Sunday, April 25, 2010

அணு ஆயுத தடுப்பு மாநாடு: திசைமாறிய ஒபாமாவின் திட்டம்! அபூசாலிஹ்


அணு ஆயுதம் பூமிப்பந்துக்கு எதிரான மிகப்பெரிய அச்சுறுத்தல். இரண்டாம் உலகப் போரின் பேரழிவுக்கு காரணமாக அமைந்ததே நாசகார அணு ஆயுதங்களே என்பதை உலகம் உணர்ந்து கொண்டது.


ஹிரோஷிமா, நாகசாகியில் 1945&ம் ஆண்டு அமெரிக்காவால், அணுகுண்டு பேரபாயம் ஏற்பட்ட போது, அணுகுண்டு என்ற அழிவுசக்தி முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். இந்த அபாயம் அழிக்கப்படாமல் தொடருமானால் உலகம் நிம்மதியாக வாழவே முடியாது. உலக அழிவின் தொடக்கம் என்பது அணு ஆயுதப் பேரழிவில் தான் இருக்கிறது என காந்தியடிகள் அன்றே எச்சரித்தார். ஆனால் அணு ஆயுதப் பேரபாயத்தை உலகம் உணரவேயில்லை.

உலகின் வளர்ந்த நாடுகள் என்பவையெல்லாம் போட்டி போட்டுக்கொண்டு அணுஆயுதங் களை உற்பத்தி செய்து குவித்து வைத்துள்ளன.
தற்போது உலகில் இருக்கும் அணு ஆயுதங்களில் ஏறத்தாழ 23 ஆயிரம் அணு ஆயுதங்களில், 22 ஆயிரம் அணு ஆயுதங்கள், கிட்டத்தட்ட 95 சதவீதம் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவில் தான் இருக்கின்றன.

ரஷ்யாவிடம் 12 ஆயிரம் அணு ஆயுதங்களும், அமெரிக்காவிடம் 9 ஆயிரத்து 400 அணு ஆயுதங்களும், பிரான்ஸிடம் 300 அணு ஆயுதங்களும், சீனாவிடம் 240 அணு ஆயுதங்களும், பிரிட்டனிடம் 185 அணு ஆயுதங்களும் உள்ளன.

உலகில் இந்த ஐந்து நாடுகளும் அணு ஆயுத வல்லமை கொண்ட நாடுகளாக கருதப்படுகின்றன.

ஆனால் இந்த ஐந்து நாடுகளைத் தவிர பல நாடுகள் இன்று அணு ஆற்றல் பெற்ற நாடுகளாக திகழ்கின்றன.

அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் விதமாக 47 நாடுகளின் தலைவர்கள் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு வர வழைத்து, அணு ஆயுதப் பாதுகாப்பு மாநாடு ஒன்றை அமெரிக்க அதிபர் ஒபாமா கூட்டியிருப்பது மேற்கத்திய நாடுகளால் வெகுவாக பாராட்டப்படுகிறது.

இத்தனை நாடுகள் ஒன்று கூடி மாநாடு நடத்துவது இது இரண்டாவது முறையாகும். 1945&ல் அன்றைய அமெரிக்க அதிபர் பிராங்ளின் ரூஸ்வெல்ட் இதைப்போன்ற ஒரு மாநாட்டைக் கூட்டினார். அதன் பலனாக ஐக்கிய நாடுகள் சபை அன்று உருவானது.

2007&ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஒரு திடீர் நிகழ்வு உலக நாடுகளின் தலைவர்களை திடுக்கிடச்செய்தது.

தென்னாப்பிரிக்காவில் ஆறு அணு குண்டுகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த யுரேனியத்தை கைப்பற்ற சில பயங்கரவாதிகள் அதிநவீன பாதுகாப்பு வளையத்தை உடைத் தெறிந்து நுழைய முற்பட்டபோது உலகம் வெலவெலத்துப் போனது.

அணு ஆயுதத்துக்கு தேவைப் படும் மூலப் பொருட்கள் பயங்கரவாதிகளின் கைகளில் சிக்கினால் என்னவாகும் என்ற அச்சம் உலகை ஆட் கொண்டது.

இதுவே இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சமாக மாறியது.

ஈரான் இந்த மாநாட்டுக்கு அழைக்கப்படவில்லை. இஸ்ரேல் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வில்லை. இஸ்ரேலுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் என்ற போர்வாளுடன் துருக்கிப்பிரதமர் ரஜப் தய்யிப் எர்தோகன் அங்கே காத்துக் கொண்டிருந்தார்.

உலக அமைதி, சமாதானம் போன்றவை குறித்து உரத்து முழங்கும் பிரிட்டனும், பிரான்ஸும் அணு ஆயுதக் குறைப்புக்கு ஒப்புக்கொள்ளவில்லை.

தங்களது பாதுகாப்பு கருதியே அணு ஆயுத குறைப்புக்கு ஒப்புக் கொள்ளவில்லை என தெரி வித்திருக்கின்றன.

அணு ஆயுதம் இல்லாத உலகை உருவாக்க முனையும் உன்னத நோக்கம் இந்த நிகழ்வின் மூலம் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் உண்மையான நோக்கம் அதுதானா?

அணு ஆயுதமற்ற உலகை உருவாக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் தலைமையில் கூடிய 47 நாடுகளின் தலைவர்களின் லட்சியம்! காலம் கடந்த ஒன்றாகவே கருதப்படுகிறது.

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியும், ஜப்பானும் வீழ்த் தப்பட்ட பிறகு உலகின் அணு ஆற்றல் பெற்ற நாடுகளாக ஐந்து நாடுகளே இருந்தன.

1960களில் பிரிட்டன், இஸ் ரேலுக்கு அணு ஆற்றல் ரகசியத்தை ரகசியமாக அள்ளி வழங்கியது.

எழுபதுகளின் மத்தியப்பகுகளில் திருமதி இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது, ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தியது.

அதே காலகட்டத்தில் ஈராக்கும் அணு ஆயுதத் தயாரிப்பில் மும்முரமாக இறங்கியது. ஈராக்கின் அணு ஆற்றல் மையத்தை இஸ்ரேல் குண்டுவீசி அழித்தது.

இதன் பிறகு பல்வேறு காலகட்டங்களில் சதாம் ஹுசே னின் தலைமையிலான ஈராக் அணு ஆற்றல் மேம்பாட்டை பெற முயன்று கொண்டே வந்தது.

2003 மார்ச் 20 ஆம் தேதி சதாம் ஹுசேன் வீழ்த்தப்பட்டதோடு ஈராக்கின் அணு ஆற்றல் கனவு தகர்ந்தது.

90&களில் இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் அணு ஆயுத ஆற்றல் மேம்பாடு தொடங்கியது.

இதே காலகட்டத்தில் தாலிபான்களின் எழுச்சியும், சோவியத் யூனியன் என்ற ஒன்றுபட்ட நாடுகளின் கூட்டமைப்பின் வீழ்ச்சியும் மேற்குலகை அணு ஆயுத விவகாரத்தை தீவிரமாக கையிலெடுக்க வைத்தன.

2000&த்தின் துவக்கத்தில் வடகொரியா அணு ஆயுத வளர்ச்சியை முழுமையாக பெறத் தொடங்கியது. சிரியாவும், லிபியாவும், அல்ஜீரியாவும் அணு ஆயுத முயற்சியில் வெகுதூரம் முன்னேறிச் சென்று விட்டன என 2000 ஆண்டு தொடக்கத்தில் செய்திகள் உலாவரத் தொடங்கின.

எகிப்து அணு ஆற்றலை மின்சாரத் தேவைக்கு பயன்படுத்தப் போவதாகக் கூறி அமெரிக்க ஆதரவுடன் தனது முயற்சிகளைத் தொடங்கியது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் மின்சாரத் தேவைக்கு அணு ஆற்றலை பயன்படுத்த பிரான்ஸ் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
அணு ஆயுதங்களை தயாரிப்பது கடந்த நூற்றாண்டுகளைப் போல கடினமான ஒன்றல்ல என்பதே தொழில்நுட்ப அறிஞர்களின் கருத்தாக உள்ளது.

இன்று உலகின் பொருளாதார செழுமை மிகுந்த நாடுகளாகக் கருதப்படும் ஜெர்மனி, ஜப்பான், ஆஸ்திரேலியா, சவூதி அரேபியா, குவைத், மலேஷியா, தென்கொரியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் திட்டமிட்டாலும் கூட, ஏன் ஆசைப்பட்டால் கூட மிக எளிதில் அணு ஆற்றல் நாடாக விரைவிலேயே மாற முடியும் என்ற சாத்தியங்களை மறுக்க முடியாது.

கேபிடலிஸம் என்ற முதலாளித்துவமோ, கம்யூனிசம் என்ற பொதுவுடமை தத்துவமோ இன்று உலகை ஆட்சி செய்யவில்லை.

கன்ஸ்யூமரிசம் என்ற நுகர்வோர் கலாச்சாரமே இன்று உலகை ஆட்சி செய்கிறது என்று கூறினால் அது மிகையல்ல.

நாளைய வல்லரசுகளாக மனிதவளம் கொண்ட இந்தியா மற்றும் சீனாவை அரசியல் வல்லுனர்கள் இன்று அடையாளம் காட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால் இன்றைய பூமிப்பந்தின் ஒற்றை வல்லரசாகக் கருதப்படும் அமெரிக்க அதிபர் ஒபாமா கூட பீஜிங்கைப் பார், பெங்களூருவைப் பார் என முழங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

நிலைமை இவ்வாறு இருக்க அணுஆயுத அபாயத்தை ஒழித்துக்கட்டியே தீர வேண்டும் எனக் கூடிய நாடுகளின் கூட்டத்தில், இறுதி லட்சியத்திற்கு முன்பாக ஒரு இடைக்கால லட்சியத்தை விநோதமாக அறிவித்தார்கள்.

இப்போது அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகளைத் தவிர வேறு எந்த நாடுகளும் அணு ஆயுதங்கள் தயாரிக்காமல் பார்த்துக் கொள்வது (?) என்பதே அந்த இடைக்கால லட்சியமாகும்.

அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன், சீனா என்ற இந்த ஐந்து நாடுகளைத் தவிர மற்றவை என்.பி.டி. (அணு ஆயுத பரவல் தடை சட்டத்தில்) ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என இந்த ஐந்து நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இது, இதர நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எது எப்படியோ அணு ஆயுத அபாயம் என்ற பூச்சாண்டியைக் காட்டி ஈரானுக்கு எதிராகப் போர் தொடுப்பதற்காகவே இந்த மாநாடு நடத்தப்பட்டதாக ராஜதந்திர தகவல்கள் கூறுகின்றன.

அணு ஆயுத அபாயம் என்ற அச்சுறுத்தும் காரணத்தைக் கூறி அமெரிக்கா கூட்டிய மாநாடு எதிர்பார்த்த வெற்றியை வழங்குவதற்கு பதிலாக, எதிர்பாராத விளைவை ஏற்படுத்தி இருப்பதாக சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். உண்மையில் இந்த மாநாடு ஏகாதிபத்தியத்திற்கு ஏமாற்றத்தையும், ஈரானுக்கு மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.

ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடைவிதிக்கக் கோரும் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கோரிக்கைக்கு போதுமான ஆதரவு கிட்டவில்லை.

ஈரானின் தீவிர ஆதரவு நாடான சீனா, ஈரான் மீதான மற்றொரு பொருளாதாரத் தடைக்கு தனது ஆதரவு கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

பிரேசிலும், ஈரான் ஆதரவில் தீவிரமாக உள்ளது. ஈரான் ஆக்க வேலைகளுக்கு மட்டுமே அணு ஆற்றலை பயன்படுத்துகிறது அதை எங்களால் உறுதியாக சொல்ல முடியும் என ரஷ்யாவும், ஈரானுக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

ஈரானின் அணு ஆற்றல் வளைகுடாப் பிராந்தியத்திற்கு ஓர் அச்சுறுத்தல் என தொடர்ந்து பரப்புரை செய்து வரும் இஸ்ரேலின் பிரதமர் புன்யாமீன் நேதன்யாஹு தனது பயணத்தையே ரத்து செய்து விட்டார். அமெரிக்காவின் உற்ற தோழனான இஸ்ரேல் மாநாட்டுக்கு ஆஜராகாமல் இருந்தது அமெரிக்காவுக்கு பின்னடைவாக கருதப்பட்டது.

அணு ஆற்றல் விவகாரத்தில் இஸ்ரேலுக்கு எதிராக போர்க்கோலம் பூண்ட துருக்கி பிரதமருக்கு, அஞ்சியே இஸ்ரேலியப் பிரதமர் தனது பயணத்தை ரத்து செய்ததாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவின் சமீப கால நெருங்கிய நண்பனான இந்தியாவும், நெடுங்கால நெருங்கிய நண்பனான சவூதி அரேபியாவும், ஈரானுக்கு எதிரான பொருளாதார நடவடிக்கைக்கு தெரிவித்திருக்கும் எதிர்ப்பு அரசியல் அரங்கில் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.

மொத்தத்தில் ஒபாமாவால் சமீபத்தில் நடத்தப்பட்ட மாநாடு, ஈரானின் ஆதரவு மாநாடாக மாறிவிட்ட விநோதம் நடந்துள்ளது

Thursday, April 15, 2010

abusalih news about en counter

என்கவுண்டர் என்ற பெயரில் கொல்லப்படும் முஸ்லிம் இளைஞர்கள்
அபூஸாலிஹ்

என்கவுண்டர் என்ற பெயரில் கொல்லப்படும் முஸ்லிம் இளைஞர்கள்!
Tuesday, 13 April 2010 19:03 administrator

என்கவுண்டர் என்ற பெயரில் கொல்லப்படும் முஸ்லிம் இளைஞர்கள்! தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்!
காவல்துறையினரால் நடத்தப்படும் என்கவுண்டர்களில் கிட்டத்தட்ட சரிபாதி என்கவுண்டர்கள் போலி என்கவுண்டர்கள் என்று அழைக்கப்படும் காவல்துறை படுகொலைகள் என தேசிய மனிதஉரிமை ஆணையம் பட்டியலிட்டுள்ளது.2008&ம் ஆண்டு டெல்லி ஜாமியா நகரில் பாட்லா ஹவுஸில் நிகழ்ந்த காவல் துறை என்கவுண்டரில் இரண்டு இளைஞர்கள் என்கவுண்டர் என்ற பெயரில் கொல்லப்பட்டனர். உத்தரப் பிரதேசத்தின் ஆஸம்கர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் தலைநகர் டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்று வந்தனர்.ஆதிஃப், சாஜித் என்ற இளைஞர்களை டெல்லியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என குற்றம்சாட்டியும் அந்த குற்றவாளி களை(?) கையும், களவுமாக பிடிக்கப் போவதாக கூறிக்கொண்டு, டெல்லி ஜாமியா நகர் பகுதியில் ஜனநெருக்கடி மிகுந்த பகுதியில் என்கவுண்டர் செய்தது டெல்லி காவல்துறை. இந்த என்கவுண்டர் நாடகத்தில் காவல்துறை ஆய்வாளர் சர்மா என்பவரும் பலியானார். என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்டான சர்மாவும் பலியானது டெல்லி மக்களின் சந்தேகத்தை அதிகப்படுத்தியது. ஆதிஃப், சாஜித் இருவரும் போலி என்கவுண்டரில் தான் படுகொலை செய்யப்பட்டனர் என்றும், காவல்துறை அதிகாரி சர்மா சுட்டுக்கொல்லப்பட்ட விதமும் பலத்த சந்தேகத்தை ஏற்படுத் தியதாக மனித உரிமை ஆர்வலர் கள் அப்போது கடும் எதிர்ப்பு தெரி வித்திருந்தனர்.போலி என்கவுண்டரில் படுகொலை செய்யப்பட்டவர்கள் இருவரும் டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் என்பதால் பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், துணை வேந்தர் உள்பட ஏராளமானோர் போராட்டத்தில் குதித்தனர். அன்றைய மத்திய மனிதவள மேம் பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங், ஜாமியா மில்லியா மாணவர்களின் போராட்டத்திற்கு தனது முழு ஆதரவும் உண்டு என அறிவித்தார்.இருப்பினும் பாட்லா ஹவுஸ் படுகொலையில் நீதி கிடைக்காத நிலையே நீடித்தது.இந்நிலையில் பாட்லா ஹவுஸ் படுகொலை நிகழ்ந்த 2008 செப்டம்பர் 19க்குப் பிறகு ஒரே வாரத்திற்குள் 24-09-2008ல் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி, முக்கிய கேள்விகள் அடங்கிய பட்டியல் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பப்பட்டது.டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தின் மாணவரும், சமூகநல ஆர்வலரும், 22 வயதேயான அஃப்ரோஸ் ஆலம்சாஹிப், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி வினாக் கள் விடுத்திருந்தார்.அவர் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும், அவரால் குறித்த காலத்திற்குள் பதில் பெற முடிய வில்லை. பலதடவை முயன்ற பின்னரே அவர்கேட்ட தகவல்களை, தேசிய மனித உரிமை ஆணையத்திடமிருந்து பெற முடிந்தது.
1993&லிருந்து 2009 வரை நடைபெற்ற என்கவுண்டர்கள் உள்ளிட்ட முக்கிய வினாக்களுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் பதில் அளித்தது.1) 1993-லிருந்து இதுவரை நடைபெற்ற காவல்துறை என்கவுண்டர்களின் எண்ணிக்கை 2560.2) அதில் போலி என்கவுண்டர்கள் என கண்டறியப்பட்டது 1224. இரண்டு என்கவுண்டர்களில், ஒரு என்கவுண்டர் அப்பட்டமான, மனித உரிமை மீறலான படுகொலை என்பதும் தெரியவந்தது.3) மத கலவரங்கள் மற்றும் சாதிய வன்முறைகளில் 432 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.4)¢காவல்துறையினரின் கட்டுப் பாட்டில் நிகழ்த்தப்பட்ட சாவுகள் 2320.5) பெண்கள் மீதான வன்முறைகள் 4502.6) தலித்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் 17,998.7) அரசு அலுவலர்களால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் 224.8) தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை மேற்கொண்ட மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 16,784 என்பது குறிப்பிடத்தக்கது.9) 1224 போலி என்கவுண்டர் வழக்குகளில் 16 பேருக்கு மட்டுமே இழப்பீட்டுத்தொகை கொடுக்கப் பட்டுள்ளது.இத்தனை அரிய பட்டியலை வெளியிட முக்கிய காரணமாக இருந்தது பாட்லாஹவுஸ் என்கவுண்டர் சம்பவம்தான் என்பதனை மறந்திருக்க மாட்டார்கள்.டெல்லி மாநகர மக்களால் வன்மையாகக் கண்டிக்கப்பட்ட பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் கூட போலி என்கவுண்டரே என தேசிய மனித உரிமை ஆணையம் பட்டியலிட்டுள்ளது.போலி என்கவுண்டர் பட்டியலில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தைப் பிடித்தது. 1993 முதல் 2009 வரை 16 ஆண்டுகளில் 716 போலி என்கவுண்டர் படுகொலைகளை நிகழ்த்தி உத்தரப்பிரதேச காவல்துறையினர் சாதனை படைத்துள்ளனர். போலி என்கவுண்டர்களில் மூன்று இலக்க எண்ணை எட்டிப்பிடித்த உத்தரப் பிரதேசத்தை இந்தியாவின் எந்த மாநிலத்தாலும் தொடக்கூட முடிய வில்லை.போலி என்கவுண்டர் படுகொலை களில் உத்தரப்பிரதேசத்துக்கு அடுத்து பீகார் இரண்டாம் இடத்தை பெறுகிறது. இங்கு 79 போலி என்கவுண்டர்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. 73 போலி என்கவுண்டர் படுகொலையோடு ஆந்திரா மூன்றாவது இடத்திலும், 61 போலி என்கவுண்டர் சாதனைகளை(!) நிகழ்த்தி மகாராஷ்டிரா நான்காவது இடத்தையும் பெற்றுள்ளன. கடந்த 16 ஆண்டுகளில் அந்தமான்&நிக்கோபர் தீவுகளில் ஒரு சம்பவம் மட்டுமே போலி என்கவுண்டர் கொலை என கண்டறியப்பட் டுள்ளது.16 ஆண்டுகளில் தமிழகத்தில் 24 போலி என்கவுண்டர்கள் நிகழ்ந்தன. போலி என்கவுண்டர்களே நடக்காத மாநிலமாக நம் அண்டை மாநிலங்களாக கேரளா, புதுவை விளங்குகின்றன. இது மனிதஉரிமை பேணுபவர்களும், மனிதஉரிமையை மீறுபவர்களும் ஒரு சேர கூர்ந்து கவனிக்க வேண் டிய அம்ச மாகும்.போலி என்கவுண் டர்களில் ஹிந்துக்கள், சீக்கியர்கள், முஸ்லிம்கள் என பல்வேறு பிரிவினரும் பாதிக்கப் பட்டுள்ளனர்.போலி என்கவுண் டர்களில் முஸ்லிம் படுகொலைகளில் (வழக்கம்போல) குஜராத் முதலிடத்தைப் பிடித்துள்ளது. குஜராத் காவல்துறையினர் நிகழ்த்திய போலி என்கவுண்டர்களில் 60 சதவீதம் முஸ்லிம்களுக்கு எதிரானது. குஜராத்தில் நிகழ்ந்த 20 போலி என்கவுண்டர்களில் 12 முஸ்லிம்களைக் கொன்று குவித்தனர். குஜராத் காவல்துறையினர். (இஸ்ரத்ஜஹான், ஷொராபுதீன் போலி என்கவுண்டர் படுகொலைகளை மறக்க முடியுமா?) அதிக அளவு முஸ்லிம்களை போலி என்கவுண்டர் செய்த பட்டியலில் உத்தரகண்ட மாநிலம் (31%) இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் முஸ்லிம்களை போலி என்கவுண்டர் (26%) செய்த பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்தது.உத்தரப்பிரதேசம் நான்காவது இடத்தையும் (18%), பீகார் 5வது இடத்தையும் பெற்றுள்ளது.தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்ட போலி என்கவுண்டர் பட்டியலை மாநில வாரியாக பார்ப்போம்.மேலும் காவல் நிலைய படுகொலைகள் குறித்த திடுக்கிடும் விவரங்களை தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ளது.கடந்த 16 ஆண்டுகளில் 2318 பேர் காவல்துறை அதிகாரி களின் கட்டுப்பாட்டில் இறந்துள்ளனர்.காவல்நிலைய சாவுகளில் மகராஷ்ட்ரா மாநிலம் முதலிடம் பெறுகிறது. 316 பேர் மகாஷ்டிராவில் பலியாகியுள்ளனர்.இரண்டாவது இடத்தை உத்தரப்பிரதேச மும் (255), மூன்றாம் இடத்தை குஜராத்தும் (190) நான்காம் இடத்தை பீகாரும் ஐந்தாம் இடத்தை மேற்கு வங்காளமும் பெறுகின்றன.கடந்த 16 ஆண்டுகளில் காவல் நிலைய சாவுகளில்1. மேற்கு வங்காளத்தில் 36 முஸ்லிம்களும்,2. அஸ்ஸாமில் 35 முஸ்லிம்களும்3. குஜராத்தில் 29 முஸ்லிம்களும்4. மகராஷ்ராவில் 27 முஸ்லிம்களும்4. உத்திர பிரதேசத்தில் 27 முஸ்லிம்களும்5. பீகாரில் 14 முஸ்லிம்களும்5. டெல்லியில் 11 முஸ்லிம்களும்6. கர்நாடகாவில் 11 முஸ்லிம்களும், காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது உயிரிழந்ததாக தேசிய மனித உரிமை ஆணையம் குறிப்பிடுகிறது.குஜராத்தில் காவல் நிலைய சாவுகளில் பட்டியலிடப்பட்ட 29 முஸ்லிம் உயிரி ழப்பு களில் 19 உயிரிழப்புகள். குஜராத் இனப் படுகொலை நிகழ்ந்த 2002&-ம் ஆண்டுக்குப்பிறகு நிகழ்ந்தவை யாகும்.அதைப் போன்று கர்நாடகாவில் காவல்துறை யினரின் கட்டுப்பாட்டில் 11 முஸ்லிம்கள் பலியான சம்பவங்கள் சமீப ஆண்டுகளில் நிகழ்ந் தவை என்பதும் தெரிய வருகிறது.51 பக்கங்களைக் கொண்ட தேசிய மனிதஉரிமை ஆணையத்தின் பட்டியல் உலுக்கும் பல்வேறு, உண்மைகளை உலகுக்கு உணர்த்தியுள்ளது என்றால் அது மிகையன்று.