்டன. காவல்துறையினரும் குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுவதைப் போன்று அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் மீதே சந்தேகக் கண் கொண்டு பார்த்ததாக தகவல்கள் பரவின.
பின்னர், மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் படையினரின் தீவிர புலனாய்வுக் குப் பின், நாட்டின் பழம்பயங்கரவாத இயக்கமான சங்பரிவார் இந்த குண்டு வெடிப்பின் பின்னணியில் இருந்து செயல்பட்ட தகவல்கள் அம்பலமாயின.
இதனைத் தொடர்ந்து நான்கு சங்பரிவார் பயங்கரவாதிகள் தீவிரவாத தடுப்புப் படையினரால் கைது செய்யப் பட்டனர்.
1. மங்கேஷ் தினகர் நிகாம்2. ரமேஷ் ஹனுமந்த் காத்கரி3. சந்தோஷ் ஆங்ரே4. விக்ரம் பவேஎன்ற நால்வரும் கைது செய்யப் பட்டனர்.
முதலில் இவர்கள் பஜ்ரங்தள் பயங்கரவாதக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் கூறினர். ஆனால் தற்போது ஜனஜாகுருதி சமிதி மற்றும் சந்தன் சந்த்ஸா என்ற தீவிர இந்துத்துவ இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள் என பிடிபட்ட பயங்கரவாதிகள் வாக்கு மூலம் அளித்தனர்.
பொதுவாகவே பிடிபட்ட உடன் தங்களது தாய் இயக்கத்தை காட்டிக் கொடுக்காமல் ஏதாவது ஒரு பெயரைச் சொல்வதே இவர்களது வழக்கம். இது கோட்சே காலத்திலிருந்தே தொன்று தொட்டு இருந்துவரும் வழக்கம். அந்த பாணியையே இப்போதும் சங் பயங்கர வாதிகள் பயன்படுத்தியுள்ளனர்.
குண்டுவெடிப்புச் சதியில் ஈடுபட்ட சங்பரிவார் பயங்கரவாதிகளை தீவிரமாக விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல் கள் வெளிவந்ததைத் தொடர்ந்து பயங்கரவாத குற்றவாளிகளின் வீட்டில் தீவிரவாத தடுப்புப் படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
பயங்கரவாதிகள் வீடுகள் அமைந் திருக்கும் ராய்காட் மாவட்டம் வர்சாகிரா மம் மற்றும் பென் கிராமத்தில் தீவிரவாத தடுப்புப் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சிக்கியவை:
1. அம்மோனியம் நைட்ரேட் பவுடர் (பாக்கெட் பாக்கெட்டாக)2. 20 டெட்டனேட்டர்கள்3. ஏராளமான ஜெலட்டின் குச்சிகள்4. டைமர்கள்5. வோல்டேஜ் மீட்டர்கள்6. இரண்டு ரேடியோ சர்க்யூட்கள்7. ரிமோட் கண்ட்ரோல்கள்8. ரிவால்வர்கள்9. 92 தோட்டாக்கள்
சங்பரிவார் பயங்கரவாதிகள் முழுமை யாக அம்பலப்படுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு.தேசத் துரோகிகள் தண்டிக்கப்படுவார்களா

தற்கொலைப்படையை உருவாக்கும் சிவசேனா!
கொந்தளிக்கும் இந்தியா!!
-சத்தியவேந்தன்
பால்தாக்கரே என்ற பழம்பெரும் (ச்சாளி) பயங்கரவாதியின் தேசத்துரோக ஒற்றுமை குலைக்கும், வெறியூட்டும் செயல்கள் சமீபத்தில் எல்லை மீறியுள்ளது.
ஹிந்துத்துவா தற்கொலைப்படை அமைக்க வேண்டும் என அபாயகரமான கருத்தை வெறியுடன் வெளியிட்டிருக்கிறார். அதுமட்டுமின்றி நவி மும்பையிலும், தானேயிலும் குண்டுவைத்த சங் பயங்கரவாதி களின் செயல்கள் நெஞ்சைத் தொடுவதாக அமைந்துள்ளது என்றும் விவஸ்தையில்லாமல் உளறியுள்ளார்.
குட்டிப் பாகிஸ்தானாக ஏழை வங்காள மக்கள் வாழும் பகுதிகளை வர்ணிக்கும் பால்தாக்கரே அங்கெல்லாம் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த வேண்டும் என்று இரக்கமே இல்லாமல் பிதற்றியுள்ளார்.
பால்தாக்கரேயின் வெறித்தனமான இந்தக் கருத்தை சிவசேனாவின் அதி காரப்பூர்வ இதழான சாம்னாவில் தலையங்கமாக எழுதியிருக்கிறார்.
இவரது இந்த வெறிக்கருத்து வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து நாடெங்கும் ஆத்திர அலைகள் பற்றிப் பரவுகிறது.
நடுநிலையாளர்களும், பல்வேறு அமைப்புகளும் 'சிவசேனா தற்கொலைப் படைகள்' விவகாரம் குறித்து கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தனது கண்டனத்தை அழுத்த மாகப் பதிவு செய்துள்ளது. பால்தாக்க ரேயை கைது செய்யாவிட் டால் மக்கள் சக்தியைத் திரட்டி போராடப் போவதா கவும் அது எச்சரித்துள்ளது.
பால்தாக்கரே என்ற பயங்கரவாதி யின் வெறித்தூண்டுதல் இது முதல் முறையல்ல.
35 ஆண்டுகளுக்கு முன்பே ஆயிரக் கணக்கான தமிழர்களை மும்பையிலிருந்து விரட்ட காரணமாக இருந்தவர். தமிழர்களின் வாழ்வாதாரங்களை அழித்த பாசிச பயங்கரவாதி பால்தாக் கரே தண்டிக்கப்படவில்லை.
1993ல் மும்பையில் இவரது தூண்டு தலால் நிகழ்த்தப்பட்ட வன்முறை படுகொலை வெறியாட்டத்தில் 2 ஆயிரம் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சூறையாடப்பட்டன. மும்பை கலவரம் குறித்து விசாரணை செய்த நீதியரசர் ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான விசாரணைக் கமிஷன் மும்பை படுகொலைகளின் பின்னணியில் பால்தாக்கரேயின் சதிக்கரங்கள் இருந்ததாக ஆதாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.
பைத்தியம் பிடித்த குரங்குகள் குடித்த கதை போல பிதற்றித்திரியும் இவரை அடக்கி வைக்காவிட்டால் நாட்டில் மேலும் பயங்கரவாத சம்பவங்கள் நடைபெற அதுவே முழுமுதற் காரணமாகிவிடும்.
மும்பையில் இதுவரை நிகழ்ந்த குண்டுவெடிப்புகளுக்கும் தற்கொலைப்படைகளை உருவாக்குவேனென கூறும் வெறியனுக்கும் தொடர்பு இருக்கிறதா? என தீவிரமாக விசாரிக்க வேண்டும்.
சுளுக்கெடுக்கும் வேளை இது. தாமதித்தால் சூழ்ச்சிகள் சூழத் தொடங்கிவிடும். பயங்கரவாதிகளை சுளுக்கெடுப்பதில் சுணக்கம் காட்டக்கூடாது. மத்திய அரசே உஷார்

Tuesday, June 24, 2008


மும்பை குண்டு வெடிப்பு பின்னணியில் பஜ்ரங்தள்!மகாராஷ்ட்ர மாநிலம் தானே மாவட்டத்தில் நவி மும்பைப் பகுதியில் கலையரங்கில் நிகழ்ந்த குண்டு வெடிப்புக்கு சங் பரிவார் இயக்கத் தின் துணை இயக் கங்களில் ஒன்றான பஜ்ரங்தள் என்ற பயங்கரவாத இயக் கத்திற்கும் தொடர்பு இருப்பதாக மகா ராஷ்ட்ரா மாநில உளவுத்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது.இந்நாட்டின் பழம்பெரும் பயங்கரவாத இயக்கமான சங்பரிவார் சக்திகளுக்கும் நாட்டில் நடைபெற்ற பல்வேறு சதிச் செயல் களுக்கும் தொடர்பு இருப்பதாக கடந்த அறுபதாண்டு காலமாகவே குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் நவி மும்பையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பிலும் மேற்படியாளர்களின் கை வரிசை இருப்பதாக மகராஷ்ட்ரா உளவுத்துறை போலிசார் கூறியுள்ளனர்.Aamhi Pachpute என்ற மராத்தி நாடகம் சஞ்சய் பவார் என்பவரால் இயக்கப்பட்டது. இந்த நாடகம் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நவி மும்பையில் காத்கரி ரங்யா தன் கலையரங்கில் திரையிடப்பட்ட போது கடும் வன் முறையில் இறங் கிய பஜ்ரங்தளத் தினர் அந்த நாட கத்தை தடுத்து நிறுத்தினர். அதே கலையரங்கில் தற்போது குண்டு வெடித்துள்ளது.இந்த குண்டு வெடிப்புகளின் பிண்ணயில் பஜ் ரங்தளம் இருப்ப தாக 'தானே' காவல் துறை இணை ஆணையர் மதுகர் ஷிண்டே சந்தேகம் தெரிவித்திருக்கிறார்.நான்டெட், தென்காசி போன்ற இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு களில் ஈடுபட்ட சங்கும்பலே இந்த சதிச் செயலையும் இழைத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்ட நிலையில் நவி மும்பை குண்டு வெடிப்புகளில் பஜ்ரங்தள் பயங்கரவாத அமைப்பு பின்னணியில் உள்ளதாக கூறப்படும் தகவல்கள் அலட்சியப்படுத்தக் கூடியவை அல்ல
Posted by mannady at 2:29 PM 0 comments

abusalih news
மன்னிப்பு கேட்ட மகாராஷ்டிரா சி.ஐ.டி.போலிஸ் மகாராஷ்டிரா மாநில போலிஸ் ஹுவாஜா யூனுஸ் என்ற இளைஞரின் மீது வழக்கு விசாரணையை மேற்கொண்டதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டது. மேலும் தங்களால் இந்த வழக்கை விசாரிக்க இயலாது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் காவல்துறை உயர் அதிகாரிகள் அரசியல் சக்தி மிகுந்த இடங்களில் செல்வாக்குமிகுந்தவர்கள். எனவே ஹுவாஜா யூனுஸ் வழக்கில் தங்களால் விசாரணை செய்ய முடியாது. சுயேச்சையான ஒரு விசாரணைக் குழுவினரே இதனை விசாரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.யார் அந்த ஹுவாஜா யூனுஸ்? 2002 ஆம் ஆண்டு கட்கோபாரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் இருவர் இறந்தனர். 50 பேர் காயமடைந்தனர். அந்த குண்டு வெடிப்பு தொடர்பாக வளைகுடாவில் வாழ்ந்து வந்த கணினி மென்பொருள் பொறியாளரான ஹுவாஜா யூனுஸை போலிஸ் கைது செய்தது. காவல் நிலைய லாக்கப் அறையில் காவல்துறையினரின் கடும் சித்திரவதைகளால் ஹுவாஜா யூனுஸ் ஜனவரி 2003 ஆம் ஆண்டு மரணமடைந்தார். இந்நிலையில் காட்கோபார் வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்ட டாக்டர்.அப்துல் மதீன் உட்பட இதனைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட காவல் துறையினர் மீதும் வழக்கு தொடர மகாராஷ்ட்ரா மாநில சி.ஐ.டி. போலிஸ் மகாராஷ்ட்ரா மாநில அரசிடம் அனுமதி கோரியது. ஆனால் மகாராஷ்ட்ரா மாநில அரசு நான்கு காவல்துறையினர் மீது மட்டுமே வழக்குத் தொடர அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து மகாராஷ்ட்ரா மாநில சி.ஐ.டி. காவல்துறை சி.பி.ஐ.யிடம் இவ்வழக்கை ஒப்படைக்கு மாறு கேட்டுக்கொண்டுள்ளது. இது மகாராஷ்டிரா மாநில சி.ஐ.டி.காவல்துறையின் வெளிப்படையான தன்மையையும் அதே பரிதாபகரமான தோல்வியையும் மகாராஷ்டிரா அரசின் உள்நோக்கத்தையும் காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். எட்டு பேரை குற்றமற்றவர்கள் என மும்பை பொடா நீதிமன்றம் விடுதலை செய்தது. போலிஸ் காவலில் இறந்த ஹுவாஜா யூனுஸின் மர்ம மரணம் குறித்த சந்தேகம் வலுப்பெற்றது. ஹுவாஜா யூனுஸை சித்திரவதை செய்து படுகொலை செய்ததாக பதினான்கு காவல்துறை உயர் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன
Posted by mannady at 2:26 PM 0 comments

abusalih news
இந்தோனேஷியாவில் அனாதைகளாக்கும் பெற்றோர்கள்! இந்தோனேஷியாவில் தொடரும் உணவுப் பொருட்கள் விலையேற்றத்தால் வறுமையில் சிக்கிய இந்தோனேஷிய பெற்றோர் தங்களின் குழந்தைகளை அநாதை இல்லங்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். இத்தகவலை ஜகார்த்தா போஸ்ட் வெளியிட்டுள்ளது.சுனாமி என்ற ஆழிப்பேரலையில் ஏராளமான குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்தனர். அப்போது ஏராளமான அனாதை இல்லங்கள் நிறுவப் பட்டன. சமூகநலத் துறையின் சார்பிலும் ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் யூனிசெஃபின் அனாதை நிலையங்களும் இங்கு ஏராளமாக உள்ளன.5 லட்சம் குழந்தைகளைக் கொண்ட அனாதை நிலையங்களில் வெறும் 6 சதவீத குழந்தைகளே உண்மையில் அநாதைகள் என்றும் மற்றவர்கள் பெற்றோர்களால் அனுப்பப்பட்ட குழந்தைகள் என்றும் தெரிய வந்தது.உணவுப்பொருள் விலையேற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தோனேஷியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
Posted by mannady at 2:25 PM 0 comments

abusalih newsagainst anti dalit atricities
உயர்சாதியினரால் கொல்லப்பட்ட தலித் மூதாட்டி தலித் சமூகத்தைச் சேர்ந்த வயதான பெண்மணி ஒருவர் ஆதிக்கசாதியைச் சேர்ந்த மூவரால் உயிரோடு எரிக்கப் பட்ட சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது.ஆதிக்கசாதியினர் பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் எடுக்கச் சென்ற போது இந்த கொடிய சம்பவம் நடைபெற்றுள்ளது. ஹீராலால், தினேஷ் மற்றும் ராஜேந்திரா என்ற மூவரும் பீரம்பாய் என்ற 55 வயது பெண்மணியை நெருப்பி லிட்டு கொளுத்தினர்.80 சதவீதம் அந்தப் பெண்மணியின் உடல் எரிந்து விட்டதாக கன்ததா பகுதி யின் காவல்துறை அதிகாரி அபிஷேக் ரஞ்சன் தெரிவித்தார்.பீரம்பாய் உயிரோடு கொளுத்தப்பட்ட செய்தி கன்ததா பகுதி முழுவதும் பரவி யது. பெரும் போராட்டத்திற்கு பிறகே படுகொலையாளர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தீயிலிடப்பட்ட பெண்மணியின் கணவரான ஹுகும் சந்த் தெரிவித்தார்
Posted by mannady at 2:23 PM 0 comments

abusalih news about food crisis
விலைவாசி உயர்வு: பாதிப்பில் 10 கோடி பேர்! உலகத்தில் உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் 10 கோடி மக்கள் நிரந்தர பாதிப்பில் தள்ளப்படும் அபாயத்தில் இருப்பதாக உலகத் தலைவர்கள் அபாய அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இத்தாலி தலைநகர் ரோமாபுரியில் உச்சி மாநாட்டை நடத்தியது. இத்தாலிய அதிபர் ஜியோர்ஜியா நேப்லிடானோவின் துவக்க உரையைத் தொடர்ந்து உலகத் தலைவர்கள் உரையாற்றினர். கடந்த இரண்டு ஆண்டுகளில் உணவுப் பொருட்களின் விலை இரண்டு மடங்குகளாக உயர்ந்துள்ளது. அரிசி, சோளம், கோதுமையின் விலை எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தை அடைந்துள்ளது. சில உணவுப் பொருட்களின் விலை கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. 44 நாடுகளின் தலைவர்கள் ரோம் உச்சி மாநாட்டில் பங்கேற்றனர்.ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மத் நிஜாத் முதன்முறையாக ஐரோப்பாவில் கலந்துகொண்ட பொது நிகழ்ச்சியாக இது அமைந்தது. உலகில் உணவுப் பொருட்க ளின் விலையேற்றத்திற்கு மேற்கு நாடுகளே முக்கியக் காரணம்; குறிப்பாக அமெரிக்கா இதற்கு முக்கியப் பொறுப்பேற்க வேண்டி யதிருக்கும் என்று அஹ்மத் நிஜாத் தெரிவித்தார்
Posted by mannady at 2:21 PM 0 comments

abusalih news about food crisis
விலைவாசி உயர்வு: பாதிப்பில் 10 கோடி பேர்! உலகத்தில் உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் 10 கோடி மக்கள் நிரந்தர பாதிப்பில் தள்ளப்படும் அபாயத்தில் இருப்பதாக உலகத் தலைவர்கள் அபாய அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இத்தாலி தலைநகர் ரோமாபுரியில் உச்சி மாநாட்டை நடத்தியது. இத்தாலிய அதிபர் ஜியோர்ஜியா நேப்லிடானோவின் துவக்க உரையைத் தொடர்ந்து உலகத் தலைவர்கள் உரையாற்றினர். கடந்த இரண்டு ஆண்டுகளில் உணவுப் பொருட்களின் விலை இரண்டு மடங்குகளாக உயர்ந்துள்ளது. அரிசி, சோளம், கோதுமையின் விலை எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தை அடைந்துள்ளது. சில உணவுப் பொருட்களின் விலை கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. 44 நாடுகளின் தலைவர்கள் ரோம் உச்சி மாநாட்டில் பங்கேற்றனர்.ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மத் நிஜாத் முதன்முறையாக ஐரோப்பாவில் கலந்துகொண்ட பொது நிகழ்ச்சியாக இது அமைந்தது. உலகில் உணவுப் பொருட்க ளின் விலையேற்றத்திற்கு மேற்கு நாடுகளே முக்கியக் காரணம்; குறிப்பாக அமெரிக்கா இதற்கு முக்கியப் பொறுப்பேற்க வேண்டி யதிருக்கும் என்று அஹ்மத் நிஜாத் தெரிவித்தார்
Posted by mannady at 2:21 PM 0 comments

abusalih article about social justice
மத்திய அமைச்சரவையில் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுகிறதா?மத்திய அமைச்சரவையில் இடஒதுக்கீடு முறையாக அமுல்படுத்தப்படுகிறதா? என்பதைக் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக விபரங்கள் அறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.34 காபினெட் அமைச்சர்கள், 22 ராஜாங்க அமைச்சர்கள் தொடர்பான துறைகளின் மீது நடத்தப்பட்ட ஆய்வில் பொதுப்பிரிவில் 203 அதிகாரிகளையும், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வெறும் 23 பேர் மட்டுமே அதிகாரிகளாக அமர்த்தப்பட்டுள்ளனர்.தேவ் ஆசிஷ் பட்டாச்சார்யா என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத் தின்படி இந்தக் கேள்விகளை எழுப்பினார்.மண்டல் பரிந்துரைகளுக்குப்பின் தேசிய அளவில் ஏற்பட்ட சமூக நீதி எழுச்சிக்குப்பின் கூட குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை என்பது அதிர வைக்கும் தகவலாகும்

news from abusalih

முஸ்லிம் பெண்களிடம் மன்னிப்புக் கேட்ட ஒபாமா
அமெரிக்க அதிபர் தேர்தலில் கறுப்பின சமூகத்தைச் சேர்ந்த பராக் ஒபாமா முன்னணியில் நிற்கிறார். தடைகள் பல தகர்ந்து ஒரு கறுப்பின சமூகத்தைச் சேர்ந்தவர் அமெரிக்க அதிபராக வரும் வாய்ப்பு இருப்பதாக தகவல் கள் வரத் தொடங்கி யதுமே உலகெங்கும் குறிப்பாக கிழக்கு உலகத்தில் உற்சாகம் ஊற்றெடுக்க கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
அரசியல் மற்றும் பலம் நிறைந்த யூத லாபியை சமாளிக்க அந்தக் கூட்டத்துக்கு ஆதரவாக அவர் பேசத் தொடங்கினார். ஒருங்கிணைந்த ஜெருஸ்ஸலம் (மஸ்ஜிதே அக்ஸா அமைந்த பகுதி) இஸ்ரேலின் தலைநகராக மாற வேண்டும் என்ற தனது கருத்தை வெளியிட்டார்.
ஒருங்கிணைந்த ஜெருஸ்ஸலமை இஸ்ரேலின் தலைநகராக மாற்றமுடியாது என்று முடிவு கட்டியே யூதர்கள் தங்களது தலைநகரமாக டெல்அவிவை அறிவித்த திலிருந்தே பாலஸ்தீனர்கள் உயிரே போனாலும் ஜெருஸ்ஸலமை முழுமையாக விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்று தெரிந்தே யூதர்களே ஓய்ந்திருந்த பிரச்சினையை ஒபாமா கிளப்பினார்.
ஆனால் யாரும் இதை பொருட் படுத்தவில்லை. பாவம் ஒபாமா! ஓட்டுக் காக ஏதேதோ பேசுகிறார் என்றே கருதினர். அதனால் இதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ஒபாமாவை ஆதரிக்கத் தொடங்கினர்.
குடியரசுக் கட்சியின் வேட்பாளரான ஜான் மெக்கெய்னுக்கு தனது பகிரங்க ஆதவை இப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் அறிவித்த பிறகு மெக்கெய்னுக்கு இருந்துவந்த ஆதரவு மேலும் குறையத் தொடங்கியது. எல்லாமாகச் சேர்ந்து ஒபாமா வுக்கு வலு சேர்த்தது.
இந்நிலையில் ஹிஜாப் அணிந்த இரண்டு இஸ்லா மிய இளம் பெண் களிடம் பராக் ஒபாமா பகிரங்க மன்னிப்புக் கேட்டுக் கொண்ட தகவல் வெளியாகி உள்ளது.
தேர்தல் பிரச் சார பேரணிக்காக ஒபாமா தயாராகும் வேளையில் தொலைக்காட்சி காமெராக் கள் ஒபாமாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த நேரம் ஒபாமா எழுந்து நிற்க, பின்வரிசையில் அதிக மாகப் பெண்கள் அமரவைக்கப்பட்டிருந் தார்கள். (தாய்குலத்தின் ஆதரவைக் கவரும் முயற்சியாக இது கருதப்பட்டது) அந்நேரத்தில் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கும் விதமாக ஒரு காட்சி அரங்கேறியது.
அரங்கத்தில் அமர்ந்திருந்த இரண்டு முஸ்லிம் இளம் பெண்கள் வலுக்கட்டா யமாக எழுப்பப்பட்டு, அந்த இடத்தை விட்டு அகற்றப்பட்டனர். அந்த இரண்டு இளம்பெண்களும் ஹிஜாப் என்னும் தலைமுக்காடு அணிந்திருந்ததே நிகழ்ச்சி அமைப்பாளர்களின் முறையற்ற செயலுக்கு காரணமாக கூறப்பட்டது.
ஹிஜாப் அணிந்த இரண்டு முஸ்லிம் பெண்கள் அவமதிக்கப்பட்ட விவகாரம் அமெரிக்காவில் கடும் விவாதத்தை எழுப்பியது.
ஜனநாயகக் கட்சியின் நிர்வாகிகள் செய்த தவறுக்கு ஒபாமா பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்ற குரல் உலகெங்கும் எழுந்தது.
அமெரிக்க முன்னணி முஸ்லிம் அமைப்பான 'கேர்' தனது அழுத்தமான கண்டனத்தை பதிவு செய்தது. அமெரிக்கா வாழ் முஸ்லிம்களின் தொடரும் அதிருப்தியினால் ஒபாமா பதீல் மற்றும் ஹெபா ஆரிஃபா என்ற இரண்டு முஸ்லிம் சகோதரிகளிடமும் தனிப்பட்ட முறையில் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
ஒபாமா வெல்லும் கலையை கற்றுக் கொண்டு விட்டார்