Tuesday, May 25, 2010

ம.ம.கவில் இணைந்த பா.ஜ.க மற்றும் தி.மு.கவினர் (video)

E-mail Print PDF
திருவாரூரின் மாநாட்டு நிகழ்ச்சிகள் உற்சாகமாக போய்க் கொண்டிருந்தபோது, மேடையில் நிகழ்ச்சி தொகுப்பாளர் அபுஸாலிஹ் செய்த அறிவிப்பு பல்லாயிரக் கணக்கானோரை ஆர்ப்பரிக்க வைத்தது.

ம.தி.மு.க.விலிருந்து கடந்த ஜனவரி-6 அன்று அக்கட்சியின் மாவட்ட பிரதிநிதி செல்லச்சாமி தனது ஆதரவாளர்களுடன் ம.ம.க.வில் இணைந்தார்.

மாநாட்டை முன்னிட்டு திருவாரூர் மாவட்டமெங்கும் அவர் நாச்சிக்குளம் தாஜுதீனுடன் இணைந்து அனல் பறக்கும் பிறச்சாரத்தில் ஈடுபட்டார்.

அவரின் தலைமையில் ஏராளமானோர் பாரதீய ஜனதா கட்சியிலிருந்து விலகி மனிதநேய மக்கள் கட்சியில் இணைந்தனர். ஆளுங்கட்சியான தி.மு.க. விலிருந்தும் 6 பேர் இணைந்தனர்.

ஆளும் கட்சியிலிருந்து விலகி நம்முடன் சேர்ந்ததும், நேர் எதிரான கொள்கையை கொண்ட பா.ஜ.க. மதவெறி கட்சியிலிருந்து விலகி, மனிதநேய மக்கள் கட்சியில் இணைந்ததும் பத்திரிக்கையாளர்களை ஆச்சரியத்தில் மூழ் கடித்தது