மோடியை வெற்றிபெறச் செய்த காங்கிரஸ்
அபூசாலிஹ்
குஜராத்தில் மீண்டும் பாசிசம் படர்ந்து விட்டது. மனு அதர்ம ஆட்சி குஜராத்தில் குடிகொண்டு விட்டது. இதற்கு முக்கிய மாக மோடி நன்றி கூற வேண்டியது காங்கிரஸ்காரர்களுக்குத்தான்.
மோடி தன் மீதான குற்றச்சாட்டு களுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த அதேவேளையில்தான் நேற்று மோடியோடு கூடிக் குலாவியர் களை அழைத்துக் கொண்டு பிரச்சாரத் தில் ஈடுபட்டது காங்கிரஸ்.
மோடிக் கூட்டத்தையும் மோடி இல்லாத காங்கிரஸ் கூட்டத்தையும் தனித்தனியே பார்த்தவர்களுக்கு பெரிதாக வேறுபாடு ஒன்றும் தோன்றவில்லை.
மோடியின் கட்சி ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஏ.பிரிவு அணி என்றால் குஜராத் மாநில காங்கிரஸ், ஆர்.எஸ்.எஸ்.ஸின் பி பிரிவு அணியாகவே கருதப்பட்டது. சங்கர்சிங் வகேலா உள்ளிட்ட நேற்றைய காக்கி டவுசர் பார்ட்டிகளுக்கு கதர் டவுசர் மாட்டி காங்கிரஸுக்கு அழைத்து வந்த போதே காங்கிரஸின் கொள்கை உறுதி(!) புலப்பட்டது.
காங்கிரஸ் தன் கொள்கை என்பது மதச்சார்பின்மை என்பதாக சொல்லிக் கொண்டது அவ்வாறே பாஜகவின் கொள்கை ஹிந்துத்துவா என்று சொல்லிக் கொண்டது.
காங்கிரஸின் கொள்கைக்கு பிதா மகன் 'காந்தி' என்பதைப் போல சங்கும்பல் கொள்கையின் பிதாமகன் கோட்சே என கருதப்படுகிறது.
57 வயதான நரேந்திர மோடி 1966ல் ஆர்.எஸ்.எஸ்.சில் சேர்கிறார். 1987ல் பாரதீய ஜனதாவில் முக்கிய செயலாற்றும் ஊழியராக உருவெடுக்கிறார்.2001 அக்டோபரில் பாஜக சட்ட மன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு, பாஜக தேசிய தலைமையினால் குஜராத் முதலமைச்சர் பதவிக்கு நியமிக்கப்படு கிறார். அதுவரை பாஜகவின் முதல்வராக இருந்த சங்கர்சிங் வகேலாவும் கேசுவாய் கேசுபாய் பட்டேலும் ஓரங்கட்டப்பட்ட னர். அவ்வாறே 2002ல் நிகழ்ந்த குஜராத் இனப்படுகொலையில் தொடர்பு டையவர்களுக்கு காங்கிரஸ் சீட் கொடுத்தது. இந்த செயல் எரிகிற நெருப்பில் பெட்ரோல் ஊற்றியதாக அமைந்தது.
காங்கிரஸ் கட்சிக்கென ஒரு ஓட்டு வங்கி உண்டு. சிறுபான்மையினர், தலித்துகள், ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகள்தான் காங்கிரஸின் ஓட்டு வங்கியாக கருதப்பட்டது.
விடுதலைப் பெற்ற காலத்திலிருந்து காங்கிரஸ் இந்த அடிப்படையிலேயே வாக்குகளைப் பெற்று வெற்றிகளைக் குவித்தது.
காங்கிரஸ் ஓட்டுவங்கியில் ஓட்டையைப் போட்டு மதவாதம் பேசி பாரதீய ஜனதா அரசியலில் வளரத் தொடங்கியது. எதிர்வினை ஆற்ற வேண்டிய காங்கிரஸ் அரசியல் போக்கைத் தீர்மானிக்கும் பாத்திரத்தை பாஜகவிடம் பறிகொடுத்துவிட்டு பாஜகவின் பின்னால் செல்லும் அவல நிலையை அடைந்தது.
குஜராத்தில் தொழிற்சங்சங்கள் காவிமயமாயின. ஆதிவாசி மக்களை ஆதிக்க சாதியினர் தங்களின் விருப்பத் திற்கேற்ப ஆடும் பொம்மைகளாக மாற்றினர். ஏறக்குறைய பல்வேறு பிரிவு மக்களிடையேயும் விஷத்தை விதைத்து ஆதரவை அறுவடை செய்த பாஜகவுக்கு மத்தியில் டெல்லிக்கும் அகமதாபாத்துக் கும் சீசன் டிக்கெட் எடுத்து பயணம் செல்வதையே முழுநேரக் கடமையாக குஜராத் காங்கிரஸார் கொண்டனர்.
பாஜகவினரால் வளைக்க முடியாதவர் கள் முஸ்லிம்கள் மட்டுமே என்பது தெள்ளிய நீரோடையாக தெரிய வரவும் முஸ்லிம்களை கருவறுக்கும் விதமாகவே திட்டமிடலைத் தொடங்கினர் ஹிந்துவ சக்திகள்.
மதவெறி பரப்பப்பட்டு மனித நேயம் மாய்க்கப்படும் போது அதற்காக கிளர்ந்து எழவேண்டிய காங்கிரஸ் அமைதி காத்தது.
மோடி ராஜ்ஜியம் எழுச்சிபெற காங்கிரஸ் மவுன சாட்சியானது.
2002ல் நிகழ்ந்த இனப்படுகொலை குறித்தும் காங்கிரஸ் தனது எதிர்ப்பை மூர்க்கமாக தெரிவிக்கவில்லை. பரபரப் பான அரசியல் சூழலில் காங்கிரஸ் இருக்கும் இடமே தெரியவில்லை.
தீஸ்தா செதல்வாட்களும், அருந்ததி ராய்களும், எழுப்பிய போர்க்குரல் போல் காங்கிரஸ் குரல் எழுப்பவேயில்லை. முஸ்லிம்களின் குரல்வளைகள் நெறிக்கப்பட நெறிக்கப்பட, அதனை எதிர்த்து காங்கிரஸ் குரலெழுப்பவே இல்லை.
கோத்ரா சம்பவத்தைக்கூட லாலுவின் தீவிர முயற்சியால் நடுநிலையான நீதி விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்ட தால் கோத்ரா ரயில் எரிந்த சம்பவம் சதிச் செயல் அல்ல லி விபத்து என்ற விபரம் உலகிற்கு உணர்த்தப்பட்டது.
இம்மாதிரி ஒவ்வொரு நிகழ்வு களுக்கும் ஆர்த்தெழுந்து போர்க்களம் காணவேண்டிய காங்கிரஸ் பின்தங்கியது. காங்கிரசுக்கு மாற்றாக பிற சமூகநீதி இயக்கமோ அல்லது முஸ்லிம்களை அரவணைத்துக் கொண்டு பிற சமுதாய மக்களோடு ஒற்றுமை பேணும் தமுமுக போன்ற சேவை அமைப்புகளோ குஜராத்தில் இல்லாமல் போனதால் குஜராத்தின் அப்பாவி முஸ்லிம்களுக்கு அடிமேல் அடிவாங்கும் நிலைக்கு கொண்டு சென்றது.
மோடி மீது குற்றம்சாட்டி காவல்துறை டி.ஜி.பி ஸ்ரீகுமார் 'நானாவதி கமிஷன்' முன் தொடர்ந்து வழங்கிய சாட்சியங்கள், ஜஹிரா ஷேக் பல்கிஸ் பானு, இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாகியா ஜாஃப்ரி யின் கோரிக்கைகள் போன்ற கருணை காட்டப்பட வேண்டிய பரிதாப ஜீவன்கள் விஷயத்தில் காங்கிரஸ் பாராமுகமாய் இருந்தது.
மோடியை வாக்குச்சீட்டின் மூலம் தண்டிக்கத் துடித்த முஸ்லிம்கள் நிவாரண முகாம்களில் தவித்துக் கொண்டிருந்தனர். தேர்தல் விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டதைக் கண்டும் காணாமல் இருந்து கொண்டு யாரை நம்பி இவர்கள் தேர்தல் களத்தில் சென்றார் கள்?
சிங்கம் என்றால் கர்ஜனை புரிய வேண்டும். நரி என்றால் ஊளையிட வேண்டும். ஆனால் காங்கிரஸ் சிங்கம் கர்ஜனையை மறந்து காவி நரிகளைப் போல ஊளையிட முயன்றதுதான் பிரச்சினை.
தனக்கென உள்ள ஓட்டு வங்கியை பராமரிக்காமல் மோடிக் கூட்டத்தின் வாக்கு வங்கியைப் பார்த்து ஏங்கிக் கொண்டிருந்த நிலை கண்டு நடுநிலை யாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உள்ளூர் தளபதிகளாக முன்னாள் காவி கனவான்களை நிறுத்தி விட்டு ஓட்டு வேட்டையாட சோனியாவும், ராகுலும் வந்தனர். இருவரும் மோடியைக் குறித்து பிளந்து கட்டும் போது பாஜக வினர் மட்டுமல்ல, காங்கிரஸ் மேடையில் நின்று கொண்டிருந்த முன்னாள் பாஜகவினரும் நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தனர்.
உள்ளூரில் உருப்படியான தலைவர் களை வளர்தெடுக்காமல் விட்டதின் விபரீதத்தை காங்கிரஸ் இப்போதாவது புரிந்து கொண்டால் நலமாக இருக்கும்.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக ஆந்திராவில் அரசோச்சிக் கொண்டி ருந்த சந்திரபாபு நாயுடுவை எதிர் கொள்ள முடியாமல் காங்கிரஸ் திணறியது. ஆனாலும் ஆந்திர அரசிய லில் காங்கிரஸ் சார்பாக ராஜசேகர ரெட்டி முன்நிறுத்தப்பட்டார். அசைக்க முடியாத மலையென கருதப்பட்ட நாயுடு வீழ்த்தப் பட்டார்.
இவ்வாறே மத்தியப் பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் பாஜகவின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் வண்ணம் வளர்ந்தனர் திக்விஜய் சிங்கும், அசோக் கெலாட்டும். இவ்வாறு மக்கள் தலைவர் களை குஜராத்தில் வளர்க்காததின் பலனை காங்கிரஸ் இப்போது அனுபவிக் கிறது.
காங்கிரசுக்கான வாக்குகள் அந்த மாநிலத்தில் கொட்டிக் கிடக்கிறது களத்து மேட்டு நெல்லைப் போல. அதனை களஞ்சியத்தில் கச்சிதமாகக் கொண்டு சேர்க்கும் சரியான உழைப்பாளி தற்போது இல்லை என்பதுதான் நிதரிசனம்.
குஜராத்தில் மோடி வென்றதால் ஹிந்துத்துவா அங்கே வாகை சூடியதாக பொருள் கொள்ள முடியாது.
குஜராத் காங்கிரஸ் தங்க தாம்பாளத் தில் வைத்து மோடிக்கு வெற்றியை வழங்கியிருக்கிறது. மோடியும் அவர் சகாக்களும் மனதிற்குள் காங்கிரஸுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டே இருப்பார்கள்.
எதிர்காலத்தில் சங்பரிவாரின் வெற்றி களுக்கு தொடர்புள்ளி வைப்பதோ அல்லது முற்றுப்புள்ளி வைப்பதோ காங்கிரஸின் 'கை'களில் தான் இருக்கிற
Wednesday, December 26, 2007
Tuesday, December 18, 2007
ஹஜ் பயணங்கள் 2007அபூசாலிஹ்
ஒவ்வொரு முஸ்லிமின் ஐந்து கட்டாயக் கடமைகளில் இறுதிக்கடமையான ஹஜ்ஜை வழமைப் போல் ஹாஜிகள் நிறைவேற்றி முடித்திருக்கும் உன்னதமான வேளை இது. ஹாஜிகளை வரவேற்க ஒவ்வொரு முஹல்லாவும் இன்முகத்துடன் தயாராகும் வேளை.அதிக அளவில் பெண்கள் உலகம் முழுவதும் 187 நாடுகளில் இருந்து 25 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் ஹஜ் எனும் புனிதக்கடமையினை இவ்வாண்டு நிறைவேற்றியுள்ளனர்.
இதில் 50 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். உணர்ச்சி வெடிக்க கண்ணீர் பெருக்கெடுக்க தாய்மார்கள் ஹஜ் கடமையினை நிறைவேற்றியுள்ளனர். 130 கோடிக்கு மேல் ஒன்றுபட்ட ஓர் உன்னத சமூகத்தினர் நாடு, மொழி, பிராந்தியம் கடந்து ஒரே உணர்வுடன் இங்கே சங்கமித்த எண்ணும் போது ஏற்படும் உணர்ச்சிப் பெருக்கை வார்த்தைகளால் வடிக்க இயலாது என நெகிழ்கிறார் அலிகாரைச் சேர்ந்த சமிரா.
எதிரிகளுக்கும் பிரார்த்தனை
இஸ்லாம் இன்று அதைப் புரியாதவர்களால் தொடர்ந்து கருத்தியல் ரீதியாக தாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. உலக மக்கள் அனைவருக்கும் அவ்வாறு தாக்குபவர்களுக்கும் சேர்த்து, உலக அமைதிக்காகவும் தான் பிரார்த்திப்பதாக டொராண்டோவின் ரானா அஸ்கர் ஹுஸைன் கூறுகிறார்.
தீவிரவாதத்திற்கு இஸ்லாத்தில் சிறிதும் இடமில்லை. ஏனெனில் இஸ்லாம் ஒரு சுதந்திரமான மார்க்கமாகும். மனித நேயமே அதன் முக்கியக் குறிக்கோளாகும், நாம் இந்தப் பூமியிலிருந்து 'வெறுப்புணர்வு' என்ற வேண்டாத சொல்லை அகற்றுவோம். இஸ்லாமியக் கொள்கைகள், அதன் வழிமுறைகள் அனைத்தையும் அறிந்தவர்களுக்குத் தெரியும். இஸ்லாம் என்பது 'அன்பு' 'பொறுமை' போன்றவற்றின் மார்க்கமாகும் என்று நபிகள் பெருமானார்(ஸல்) அவர்களின் வாழ்வு அதற்கு சீரிய எடுத்துக்காட்டு ஆகும். இஸ்லாத்தைப் பற்றி தவறுதலான புரிந்து கொள்ளலில் முக்கியமானது முஸ்லிம்கள் பெண்களை சமமாக நடத்தவில்லை என்பதாகும்.
இஸ்லாத்தில் பெண்களுக்கு எந்த உரிமைக்குறைவும் ஏற்படவில்லை. பெண்கள் இங்கே பெருமிதத்துடனே வாழ்ந்து வருகிறோம் என்றார்.
ஒற்றுமைக்கு பிராத்தனை
மேற்குலகத்தினர் உள்நோக்கத்துடன் இஸ்லாத்தைப் பற்றி, குறை கூறுகின்றனர். அதை பொதுமைப்படுத்தவும் முயல்கின்றனர். ஆனால் ஹஜ் புனிதப் பயணத்தின் பிரார்த்தனையில் ஹாஜிகள் அனைவரும் முஸ்லிம்களின் ஒற்றுமைக்காகவும் உலக அமைதிக்காகவும் மனித குலத்துக்காகவே பிரார்த்தனை செய்து வருகின்றனர் என ஜோகன்னஸ் பர்க்கிலிருந்து வந்த ஹாஜிமா சுமையா சுலைமான் கூறுகிறார்.
முஸ்லிம்கள் அனைவரும் இஸ்லாத்தின் உயரிய மதிப்பீடுகளை உணர்ந்து பின்பற்றாததால் முஸ்லிம்கள் மீதான எதிர் மறையான கருத்தை பரப்ப காரணமாகி விட்டது என ஃபாத்திமா முஹம்மத் எனும் ஜோர்டானைச் சேர்ந்த ஹஜ் பயணி தெரிவித்தார்.
முஸ்லிம் பெண்கள் இஸ்லாத்தின் உன்னத செய்தியை உலகம் உணரும் வகையில் செயல்பட வேண்டும் என தனது எண்ணத்தை வெளிப்படுத்தினார் இந்தோனேஷியாவின் ஜாவாதீவுப் பகுதியைச் சேர்ந்த என்னாரு பீனா.
நாம் அனைவரும் பிற சமூகத்தினர் பின்பற்றும்படி இருக்க வேண்டும். உலகின் பார்வை அனைத்தும் நம்மீது படர்ந்திருக்கிறது என தெரிவித்த மொரிஷியஸைச் சேர்ந்த ஆசிரியை நதியா ரஹ்மான் 'நாம் நமது நேர்த்தியான வாழ்வியல் முறையின் மூலம் போல் அவர்களிடம் பதிலளிக்க வேண்டும்' என்றும் தெரிவித்தார்.
புனித மக்கா, மினா, அரஃபா, மதினா என அனைத்துப் பகுதிகளும் 12 லட்சத்திற்கு மேற்பட்ட முஸ்லிம் பெண்களால் திணறுகிறது.
அந்த ஆன்மீக வெள்ளைக்கடல் உலக சமாதானத்திற்காக பிரார்த்தனைகளை உள்ளம் உருக எல்லாம் வல்லவனிடம் வேண்டியது.
இந்தியாவிலிருந்து 1,50,000
இந்தியாவிலிருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் சென்றனர். மகராஷ்ட்ராவிலிருந்து 108 வயதான மூதாட்டியும் ஜார்கண்ட் மாகாணத்தின் நான்கு வயதுச் சிறுமியும் புனித ஹஜ் பயணம் செல்கின்றனர்.
இந்தியாவில் ஹஜ் புனிதப் பயணம் மேற் கொண்டவர்களுக்கு பிரதமர் மன்மோகன்சிங் வாழ்த்து தெரிவித்தார்.
அதில் 'ஹஜ் புனிதப்பயணம் செல்லும் வாய்ப்பை பெற்றவர் இறைவனின் அருள் பெற்றவர் ஆவார். ஹஜ்ஜை நிறைவேற்றச் செல்லும் அனைத்து புனிதப் பயணிகளும் சமாதனத்துக்கும் ஒற்றுமைக்கும் நாட்டில் சமய நல்லிணக்கம் நிலவவும் பிரார்த்திக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். இது இந்திய மக்கள் தான் அனைவரின் பிரார்தனையும் ஆகும் என்றும் குறிப்பிட்டார்.
இஸ்லாத்தின் செய்தி, சமாதானம் மற்றும் சகோதரத்துவம் என பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டார். இதை கோடிட்டுக்காட்டிய மன்மோகன்சிங் 'இஸ்லாம் நமது பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டு கடந்த குடியரசு தினத்தன்று நாம் பெருமையுடன் வரவேற்ற மன்னர் அப்துல்லாஹ்வின் மாட்சிமைக்கு நாங்கள் என்றும் நன்றியுடையவர்களாக இருப்போம்' என்றும் பிரதமர் ஹஜ் பயணிகளுக்கான வாழ்த்து செய்தியாக குறிப்பிட்டார். மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் அப்துர் ரஹ்மான் அந்துலே தலைமையில் இந்தியக் குழு சென்றது.
தவிப்பின் இடையே ஹஜ் கனவு நனவாகியது. (பாலஸ்தீனம்)
அடக்கு முறைகளால் நசுக்கப்பட்டுத் துன்பத்தில் உழலும் பாலஸ்தீன, மக்களுக்கும் ஹஜ் பயண வாய்ப்பு கிடைத்ததை எண்ணி பாலஸ்தீன காஸா பகுதி ஹாஜிகள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
இனவெறி இஸ்ரேலால் அடக்கி ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனம் உரிமைப் போரட்ட விவகாரத்தில் உறக்க நிலைசக்தியான ஃபதாஹ் கட்சியிடம் மாட்டித் தவித்த போது, உரிமைக்காக ஒங்கிக் குரல் கொடுத்த ஹமாஸின் கட்டுப்பாட்டிற்குள் பாலஸ்தீனம் வந்தது.
சொந்த சகோதரர்களின் தொடர் போரினால் அமைதி இழந்து தவித்தனர் பாலஸ்தீன மக்கள்.
எகிப்தின் எல்லைப் பகுதியான ரஃபாவின் அருகே காத்துக் கிடந்தனர். இஸ்ரேலின் கெடு பிடிகளையும் மீறி காத்துக் கிடந்தனர் பாலஸ்தீன மக்கள். எகிப்திய அரசு வருடத்திற்கொரு முறை காஸாப்பகுதி எல்லையை ஹாஜிகளுக்காக திறந்து விடுகிறது. இந்த ஆண்டு திறந்து விட தாமதமாகவே நவம்பர் 29 ஆம் தேதி பாலஸ்தீன மக்கள் கடும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து ரஃபா எல்லை திறந்து விடப்பட்டது.கடுமையான அழுத்தங்களுக்கும் போராட்டங்களுக்கும் பிறகும் இந்த ஆண்டு காஸா பகுதியில் 2,200 முஸ்லிம்கள் புனிதப் பயணம் சென்றனர்.
செர்பியர்களால் குதறப் பட்ட கொசோவாவில் 592 பேர் ஹஜ் புனிதப் பயணம் சென்றனர். இதில் 130 பேர் பெண்கள். 45 சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் இன்றும் வறுமைக் கோட்டிற்கு கீழான நிலையிலேயே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உழைப்பாளியின் ஹஜ்ஹஜ் பயணங்கள் குறித்த விவரங்கள் வெளிவரும் போது ஹஜ் பயணம் என்னும் இறுதி லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக செய்தது குறித்து கராச்சி அஹ்மத் இவ்வாறு குறிப்பிடுகிறார். எனது வாழ்நாள் கனவான ஹஜ்ஜை நிறைவேற்றியதை நான் பெறுதற்கரிய பாக்கியமாகக் கருதுகிறேன்.
'நான் புனித மக்கமா நகரத்தில் நுழைந்தபோது ஒட்டுமொத்த பூமியே என்னைப் பார்த்து புன்னகைப் போன்று இருந்தது எனக் கூறும் 46 வயது அஹ்மது கராச்சி பத்திரிக்கையாளர் சங்கத்தில் மின்சார தொழில்நுட்ப உதவியாளர். இவர் தனது இறுதிக் கடமையினை நிறைவேற்றுவதற்காக ஆண்டுகணக்காக 18 மணி நேரம் உழைத்தார். அதாவது வாழ்நாளில் 8 மணி நேரம் கூடுதலாக உழைத்தார். காலையில் 8 மணிக்கு வீட்டை விட்டு புறப்படும் அவர் மறுநாள் அதிகாலை இரண்டு மணிக்கு முன்பு வீடு திரும்பியதே இல்லை. அஹ்மத் மற்றும் அவரது மனைவிக்கு ஹஜ் செல்ல மூன்று லட்ச ரூபாய் ஆகும் என்பதை அறிந்தார். நான்கு மாதம் வரை அவர் தான் இந்த ஆண்டு ஹஜ் செல்வோம்' என்ற நம்பிக்கையில் இருக்க வில்லையாம். நான்கு மாதத்திற்கு முன்பு அவரிடம் வெறும் இரண்டு லட்சரூபாய் தான் இருந்ததாம். இது அவரது கடந்த பத்தாண்டுகள் உழைத்த உழைப்பின் சேமிப்பாகும்.
சரியாக மூன்று மாதத்திற்கு முன்பு அவருக்கு மின்துறை தொடர்பான பெரிய ஒப்பந்தம் ஒன்று கிடைத்தது. எழுபத்தைந்தாயிரம் ரூபாய் வருவாய் கிடைக்கும் ஒப்பந்தம் அது.
'நான் எனது ஹஜ் பயணத்திற்காகும் செலவுக்கான பணத்தை நான்கு தவணைகளாக செலுத்தினேன்' என கூறும் அவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் மனைவியும் உள்ளனர். தங்களது சின்னஞ் சிறிய சேமிப்புகளைக் கூட தங்களுக்கு உதவியதாக அவர் தெரிவித்தார். குழந்தைகள் மற்றும் மனைவியின் சேமிப்பாக 5 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. அவர் வேலைக்கு சேர்ந்தது முதல் 20 ஆண்டுகாலமாக ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காத அவரது பணி நேர்த்தியை பாராட்டி 20 ஆயிரம் ரூபாயை வழங்கி அவரது அலுவலகம் அவரை பாராட்டியது. இவை அனைத்தையும் ஹஜ் புனிதப் பயணத்திற்கான செலவாக எடுத்துக் கொண்ட அவரிடம் 'முஸ்லிம் சகோதரர்களுக்கு ஏதும் சொல்ல விரும்புகிறீர்களா?' எனக் கேட்டபோது ஒருபோதும் 'தாமதப் படுத்தாதீர்கள்' ஹஜ் கடமையை நிறைவேற்ற முனைந்தால் தாமதிக்க வேண்டாம். இறைவன் உங்களுக்கு அனைத்து வகையிலும் உதவி புரிவான்'' என்றார்.சைக்கிளில் ஹஜ்ஜுக்கு சென்ற பிரெஞ்சு மாணவர்.
முஸ்லிமின் கடமைகளில் இறுதிக் கடமையான ஹஜ்ஜை சைக்கிளில் சென்று நிறைவேற்றிய இளைஞரைப் பற்றிய பிரமிப்பூட்டும் செய்தியை நாட்டிங் ஹாம் ஈவ்னிங் போஸ்ட் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
4,500 கிலோ மீட்டர் தூரத்தை சைக்கிளிலேயே கடந்து சென்று ஹஜ் செய்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. அவரைப் போன்றே இவரும் அதீத ஆர்வத்தினால் சைக்கிள் மூலம் ஹஜ் பயணம் சென்றார்.
முதலில் இவரது சைக்கிள் ஹஜ் பயண திட்டத்தை இவரது குடும்பத்தினரும் நண்பர்களும் ஏற்றுக்கொள்ள வில்லை. அதன் பின்னர் இவரது உறுதியைப் பார்த்து பிரான்ஸின் நாட்டிங்ஹாம் நகர பள்ளிவாசல்கள் அனைத்தும் இவருக்கு ஆதரவு வழங்கின.
ஆறு மாதங்கள் மேற்கொண்ட ஹஜ் பயணத்தில் உணவு அருந்துதல் மற்றும் உறங்குது மட்டும் மிகவும் சிரமமாக இருந்தது என சலீம் குறிப்பிட்டார். ஆனால் நான் இத்தகைய கடின அனுபவங்களை எதிர்பார்த்தேன். அதனால் எனக்கு இறையருளால் அவ்வளவு கடினமாகத் தோன்றவில்லை' என தெரிவித்தார்.
சலீமின் சைக்கிள் ஹஜ் பயணம் பிரான்ஸ், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலி நகரங்கள் வரை சென்றது. அதன் பிறகும் அவரது சைக்கிள் சென்றிருக்கும் ஆனால் நிலவழிப்பாதை மிகவும் தூரம் எனவே இத்தாலிக்குப் பிறகு அவர் கடல் மார்க்கமாக துருக்கி சென்றார். துருக்கி வந்தடைந்த பிறகு சிரியா மற்றும் ஜோர்டான் நாடுகளின் வழியாக சைக்கிள் பயணம் தொடர்ந்தது. டிசம்பர் 18 ஆம் தேதி சரியாக புனித மக்காவை வந்தடையும் வண்ணம் அவரது பயணம் அமைந்திருந்தது.
சலீம் வளரும் தலைமுறையினர்களுக்கான சிறந்த எடுத்துக் காட்டாக விளங்கும் இளைஞர் என நாட்டிங்ஹாமின் கரிமிய்யா கல்விக் கூடத்தின் நிறுவனர் டாக்டர் முஷாரஃப் ஹுஸைன் தெரிவிக்கிறார்.
சைக்கிளில் ஹஜ்ஜிற்கு போன முதியவர்
25 வயது பிரெஞ்சு மாணவர் சலீமின் சிலிர்க்க வைக்கும் சைக்கிள் ஹஜ்ஜைப் பற்றி பார்க்கும்போது, கடந்த ஆண்டு சைக்கிளிலேயே ஹஜ் பயணம் சென்று வந்த முதியவர் ஒருவரின் நெகிழ வைக்கும் ஹஜ் பயணம் நினைவுக்கு வருகிறது.13 நாடுகளைக் கடந்து சென்ற அந்த ஹஜ் பயணியின் பெயர் மஹ்மூத் ஆகும். ரஷ்யர்களின் மேலாதிக்கத்தை எதிர்த்து உரிமைக்குரல் எழுப்பும் செசன்யாவைச் சேர்ந்த அவர் கொடிய தேள்கள், விஷப்பாம்புகள், வெறுப்புணர்வு கொண்ட அமெரிக்க போர் வீரர்களைத் தாண்டித்தான் அவர் தனது ஆன்மீக லட்சியத்தை அடைந்திருந்தார்.
'இவை எதுவுமே என்னை பயமுறுத்த முடியாது. ஏனெனில் நான் வல்ல அல்லாஹ்வுக்கு மட்டுமே அஞ்சுபவன்' என புன்முறுவலுடன் தெரிவித்தார்.செசன்யா தலைநகர் க்ரோஸ்னியிலிருந்து புனித மக்கா வரை 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் எனினும் அவரது சொந்த ஊரிலிருந்து 1200 கிலோ மீட்டர் தூர கூடுதலாகும்.
'ஹஜ் பயணத்தை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும் என மஹ்மூத் விருப்பம் தெரிவித்த போது அவரது தாயார் அதற்கான பொருளாதார பலம் இல்லை என மனம் சோர்வடைந்து விடாதே. உன்னிடம் சைக்கிள் இருக்கிறதல்லவா?' எனக் கூறியதை கண்ணீருடன் நினைவு கூர்கிறார் மஹ்மூத்.
சைக்கிள் செயின் 11ம்; சைக்கிள் ட்யூப்பும் அவசரத்திற்கு உதவும் என்று எடுத்துச் சென்றார்.
இவர் அமெரிக்க ஆக்கிரமிப்பில் இருக்கும் ஈராக் வழியாகச் சென்றபோது அமெரிக்க ராணுவத்தினர் இவரிடம் மோசமாக நடந்து கொண்டனர். ரஷ்யப் பன்றியே என அழைத்து இவரது சைக்கிளை உடைத்துப் போட்டனர். 'நான் ரஷ்யப் பன்றி அல்ல. முஸ்லிம் அல்லாஹ்வின் அடிமை' என நிலம் அதிரக் கூறியிருக்கிறார். தன்னுடைய பாஸ்போர்ட்டையும் அமெரிக்க ராணுவ வீரர்கள் பறித்துக் கொண்டதோடு ஈராக்கின் வழியாகச் செல்லக் கூடாது என மிரட்டி விரட்டியும் விட்டனர். அதனைத் தொடர்ந்து ஈராக்கை சுற்றிச் சென்று ஈரான், ஆர்மீனியா, ஜார்ஜியா வழியாகவும் துருக்கி மற்றும் ஜோர்டான் வழியாக மக்கா சென்றார்.
இறுதிக் கடமையினை நிறைவேற்றி இறைவனின் ஆணையையும், அன்னையின் ஆசையையும் நிறைவேற்றிவிட்ட இந்த 63 வயது பெரியவரின் சைக்கிள் ஹஜ் நெகிழ்வூட்டுகிறதல்லவா?
இயற்கை சீற்றத்திலும் இறை கட்டளை மறவாத பங்களா தேஷ் மக்கள்
ஹஜ் பயணம் செல்வதில் மூன்றாவது இடம் வகிக்கும் பங்களாதேஷில் இவ்வாண்டு 46 ஆயிரம் பேர் ஹஜ் பயணம் செல்கின்றனர். கடந்த ஆண்டு 60 ஆயிரம் பேர் ஹஜ் பயணம் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு ரஷ்யாவில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு 26 ஆயிரம் பேர் புனித ஹஜ் பயணம் செல்கின்றனர் என்பது, குறிப்பிடத்தக்கது. தலைநகர் மாஸ்கோவில் மட்டும் குறைந்த பட்சம் 500 பேர் இவ்வாண்டு ஹஜ் பயணம் நிறைவேற்றினர்
ஒவ்வொரு முஸ்லிமின் ஐந்து கட்டாயக் கடமைகளில் இறுதிக்கடமையான ஹஜ்ஜை வழமைப் போல் ஹாஜிகள் நிறைவேற்றி முடித்திருக்கும் உன்னதமான வேளை இது. ஹாஜிகளை வரவேற்க ஒவ்வொரு முஹல்லாவும் இன்முகத்துடன் தயாராகும் வேளை.அதிக அளவில் பெண்கள் உலகம் முழுவதும் 187 நாடுகளில் இருந்து 25 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் ஹஜ் எனும் புனிதக்கடமையினை இவ்வாண்டு நிறைவேற்றியுள்ளனர்.
இதில் 50 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். உணர்ச்சி வெடிக்க கண்ணீர் பெருக்கெடுக்க தாய்மார்கள் ஹஜ் கடமையினை நிறைவேற்றியுள்ளனர். 130 கோடிக்கு மேல் ஒன்றுபட்ட ஓர் உன்னத சமூகத்தினர் நாடு, மொழி, பிராந்தியம் கடந்து ஒரே உணர்வுடன் இங்கே சங்கமித்த எண்ணும் போது ஏற்படும் உணர்ச்சிப் பெருக்கை வார்த்தைகளால் வடிக்க இயலாது என நெகிழ்கிறார் அலிகாரைச் சேர்ந்த சமிரா.
எதிரிகளுக்கும் பிரார்த்தனை
இஸ்லாம் இன்று அதைப் புரியாதவர்களால் தொடர்ந்து கருத்தியல் ரீதியாக தாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. உலக மக்கள் அனைவருக்கும் அவ்வாறு தாக்குபவர்களுக்கும் சேர்த்து, உலக அமைதிக்காகவும் தான் பிரார்த்திப்பதாக டொராண்டோவின் ரானா அஸ்கர் ஹுஸைன் கூறுகிறார்.
தீவிரவாதத்திற்கு இஸ்லாத்தில் சிறிதும் இடமில்லை. ஏனெனில் இஸ்லாம் ஒரு சுதந்திரமான மார்க்கமாகும். மனித நேயமே அதன் முக்கியக் குறிக்கோளாகும், நாம் இந்தப் பூமியிலிருந்து 'வெறுப்புணர்வு' என்ற வேண்டாத சொல்லை அகற்றுவோம். இஸ்லாமியக் கொள்கைகள், அதன் வழிமுறைகள் அனைத்தையும் அறிந்தவர்களுக்குத் தெரியும். இஸ்லாம் என்பது 'அன்பு' 'பொறுமை' போன்றவற்றின் மார்க்கமாகும் என்று நபிகள் பெருமானார்(ஸல்) அவர்களின் வாழ்வு அதற்கு சீரிய எடுத்துக்காட்டு ஆகும். இஸ்லாத்தைப் பற்றி தவறுதலான புரிந்து கொள்ளலில் முக்கியமானது முஸ்லிம்கள் பெண்களை சமமாக நடத்தவில்லை என்பதாகும்.
இஸ்லாத்தில் பெண்களுக்கு எந்த உரிமைக்குறைவும் ஏற்படவில்லை. பெண்கள் இங்கே பெருமிதத்துடனே வாழ்ந்து வருகிறோம் என்றார்.
ஒற்றுமைக்கு பிராத்தனை
மேற்குலகத்தினர் உள்நோக்கத்துடன் இஸ்லாத்தைப் பற்றி, குறை கூறுகின்றனர். அதை பொதுமைப்படுத்தவும் முயல்கின்றனர். ஆனால் ஹஜ் புனிதப் பயணத்தின் பிரார்த்தனையில் ஹாஜிகள் அனைவரும் முஸ்லிம்களின் ஒற்றுமைக்காகவும் உலக அமைதிக்காகவும் மனித குலத்துக்காகவே பிரார்த்தனை செய்து வருகின்றனர் என ஜோகன்னஸ் பர்க்கிலிருந்து வந்த ஹாஜிமா சுமையா சுலைமான் கூறுகிறார்.
முஸ்லிம்கள் அனைவரும் இஸ்லாத்தின் உயரிய மதிப்பீடுகளை உணர்ந்து பின்பற்றாததால் முஸ்லிம்கள் மீதான எதிர் மறையான கருத்தை பரப்ப காரணமாகி விட்டது என ஃபாத்திமா முஹம்மத் எனும் ஜோர்டானைச் சேர்ந்த ஹஜ் பயணி தெரிவித்தார்.
முஸ்லிம் பெண்கள் இஸ்லாத்தின் உன்னத செய்தியை உலகம் உணரும் வகையில் செயல்பட வேண்டும் என தனது எண்ணத்தை வெளிப்படுத்தினார் இந்தோனேஷியாவின் ஜாவாதீவுப் பகுதியைச் சேர்ந்த என்னாரு பீனா.
நாம் அனைவரும் பிற சமூகத்தினர் பின்பற்றும்படி இருக்க வேண்டும். உலகின் பார்வை அனைத்தும் நம்மீது படர்ந்திருக்கிறது என தெரிவித்த மொரிஷியஸைச் சேர்ந்த ஆசிரியை நதியா ரஹ்மான் 'நாம் நமது நேர்த்தியான வாழ்வியல் முறையின் மூலம் போல் அவர்களிடம் பதிலளிக்க வேண்டும்' என்றும் தெரிவித்தார்.
புனித மக்கா, மினா, அரஃபா, மதினா என அனைத்துப் பகுதிகளும் 12 லட்சத்திற்கு மேற்பட்ட முஸ்லிம் பெண்களால் திணறுகிறது.
அந்த ஆன்மீக வெள்ளைக்கடல் உலக சமாதானத்திற்காக பிரார்த்தனைகளை உள்ளம் உருக எல்லாம் வல்லவனிடம் வேண்டியது.
இந்தியாவிலிருந்து 1,50,000
இந்தியாவிலிருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் சென்றனர். மகராஷ்ட்ராவிலிருந்து 108 வயதான மூதாட்டியும் ஜார்கண்ட் மாகாணத்தின் நான்கு வயதுச் சிறுமியும் புனித ஹஜ் பயணம் செல்கின்றனர்.
இந்தியாவில் ஹஜ் புனிதப் பயணம் மேற் கொண்டவர்களுக்கு பிரதமர் மன்மோகன்சிங் வாழ்த்து தெரிவித்தார்.
அதில் 'ஹஜ் புனிதப்பயணம் செல்லும் வாய்ப்பை பெற்றவர் இறைவனின் அருள் பெற்றவர் ஆவார். ஹஜ்ஜை நிறைவேற்றச் செல்லும் அனைத்து புனிதப் பயணிகளும் சமாதனத்துக்கும் ஒற்றுமைக்கும் நாட்டில் சமய நல்லிணக்கம் நிலவவும் பிரார்த்திக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். இது இந்திய மக்கள் தான் அனைவரின் பிரார்தனையும் ஆகும் என்றும் குறிப்பிட்டார்.
இஸ்லாத்தின் செய்தி, சமாதானம் மற்றும் சகோதரத்துவம் என பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டார். இதை கோடிட்டுக்காட்டிய மன்மோகன்சிங் 'இஸ்லாம் நமது பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டு கடந்த குடியரசு தினத்தன்று நாம் பெருமையுடன் வரவேற்ற மன்னர் அப்துல்லாஹ்வின் மாட்சிமைக்கு நாங்கள் என்றும் நன்றியுடையவர்களாக இருப்போம்' என்றும் பிரதமர் ஹஜ் பயணிகளுக்கான வாழ்த்து செய்தியாக குறிப்பிட்டார். மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் அப்துர் ரஹ்மான் அந்துலே தலைமையில் இந்தியக் குழு சென்றது.
தவிப்பின் இடையே ஹஜ் கனவு நனவாகியது. (பாலஸ்தீனம்)
அடக்கு முறைகளால் நசுக்கப்பட்டுத் துன்பத்தில் உழலும் பாலஸ்தீன, மக்களுக்கும் ஹஜ் பயண வாய்ப்பு கிடைத்ததை எண்ணி பாலஸ்தீன காஸா பகுதி ஹாஜிகள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
இனவெறி இஸ்ரேலால் அடக்கி ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனம் உரிமைப் போரட்ட விவகாரத்தில் உறக்க நிலைசக்தியான ஃபதாஹ் கட்சியிடம் மாட்டித் தவித்த போது, உரிமைக்காக ஒங்கிக் குரல் கொடுத்த ஹமாஸின் கட்டுப்பாட்டிற்குள் பாலஸ்தீனம் வந்தது.
சொந்த சகோதரர்களின் தொடர் போரினால் அமைதி இழந்து தவித்தனர் பாலஸ்தீன மக்கள்.
எகிப்தின் எல்லைப் பகுதியான ரஃபாவின் அருகே காத்துக் கிடந்தனர். இஸ்ரேலின் கெடு பிடிகளையும் மீறி காத்துக் கிடந்தனர் பாலஸ்தீன மக்கள். எகிப்திய அரசு வருடத்திற்கொரு முறை காஸாப்பகுதி எல்லையை ஹாஜிகளுக்காக திறந்து விடுகிறது. இந்த ஆண்டு திறந்து விட தாமதமாகவே நவம்பர் 29 ஆம் தேதி பாலஸ்தீன மக்கள் கடும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து ரஃபா எல்லை திறந்து விடப்பட்டது.கடுமையான அழுத்தங்களுக்கும் போராட்டங்களுக்கும் பிறகும் இந்த ஆண்டு காஸா பகுதியில் 2,200 முஸ்லிம்கள் புனிதப் பயணம் சென்றனர்.
செர்பியர்களால் குதறப் பட்ட கொசோவாவில் 592 பேர் ஹஜ் புனிதப் பயணம் சென்றனர். இதில் 130 பேர் பெண்கள். 45 சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் இன்றும் வறுமைக் கோட்டிற்கு கீழான நிலையிலேயே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உழைப்பாளியின் ஹஜ்ஹஜ் பயணங்கள் குறித்த விவரங்கள் வெளிவரும் போது ஹஜ் பயணம் என்னும் இறுதி லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக செய்தது குறித்து கராச்சி அஹ்மத் இவ்வாறு குறிப்பிடுகிறார். எனது வாழ்நாள் கனவான ஹஜ்ஜை நிறைவேற்றியதை நான் பெறுதற்கரிய பாக்கியமாகக் கருதுகிறேன்.
'நான் புனித மக்கமா நகரத்தில் நுழைந்தபோது ஒட்டுமொத்த பூமியே என்னைப் பார்த்து புன்னகைப் போன்று இருந்தது எனக் கூறும் 46 வயது அஹ்மது கராச்சி பத்திரிக்கையாளர் சங்கத்தில் மின்சார தொழில்நுட்ப உதவியாளர். இவர் தனது இறுதிக் கடமையினை நிறைவேற்றுவதற்காக ஆண்டுகணக்காக 18 மணி நேரம் உழைத்தார். அதாவது வாழ்நாளில் 8 மணி நேரம் கூடுதலாக உழைத்தார். காலையில் 8 மணிக்கு வீட்டை விட்டு புறப்படும் அவர் மறுநாள் அதிகாலை இரண்டு மணிக்கு முன்பு வீடு திரும்பியதே இல்லை. அஹ்மத் மற்றும் அவரது மனைவிக்கு ஹஜ் செல்ல மூன்று லட்ச ரூபாய் ஆகும் என்பதை அறிந்தார். நான்கு மாதம் வரை அவர் தான் இந்த ஆண்டு ஹஜ் செல்வோம்' என்ற நம்பிக்கையில் இருக்க வில்லையாம். நான்கு மாதத்திற்கு முன்பு அவரிடம் வெறும் இரண்டு லட்சரூபாய் தான் இருந்ததாம். இது அவரது கடந்த பத்தாண்டுகள் உழைத்த உழைப்பின் சேமிப்பாகும்.
சரியாக மூன்று மாதத்திற்கு முன்பு அவருக்கு மின்துறை தொடர்பான பெரிய ஒப்பந்தம் ஒன்று கிடைத்தது. எழுபத்தைந்தாயிரம் ரூபாய் வருவாய் கிடைக்கும் ஒப்பந்தம் அது.
'நான் எனது ஹஜ் பயணத்திற்காகும் செலவுக்கான பணத்தை நான்கு தவணைகளாக செலுத்தினேன்' என கூறும் அவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் மனைவியும் உள்ளனர். தங்களது சின்னஞ் சிறிய சேமிப்புகளைக் கூட தங்களுக்கு உதவியதாக அவர் தெரிவித்தார். குழந்தைகள் மற்றும் மனைவியின் சேமிப்பாக 5 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. அவர் வேலைக்கு சேர்ந்தது முதல் 20 ஆண்டுகாலமாக ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காத அவரது பணி நேர்த்தியை பாராட்டி 20 ஆயிரம் ரூபாயை வழங்கி அவரது அலுவலகம் அவரை பாராட்டியது. இவை அனைத்தையும் ஹஜ் புனிதப் பயணத்திற்கான செலவாக எடுத்துக் கொண்ட அவரிடம் 'முஸ்லிம் சகோதரர்களுக்கு ஏதும் சொல்ல விரும்புகிறீர்களா?' எனக் கேட்டபோது ஒருபோதும் 'தாமதப் படுத்தாதீர்கள்' ஹஜ் கடமையை நிறைவேற்ற முனைந்தால் தாமதிக்க வேண்டாம். இறைவன் உங்களுக்கு அனைத்து வகையிலும் உதவி புரிவான்'' என்றார்.சைக்கிளில் ஹஜ்ஜுக்கு சென்ற பிரெஞ்சு மாணவர்.
முஸ்லிமின் கடமைகளில் இறுதிக் கடமையான ஹஜ்ஜை சைக்கிளில் சென்று நிறைவேற்றிய இளைஞரைப் பற்றிய பிரமிப்பூட்டும் செய்தியை நாட்டிங் ஹாம் ஈவ்னிங் போஸ்ட் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
4,500 கிலோ மீட்டர் தூரத்தை சைக்கிளிலேயே கடந்து சென்று ஹஜ் செய்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. அவரைப் போன்றே இவரும் அதீத ஆர்வத்தினால் சைக்கிள் மூலம் ஹஜ் பயணம் சென்றார்.
முதலில் இவரது சைக்கிள் ஹஜ் பயண திட்டத்தை இவரது குடும்பத்தினரும் நண்பர்களும் ஏற்றுக்கொள்ள வில்லை. அதன் பின்னர் இவரது உறுதியைப் பார்த்து பிரான்ஸின் நாட்டிங்ஹாம் நகர பள்ளிவாசல்கள் அனைத்தும் இவருக்கு ஆதரவு வழங்கின.
ஆறு மாதங்கள் மேற்கொண்ட ஹஜ் பயணத்தில் உணவு அருந்துதல் மற்றும் உறங்குது மட்டும் மிகவும் சிரமமாக இருந்தது என சலீம் குறிப்பிட்டார். ஆனால் நான் இத்தகைய கடின அனுபவங்களை எதிர்பார்த்தேன். அதனால் எனக்கு இறையருளால் அவ்வளவு கடினமாகத் தோன்றவில்லை' என தெரிவித்தார்.
சலீமின் சைக்கிள் ஹஜ் பயணம் பிரான்ஸ், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலி நகரங்கள் வரை சென்றது. அதன் பிறகும் அவரது சைக்கிள் சென்றிருக்கும் ஆனால் நிலவழிப்பாதை மிகவும் தூரம் எனவே இத்தாலிக்குப் பிறகு அவர் கடல் மார்க்கமாக துருக்கி சென்றார். துருக்கி வந்தடைந்த பிறகு சிரியா மற்றும் ஜோர்டான் நாடுகளின் வழியாக சைக்கிள் பயணம் தொடர்ந்தது. டிசம்பர் 18 ஆம் தேதி சரியாக புனித மக்காவை வந்தடையும் வண்ணம் அவரது பயணம் அமைந்திருந்தது.
சலீம் வளரும் தலைமுறையினர்களுக்கான சிறந்த எடுத்துக் காட்டாக விளங்கும் இளைஞர் என நாட்டிங்ஹாமின் கரிமிய்யா கல்விக் கூடத்தின் நிறுவனர் டாக்டர் முஷாரஃப் ஹுஸைன் தெரிவிக்கிறார்.
சைக்கிளில் ஹஜ்ஜிற்கு போன முதியவர்
25 வயது பிரெஞ்சு மாணவர் சலீமின் சிலிர்க்க வைக்கும் சைக்கிள் ஹஜ்ஜைப் பற்றி பார்க்கும்போது, கடந்த ஆண்டு சைக்கிளிலேயே ஹஜ் பயணம் சென்று வந்த முதியவர் ஒருவரின் நெகிழ வைக்கும் ஹஜ் பயணம் நினைவுக்கு வருகிறது.13 நாடுகளைக் கடந்து சென்ற அந்த ஹஜ் பயணியின் பெயர் மஹ்மூத் ஆகும். ரஷ்யர்களின் மேலாதிக்கத்தை எதிர்த்து உரிமைக்குரல் எழுப்பும் செசன்யாவைச் சேர்ந்த அவர் கொடிய தேள்கள், விஷப்பாம்புகள், வெறுப்புணர்வு கொண்ட அமெரிக்க போர் வீரர்களைத் தாண்டித்தான் அவர் தனது ஆன்மீக லட்சியத்தை அடைந்திருந்தார்.
'இவை எதுவுமே என்னை பயமுறுத்த முடியாது. ஏனெனில் நான் வல்ல அல்லாஹ்வுக்கு மட்டுமே அஞ்சுபவன்' என புன்முறுவலுடன் தெரிவித்தார்.செசன்யா தலைநகர் க்ரோஸ்னியிலிருந்து புனித மக்கா வரை 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் எனினும் அவரது சொந்த ஊரிலிருந்து 1200 கிலோ மீட்டர் தூர கூடுதலாகும்.
'ஹஜ் பயணத்தை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும் என மஹ்மூத் விருப்பம் தெரிவித்த போது அவரது தாயார் அதற்கான பொருளாதார பலம் இல்லை என மனம் சோர்வடைந்து விடாதே. உன்னிடம் சைக்கிள் இருக்கிறதல்லவா?' எனக் கூறியதை கண்ணீருடன் நினைவு கூர்கிறார் மஹ்மூத்.
சைக்கிள் செயின் 11ம்; சைக்கிள் ட்யூப்பும் அவசரத்திற்கு உதவும் என்று எடுத்துச் சென்றார்.
இவர் அமெரிக்க ஆக்கிரமிப்பில் இருக்கும் ஈராக் வழியாகச் சென்றபோது அமெரிக்க ராணுவத்தினர் இவரிடம் மோசமாக நடந்து கொண்டனர். ரஷ்யப் பன்றியே என அழைத்து இவரது சைக்கிளை உடைத்துப் போட்டனர். 'நான் ரஷ்யப் பன்றி அல்ல. முஸ்லிம் அல்லாஹ்வின் அடிமை' என நிலம் அதிரக் கூறியிருக்கிறார். தன்னுடைய பாஸ்போர்ட்டையும் அமெரிக்க ராணுவ வீரர்கள் பறித்துக் கொண்டதோடு ஈராக்கின் வழியாகச் செல்லக் கூடாது என மிரட்டி விரட்டியும் விட்டனர். அதனைத் தொடர்ந்து ஈராக்கை சுற்றிச் சென்று ஈரான், ஆர்மீனியா, ஜார்ஜியா வழியாகவும் துருக்கி மற்றும் ஜோர்டான் வழியாக மக்கா சென்றார்.
இறுதிக் கடமையினை நிறைவேற்றி இறைவனின் ஆணையையும், அன்னையின் ஆசையையும் நிறைவேற்றிவிட்ட இந்த 63 வயது பெரியவரின் சைக்கிள் ஹஜ் நெகிழ்வூட்டுகிறதல்லவா?
இயற்கை சீற்றத்திலும் இறை கட்டளை மறவாத பங்களா தேஷ் மக்கள்
ஹஜ் பயணம் செல்வதில் மூன்றாவது இடம் வகிக்கும் பங்களாதேஷில் இவ்வாண்டு 46 ஆயிரம் பேர் ஹஜ் பயணம் செல்கின்றனர். கடந்த ஆண்டு 60 ஆயிரம் பேர் ஹஜ் பயணம் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு ரஷ்யாவில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு 26 ஆயிரம் பேர் புனித ஹஜ் பயணம் செல்கின்றனர் என்பது, குறிப்பிடத்தக்கது. தலைநகர் மாஸ்கோவில் மட்டும் குறைந்த பட்சம் 500 பேர் இவ்வாண்டு ஹஜ் பயணம் நிறைவேற்றினர்
Wednesday, December 12, 2007
அயோத்தியில் ஆர்ப்பரிப்போம்!அபூசாலிஹ்
உலகம் முழுவதும் வாழும் மனித சமூகத்தின் மத்தியில் இந்தியாவின் புகழை மாசுப்படுத்திய பாபர் மஸ்ஜித் தகர்ப்பு என்ற கொடூர நிகழ்வு நடந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.
இந்தியாவின் தேசத்தந்தை என்று போற்றப்பட்ட காந்தியின் படுகொலைக்குப் பிறகு ஒட்டுமொத்த இந்தியாவே பதறிய, கதறிய நிகழ்வாக அது அமைந்து விட்டது.
நாட்டின் எங்காவது ஒரு மூலையில் ஒரு சிலை சேதப்படுத்தப்பட்டால் உடனே அந்தப் பிராந்தியமே கலவரத்தால் கொந்தளிக்கும். சமூக மோதல்களுக்கு அடிக்கல் நடப்படும். வன்முறை தலை விரித்தாடும். வாகனங்கள் எல்லாம் தீக்கிரையாக்கப் படும். உடனே வட்டாட்சியரும், கோட்டாட்சியரும் வாரிச் சுருட்டிக் கொண்டு சம்பவ இடத்திற்கு, ஆர்ப் பாட்டக்காரர்களின் தாடையைப் பிடித்து தாங்காத குறையாக தாஜா செய்வார்கள். சேதப்படுத்தப்பட்ட 'சிலை' உடனடியாக அரசு செலவில் வைக்கப்படும் என வாக்குறுதிகள் தந்த பின்னரே சகஜ நிலைக்கு அந்தப் பகுதி திரும்பும். இது நாம் அடிக்கடி காணும் நம் நாட்டு நிலவரம். ஆனால் முஸ்லிம்கள் இந்த நாட்டின் மீதும் நாட்டு மக்களின் மீதும், நீதிமன்ற அமைப்புகளின் மீதும் முழுமையாக நம்பிக்கை வைத்து இந்தியப் பேரரசு பாப்ரி மஸ்ஜித்துக்கு எத்தகைய ஊறும் நிகழாமல் பார்த்துக் கொள்ளும் என நிம்மதியுடன் இருந்த வேளையில்தான் 20ஆம் நூற்றாண்டின் நம்பர் ஒன் பேடித்தனம் நம்பவே முடியாத கோழைத்தனம் நடந்தது.
முஸ்லிம்கள் நம்பிக்கையுடன் இருந்தவேளையில் தான் இந்த ''நம்பிக்கைத் துரோகம்'' நடந்தது.
முஸ்லிம்கள் அவ்வாறு பொறுமை காட்டியதும், அளவுக்கு மீறிய நம்பிக்கை வைத்ததும் தான் தவறோ என பிறகு நினைக்கும் அளவுக்கு பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு சதிச் செயல் நடந்தது.
மேற்படியாளர்களை நம்பாமல் முஸ்லிம்கள் தன் கையே தனக்குதவி என 1992 டிசம்பர் 6 அன்று அயோத்தியை நோக்கி புறப்பட்டிருந் தால் பாப்ரி மஸ்ஜிதின் ஒரு செங் கல்லைக் கூட எந்த மனிதப் பதராலும் அசைத்திருக்க முடியாது. முஸ்லிம்களின் பிணங்களைத் தாண்டித் தான் அந்த பிண்டங்கள் செல்ல வேண்டும் என்ற நிலை அன்று ஏற்பட்டிருக்கக் கூடும்.
அரசு அமைப்புகளின் மீதும் நாட்டின் உயரிய மாண்புகளின் மீதும் வைத்திருந்த மதிப்பீட்டின் காரணமாக, மதிப்புமிக்க பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப் பட்டு மண்மேடாக்கப்பட்டது.அன்று ஏமாற்றப்பட்ட இந்த திருச்சமூகம் அதிர்ச்சியிலிருந்து மீளவேயில்லை என்பதை 15 ஆண்டு களுக்குப் பிறகும் 2007 டிசம்பர்6லும் இந்த நாடும் மக்களும் உணர்ந்து கொண்டனர்.
நிலம் யாருக்குச் சொந்தம் என தீர்ப்பளிக்கப்படாமல் நெடிய 49 ஆண்டுகள். இடிக்கப்பட்ட பின்பு இடிக்கப்பட்ட மஸ்ஜிதைக் கட்டாமலும், இடித்த சதிகாரர்களை தண்டிக்க மனமில்லாமலும் 15 ஆண்டுகள் கழிந்தன.
பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட நான்காவது நாளே சதிச் செயல் குறித்து விசாரிக்க லிபர்ஹான் ஆணையம் 'நயவஞ்சக திலகம்' நரசிம்மராவால் அமைக்கப்பட்டது. 10.12.1992ல் அமைக்கப்பட்ட லிபர்ஹான் ஆணையம் 16ஆம் தேதி தனது கடமையைத் (?) தொடங்கியது.
ஆம், தங்களது ஒத்தி வைப்பு வைபவத்தை தொடங்கியது. அன்றிலிருந்து இன்றுவரை 42 தடவை ஒத்தி வைக்கப்பட்டது.
43ஆவது தடவையும் லிபர்ஹான் ஆணையம் கூடும்; ஒத்திவைப்பில் மேலும் ஒரு எண்ணிக்கைக் கூடும், கிரிக்கெட் வீரர்களைப் பார்த்து இவர்களுக்கு என்ன பொறாமையோ தெரியவில்லை? ஒத்திவைப்பு விவகாரத்தில் செஞ்சுரி அடிக்கும் அளவுக்கு லிபர்ஹான் ஆணையம் முனைவது வெட்கக் கேடல்லவா?
இதுவரை 330 அமர்வுகள் நடத்தப்பட்டு விட்டன. இன்னும் நீதி நிலைநாட்டப்படவும் இல்லை. அநீதி 'பிடுங்கி' எறியப்படவும் இல்லை.
இதுவரை கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவிடப்பட்டு விட்டது. நீதிபதி லிபர்ஹானின் ஊதியமாக இதுவரை 37 லட்சரூபாயும், அலவன் சாக 34 லட்ச ரூபாயும் (தண்ட) செலவு செய்யப்பட்டிருக்கிறது. நீதி இதுவரை கானல் நீராகவே உள்ளது.
15 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் முதல் சாட்சியிடம் விசாரணையைத் தொடங்கியிருக்கிறார் கள். அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, வினய் கட்டியார், சாத்வி ரிதம்பரா, அசோக் சிங்கால் உள்ளிட்ட குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
கடந்த பாஜக ஆட்சியில் பாப்ரி மஸ்ஜித் வழக்கில் இருந்து அத்வானி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர்.
2004 ஆம் ஆண்டு டிசம்பர் 6 அன்று உரிமை மீட்பு இயக்கமாம் தமுமுக டெல்லியில் கண்டனப் பேரணி நடத்தியது. பிரதமர் மன்மோகன் சிங்கை தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமை யிலான குழு சந்தித்தது. மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகள் தப்பிவிடக் கூடாது. பாஜக ஆட்சியில் நிகழ்ந்த அந்த அநீதி சரி செய்யப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
பிரதமரிடம் தமுமுக கோரிக்கை வலியுறுத்தப்பட்டு தமுமுக உரிமைப் போராளிகள் சென்னை வந்து சேரும் முன்பேலிபாப்ரி மஸ்ஜித் இடிப்பு குற்றவாளிகள் சி.பி.ஐயின் பட்டியலில் மீண்டும் சேர்க்கப்பட்டனர்.
ஆனால் ஆரம்ப சூரத்தனம் காட்டிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அதன்பிறகு பாராமுகமாக இருந்தது. தமுமுகவின் நீதிமன்ற முற்றுகைக்குப் பிறகு இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த காவல்துறை உதவி ஆய்வாளர் அனுமன் பிரசாத்திடம் இப்போதுதான் விசாரணைத் தொடங்கியுள்ளது.
முதலில் வழக்குப் பதிவு செய்தது இவர்தான். 1992 டிசம்பரில் பெரிய கூட்டமாக வந்ததால் சாட்சிகளை அடையாளம் காண சிரமம் ஏற்பட்ட தாக சிபிஐ கூறியுள்ளது. அதாவது 15 ஆண்டுகளாக சாட்சிகள் அடையாளம் காணப்படவில்லையாம். இது மத்திய புலனாய்வுக் குழுவின் அசட்டையா? இவர்களை வேலை வாங்குவோரின் கையாலாகாத் தன்மையா? கண்டும் காணாதிருக்கும் யுக்தியா? என நடுநிலையாளர்கள், நாட்டு மக்கள் வேதனை தெரிவிக் கின்றனர்.
இந்நிலையில் பாபரி பள்ளிவாசலை இடித்த குற்றவாளிகளான அத்வானி, உமா பாரதி உள்ளிட்டோரை விசாரிக்கும் ரேய்பரேலி நீதிமன்றத்தில் டிசம்பர் 5 ஆம் தேதி நான்கு குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த வழக்கு விசாரணையை பிடிக்காத ஏதோ ஒரு சக்திதான் இந்த குண்டு வெடிப்பின் பின்னணியில் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஆனால் வெறும் பட்டாசு வகையைச் சேர்ந்தது என புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதிகள் எத்தகைய ரூபத்தில் உலா வருகின்றார்கள் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.
ஐந்து குண்டுகள் டிசம்பர் 6ல் கண்டு பிடிக்கப்பட்டன. காவல்துறையினர் ராஜாராம் லோத் என்பவரை வளைத்துப் பிடித்து கைது செய்தனர்.கண்டுபிடிக்கப்பட்ட குண்டுகள் திருமண ஊர்வலங்களில் பயன்படுத்தப் படும் பட்டாசு வகையைச் சேர்ந்தவை என்றும் கைது செய்யப்பட்ட ராஜாராம் லோத் எந்த பயங்கரவாத இயக்கத்துட னும் தொடர்புடையவர் அல்ல என்றும் காவல்துறை கண்காணிப்பாளர் மொகித் அகர்வால் தெரிவித்திருக்கிறார். ரொம்ப காலமாக நிலுவையில் இருக்கும் தனது வழக்கிற்காகவே ராஜராம் லோத் அங்கு வந்திருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். ஒருவேளை பிடிபட்டவன் முஸ்லிமாக இருந்தால் இந்த சாதாரணக் கதை 'மர்மக் கதை'யாக மாறியிருக்கும்.
நாடாளுமன்றத்தில்..
பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. நீதி நிலை நாட்டப்படவில்லை. அநீதி 'பிடுங்கி' எறியப்படவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு டிசம்பர் 6 அன்று நாடாளு மன்றத்தில் இந்தப் பிரச்சினை வெடித்தது.மாநிலங்களவை இந்தப் பிரச்சினை யால் இரண்டுமுறை தள்ளி வைக்கப் பட்டது. மக்களவையில் அன்றைய அலுவல்களுக்கான பட்டியலை, சபாநாயகர் அவை துவக்கத்தில் பார்வையிடத் தொடங்கும் போது பாஜக உறுப்பினர்கள் ஜெய் ஸ்ரீராம் என கோஷம் எழுப்பத் தொடங்கினர்.
உடனே, வெகுண்டெழுந்த சமாஜ் வாடிக் கட்சி உறுப்பினர்கள் 16ஆம் நூற்றாண்டின் வரலாற்று சிறப்பு மிக்க பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் எனக் குரல் எழுப்பினர்.
ராஜ்யசபாவில் சமாஜ்வாடி கட்சியின் ஷஹீத் சித்திக்கி மற்றும் அபூ அஸ்மியும் முழக்கங்களை எழுப்பினர். லிபர்ஹான் கமிஷன் ஆணையத்தின் அறிக்கைகளை உடனடியாக நாடாளு மன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தொடர் முழக்கங்கள் எழுப்பினர்.
நாடாளுமன்ற பிரதான வாசலில் இடதுசாரி கட்சியினரும், சமாஜ்வாடி கட்சியினரும் தெலுங்கு தேசக் கட்சி யினரும் பாப்ரி மஸ்ஜித் இடிப்பு குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என கோஷமிட்டனர்.
'ஜனநாயகப் படுகொலையாளர்களை தூக்கிலிடு, பாப்ரி மஸ்ஜித் இடிப்பு குற்றவாளிகளை கைது செய், என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பதாகைகள் உயர்த்திப் பிடிக்கப்பட்டன.
பாப்ரி மஸ்ஜித் இடத்தை முஸ்லிம் களிடம் ஒப்படைலிபிரிட்டன் வாழ் இந்திய முஸ்லிம்கள் கோரிக்கை பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு மற்றும் குஜராத்தில் நிகழ்ந்த இனப்படுகொலை போன்றவற்றுக்கு எதிரான உறுதியான நடவடிக்கையினை இந்திய அரசு மேற் கொள்ள வேண்டும் என பிரிட்டனின் இந்திய முஸ்லிம் கவுன்சில் தலைவர் முஹம்மத் முனாஃப் தெரிவித்தார்.
பாப்ரி மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் அரசு ஒப்படைக்க வேண்டும், முஸ்லிம்கள் அந்த இடத்தில் பாப்ரி மஸ்ஜிதை மீண்டும் கட்டிக் கொள்வார் கள் லி என்ற முஹம்மத் முனாஃப், 1528ல் முகலாயப் பேரரசர் பாபரின் கவர்னரால் அயோத்தியில் மஸ்ஜித் கட்டப்பட்டது. பாபரின் படைகள் பதான் மன்னர் சிக்கந்தர் லோடியை வெற்றிக்கொண்ட தின் விளைவாக அயோத்தியில் கட்டப்பட்ட மஸ்ஜித்துக்கு பாப்ரி மஸ்ஜித் என பெயரிடப்பட்டது. பாபர் அயோத் திக்குச் சென்றதாகவோ அப்போது ராமர் கோவில் அந்த இடத்தில் இருந்ததா கவோ ஆதாரம் இல்லை எனக் கூறினார். முதலில் மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும் என உறுதியுடன் முனாஃப் தெரிவித்தார்.
ஹைதராபாத்தில் கடையடைப்பு
பழைய ஹைதராபாத் நகரில் முழுமையான கடையடைப்பு நடந்தது. சார்மினார் மற்றும் மக்கா மஸ்ஜித் பகுதிகள் வெறிச்சோடிச் காணப்பட்டன. அனைத்துக் கட்டடங்களின் மீதும் கறுப்புக் கொடிகள் பறந்தன. முழு அடைப்பிற்கு ஹைதராபாத்தின் முக்கியக் கட்சியான மஜ்லிúஸ இத்திஹாதுல் முஸ்லிமீன் அமைப்பு அழைப்பு விடுத்தது.
இந்தியா முழுவதும் பாப்ரி மஸ்ஜிதை மீண்டும் கட்டமைக்க வேண்டும் என்ற போராட்டங்கள் நடைபெற்றன.
இந்திய மக்கள் அனைவரும் மத வேறுபாடின்றி பாப்ரி மஸ்ஜித் விவகாரத் தில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக அணிவகுத்தனர்.
பாப்ரி மஸ்ஜிதை மீண்டும் கட்டி யெழுப்ப வேண்டும் என்பதை ஜனநாயகரீதியில் பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி 13 ஆண்டுகளாக தமுமுக போராட்டம் நடத்தி வருகிறது.
அதுவரை பாப்ரி மஸ்ஜித் விவகாரத் தில் கறுப்புக் கொடி ஏற்றுதல் கறுப்புநாள் என அறிவித்தல் என்பதோடு தங்கள் கடமை முடிந்து விட்டது என அன்றைய முஸ்லிம் அமைப்புகள் கருதின. டிசம்பர் 6 வருவதற்கு முன்பாகவே முஸ்லிம் இளைஞர்களை வளைத்துப் பிடித்து காவல்துறை கைது செய்வதும் நடக்கும். காவல்துறை யினரின் அதிரடி சோதனைகளால் பல்வேறு இடங்களில் முஸ்லிம்களுக்கு துயரங்கள் தொடர்ந்தன.
மஸ்ஜிதை இடித்தவர்களை எதுவும் செய்யாமல் விட்டுவிட்டு மஸ்ஜிதை இழந்த மக்களை துன்புறுத்திய கொடுமை தொடர்ந்த போது வெகுண் டெழுந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் பிரச்சினையை அதன் பீடத்திலேயே சந்திக்க ஆயத்த மாகியது.
தேடித்தேடி கைது செய்கிறாயா வா, வந்து இனி எங்களை கைது செய், கைது செய்து கைது செய்து களைத்துப் போவாய்' எனக் கூறி அதிரடியாய் இறங்கிய தமுமுக உரிமைப் போராளி களின் படை அதுவரை காவல்துறை நடத்திய டிசம்பர் 6 அடாவடித் தனங்களை சந்திக்க முடிவு செய்தது. தேடித்தேடி கைது செய்த காவல்துறை, ஆயிரக்கணக்கில் திரண்ட முஸ்லிம் இளைஞர்களைக் கண்டு திணறித்தான் போனது.
தமுமுகவின் எழுச்சியால், டிசம்பர் 6ஐ காரணம் வைத்து நசுக்கும் அதிகார வர்க்கம் தனது எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை வந்தது.தலைநகர் தொடங்கி பட்டி தொட்டி யெங்கும் நடைபெற்ற டிசம்பர் 6 போராட்டங்களின் மூலம் தமிழகம் கிடுகிடுக்கத் தொடங்கியது.
டிசம்பர் 6 வந்தால் துரத்தி துரத்தி கைது செய்யப்பட்ட இளைஞர்கள் ஜனநாயக ரீதியிலான போராட்டங் களால் தன்னெழுச்சியாக பாப்ரி மஸ்ஜிதைக் கட்டித் தரவேண்டும் என போராடி கைதாயினர்.
தமுமுகவின் இந்த அறப்போராட்ட எழுச்சி பற்றிப் பரவிய எழுச்சித் தீ திக்கென பரவியது.
கடந்த ஆண்டு 42 இடங்களில் தமுமுக உரிமைப் போராளிகள் கறுப்புக் கொடிகளுடன் நெருப்பு விழிகளுடன் போராட்டக் களம் புகுந்தனர்.
அதனைத் தொடர்ந்து சில வாரங் களிலேயே அமெரிக்க கொடுங்கோலர் களால் மாவீரன் சதாம் ஹுஸைன் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டு ஆர்த்தெழுந்த கழகம் அறுபதுக்கு மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டங் களை நடத்தியது.
கடந்த ஆண்டு சில வாரங்களுக்கு இடையே ஏற்பட்ட எழுச்சி இந்த ஆண்டு சில நாட்களிலேயே நிகழ்த்திக் காட்டி விட்டனர் கழகக் கண்மணிகள்.
வரலாற்று திருப்புமுனையாய் திகழ்ந்த நன்றியறிவிப்பு மாநாட்டை நவம்பர் 24ல் பல்லாயிரக்கணக்கில் மக்களை திரட்டி நடத்திக் காட்டி சென்னையை திணறடித்த பின்னர் சில நாட்களிலேயே டிசம்பர் 6 போராட்டத் தினை சென்னை உயர்நீதிமன்றம் தொடங்கி மாவட்ட நீதிமன்றங்கள் வரை முற்றுகையும் ஆர்ப்பாட்டமும் நடத்தி தேசிய அளவில் கவன ஈர்ப்பை ஏற்படுத்தி விட்டது தமுமுக.
தமுமுகவின் டெல்லிப் பேரணி, முஸ்லிம் அமைப்புகளுக்கு தன்னம்பிக் கையையும் ஒரு புத்தெழுச்சியையும் ஏற்படுத்தியது.
இதனை நிரூபிக்கும் விதமாக டெல்லியில் முஸ்லிம் அமைப்புகள் டிசம்பர் 6 போராட்டத்தினை முன்னெடுத் துள்ளன. தமுமுக, முஸ்லிம் இயக்கங் களுக்கு முன்னோடி இயக்கமாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுவிட்டது.
ஆண்டுகள் 15 கழிந்து விட்ட போதிலும் பாப்ரி மஸ்ஜிதை மீண்டும் கட்டும் அறப்போர் களத்தில் வீரியத் துடன் போராடுவோம். எத்தகைய தியாகத்தையும் செய்து அயோத்தியில் இறைவனின் இல்லத்தை விரைவில் கட்டுவோம் (இன்ஷா அல்லாஹ்) என தமுமுக சூளுரைக்கிறது
உலகம் முழுவதும் வாழும் மனித சமூகத்தின் மத்தியில் இந்தியாவின் புகழை மாசுப்படுத்திய பாபர் மஸ்ஜித் தகர்ப்பு என்ற கொடூர நிகழ்வு நடந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.
இந்தியாவின் தேசத்தந்தை என்று போற்றப்பட்ட காந்தியின் படுகொலைக்குப் பிறகு ஒட்டுமொத்த இந்தியாவே பதறிய, கதறிய நிகழ்வாக அது அமைந்து விட்டது.
நாட்டின் எங்காவது ஒரு மூலையில் ஒரு சிலை சேதப்படுத்தப்பட்டால் உடனே அந்தப் பிராந்தியமே கலவரத்தால் கொந்தளிக்கும். சமூக மோதல்களுக்கு அடிக்கல் நடப்படும். வன்முறை தலை விரித்தாடும். வாகனங்கள் எல்லாம் தீக்கிரையாக்கப் படும். உடனே வட்டாட்சியரும், கோட்டாட்சியரும் வாரிச் சுருட்டிக் கொண்டு சம்பவ இடத்திற்கு, ஆர்ப் பாட்டக்காரர்களின் தாடையைப் பிடித்து தாங்காத குறையாக தாஜா செய்வார்கள். சேதப்படுத்தப்பட்ட 'சிலை' உடனடியாக அரசு செலவில் வைக்கப்படும் என வாக்குறுதிகள் தந்த பின்னரே சகஜ நிலைக்கு அந்தப் பகுதி திரும்பும். இது நாம் அடிக்கடி காணும் நம் நாட்டு நிலவரம். ஆனால் முஸ்லிம்கள் இந்த நாட்டின் மீதும் நாட்டு மக்களின் மீதும், நீதிமன்ற அமைப்புகளின் மீதும் முழுமையாக நம்பிக்கை வைத்து இந்தியப் பேரரசு பாப்ரி மஸ்ஜித்துக்கு எத்தகைய ஊறும் நிகழாமல் பார்த்துக் கொள்ளும் என நிம்மதியுடன் இருந்த வேளையில்தான் 20ஆம் நூற்றாண்டின் நம்பர் ஒன் பேடித்தனம் நம்பவே முடியாத கோழைத்தனம் நடந்தது.
முஸ்லிம்கள் நம்பிக்கையுடன் இருந்தவேளையில் தான் இந்த ''நம்பிக்கைத் துரோகம்'' நடந்தது.
முஸ்லிம்கள் அவ்வாறு பொறுமை காட்டியதும், அளவுக்கு மீறிய நம்பிக்கை வைத்ததும் தான் தவறோ என பிறகு நினைக்கும் அளவுக்கு பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு சதிச் செயல் நடந்தது.
மேற்படியாளர்களை நம்பாமல் முஸ்லிம்கள் தன் கையே தனக்குதவி என 1992 டிசம்பர் 6 அன்று அயோத்தியை நோக்கி புறப்பட்டிருந் தால் பாப்ரி மஸ்ஜிதின் ஒரு செங் கல்லைக் கூட எந்த மனிதப் பதராலும் அசைத்திருக்க முடியாது. முஸ்லிம்களின் பிணங்களைத் தாண்டித் தான் அந்த பிண்டங்கள் செல்ல வேண்டும் என்ற நிலை அன்று ஏற்பட்டிருக்கக் கூடும்.
அரசு அமைப்புகளின் மீதும் நாட்டின் உயரிய மாண்புகளின் மீதும் வைத்திருந்த மதிப்பீட்டின் காரணமாக, மதிப்புமிக்க பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப் பட்டு மண்மேடாக்கப்பட்டது.அன்று ஏமாற்றப்பட்ட இந்த திருச்சமூகம் அதிர்ச்சியிலிருந்து மீளவேயில்லை என்பதை 15 ஆண்டு களுக்குப் பிறகும் 2007 டிசம்பர்6லும் இந்த நாடும் மக்களும் உணர்ந்து கொண்டனர்.
நிலம் யாருக்குச் சொந்தம் என தீர்ப்பளிக்கப்படாமல் நெடிய 49 ஆண்டுகள். இடிக்கப்பட்ட பின்பு இடிக்கப்பட்ட மஸ்ஜிதைக் கட்டாமலும், இடித்த சதிகாரர்களை தண்டிக்க மனமில்லாமலும் 15 ஆண்டுகள் கழிந்தன.
பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட நான்காவது நாளே சதிச் செயல் குறித்து விசாரிக்க லிபர்ஹான் ஆணையம் 'நயவஞ்சக திலகம்' நரசிம்மராவால் அமைக்கப்பட்டது. 10.12.1992ல் அமைக்கப்பட்ட லிபர்ஹான் ஆணையம் 16ஆம் தேதி தனது கடமையைத் (?) தொடங்கியது.
ஆம், தங்களது ஒத்தி வைப்பு வைபவத்தை தொடங்கியது. அன்றிலிருந்து இன்றுவரை 42 தடவை ஒத்தி வைக்கப்பட்டது.
43ஆவது தடவையும் லிபர்ஹான் ஆணையம் கூடும்; ஒத்திவைப்பில் மேலும் ஒரு எண்ணிக்கைக் கூடும், கிரிக்கெட் வீரர்களைப் பார்த்து இவர்களுக்கு என்ன பொறாமையோ தெரியவில்லை? ஒத்திவைப்பு விவகாரத்தில் செஞ்சுரி அடிக்கும் அளவுக்கு லிபர்ஹான் ஆணையம் முனைவது வெட்கக் கேடல்லவா?
இதுவரை 330 அமர்வுகள் நடத்தப்பட்டு விட்டன. இன்னும் நீதி நிலைநாட்டப்படவும் இல்லை. அநீதி 'பிடுங்கி' எறியப்படவும் இல்லை.
இதுவரை கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவிடப்பட்டு விட்டது. நீதிபதி லிபர்ஹானின் ஊதியமாக இதுவரை 37 லட்சரூபாயும், அலவன் சாக 34 லட்ச ரூபாயும் (தண்ட) செலவு செய்யப்பட்டிருக்கிறது. நீதி இதுவரை கானல் நீராகவே உள்ளது.
15 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் முதல் சாட்சியிடம் விசாரணையைத் தொடங்கியிருக்கிறார் கள். அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, வினய் கட்டியார், சாத்வி ரிதம்பரா, அசோக் சிங்கால் உள்ளிட்ட குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
கடந்த பாஜக ஆட்சியில் பாப்ரி மஸ்ஜித் வழக்கில் இருந்து அத்வானி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர்.
2004 ஆம் ஆண்டு டிசம்பர் 6 அன்று உரிமை மீட்பு இயக்கமாம் தமுமுக டெல்லியில் கண்டனப் பேரணி நடத்தியது. பிரதமர் மன்மோகன் சிங்கை தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமை யிலான குழு சந்தித்தது. மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகள் தப்பிவிடக் கூடாது. பாஜக ஆட்சியில் நிகழ்ந்த அந்த அநீதி சரி செய்யப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
பிரதமரிடம் தமுமுக கோரிக்கை வலியுறுத்தப்பட்டு தமுமுக உரிமைப் போராளிகள் சென்னை வந்து சேரும் முன்பேலிபாப்ரி மஸ்ஜித் இடிப்பு குற்றவாளிகள் சி.பி.ஐயின் பட்டியலில் மீண்டும் சேர்க்கப்பட்டனர்.
ஆனால் ஆரம்ப சூரத்தனம் காட்டிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அதன்பிறகு பாராமுகமாக இருந்தது. தமுமுகவின் நீதிமன்ற முற்றுகைக்குப் பிறகு இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த காவல்துறை உதவி ஆய்வாளர் அனுமன் பிரசாத்திடம் இப்போதுதான் விசாரணைத் தொடங்கியுள்ளது.
முதலில் வழக்குப் பதிவு செய்தது இவர்தான். 1992 டிசம்பரில் பெரிய கூட்டமாக வந்ததால் சாட்சிகளை அடையாளம் காண சிரமம் ஏற்பட்ட தாக சிபிஐ கூறியுள்ளது. அதாவது 15 ஆண்டுகளாக சாட்சிகள் அடையாளம் காணப்படவில்லையாம். இது மத்திய புலனாய்வுக் குழுவின் அசட்டையா? இவர்களை வேலை வாங்குவோரின் கையாலாகாத் தன்மையா? கண்டும் காணாதிருக்கும் யுக்தியா? என நடுநிலையாளர்கள், நாட்டு மக்கள் வேதனை தெரிவிக் கின்றனர்.
இந்நிலையில் பாபரி பள்ளிவாசலை இடித்த குற்றவாளிகளான அத்வானி, உமா பாரதி உள்ளிட்டோரை விசாரிக்கும் ரேய்பரேலி நீதிமன்றத்தில் டிசம்பர் 5 ஆம் தேதி நான்கு குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த வழக்கு விசாரணையை பிடிக்காத ஏதோ ஒரு சக்திதான் இந்த குண்டு வெடிப்பின் பின்னணியில் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஆனால் வெறும் பட்டாசு வகையைச் சேர்ந்தது என புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதிகள் எத்தகைய ரூபத்தில் உலா வருகின்றார்கள் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.
ஐந்து குண்டுகள் டிசம்பர் 6ல் கண்டு பிடிக்கப்பட்டன. காவல்துறையினர் ராஜாராம் லோத் என்பவரை வளைத்துப் பிடித்து கைது செய்தனர்.கண்டுபிடிக்கப்பட்ட குண்டுகள் திருமண ஊர்வலங்களில் பயன்படுத்தப் படும் பட்டாசு வகையைச் சேர்ந்தவை என்றும் கைது செய்யப்பட்ட ராஜாராம் லோத் எந்த பயங்கரவாத இயக்கத்துட னும் தொடர்புடையவர் அல்ல என்றும் காவல்துறை கண்காணிப்பாளர் மொகித் அகர்வால் தெரிவித்திருக்கிறார். ரொம்ப காலமாக நிலுவையில் இருக்கும் தனது வழக்கிற்காகவே ராஜராம் லோத் அங்கு வந்திருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். ஒருவேளை பிடிபட்டவன் முஸ்லிமாக இருந்தால் இந்த சாதாரணக் கதை 'மர்மக் கதை'யாக மாறியிருக்கும்.
நாடாளுமன்றத்தில்..
பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. நீதி நிலை நாட்டப்படவில்லை. அநீதி 'பிடுங்கி' எறியப்படவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு டிசம்பர் 6 அன்று நாடாளு மன்றத்தில் இந்தப் பிரச்சினை வெடித்தது.மாநிலங்களவை இந்தப் பிரச்சினை யால் இரண்டுமுறை தள்ளி வைக்கப் பட்டது. மக்களவையில் அன்றைய அலுவல்களுக்கான பட்டியலை, சபாநாயகர் அவை துவக்கத்தில் பார்வையிடத் தொடங்கும் போது பாஜக உறுப்பினர்கள் ஜெய் ஸ்ரீராம் என கோஷம் எழுப்பத் தொடங்கினர்.
உடனே, வெகுண்டெழுந்த சமாஜ் வாடிக் கட்சி உறுப்பினர்கள் 16ஆம் நூற்றாண்டின் வரலாற்று சிறப்பு மிக்க பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் எனக் குரல் எழுப்பினர்.
ராஜ்யசபாவில் சமாஜ்வாடி கட்சியின் ஷஹீத் சித்திக்கி மற்றும் அபூ அஸ்மியும் முழக்கங்களை எழுப்பினர். லிபர்ஹான் கமிஷன் ஆணையத்தின் அறிக்கைகளை உடனடியாக நாடாளு மன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தொடர் முழக்கங்கள் எழுப்பினர்.
நாடாளுமன்ற பிரதான வாசலில் இடதுசாரி கட்சியினரும், சமாஜ்வாடி கட்சியினரும் தெலுங்கு தேசக் கட்சி யினரும் பாப்ரி மஸ்ஜித் இடிப்பு குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என கோஷமிட்டனர்.
'ஜனநாயகப் படுகொலையாளர்களை தூக்கிலிடு, பாப்ரி மஸ்ஜித் இடிப்பு குற்றவாளிகளை கைது செய், என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பதாகைகள் உயர்த்திப் பிடிக்கப்பட்டன.
பாப்ரி மஸ்ஜித் இடத்தை முஸ்லிம் களிடம் ஒப்படைலிபிரிட்டன் வாழ் இந்திய முஸ்லிம்கள் கோரிக்கை பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு மற்றும் குஜராத்தில் நிகழ்ந்த இனப்படுகொலை போன்றவற்றுக்கு எதிரான உறுதியான நடவடிக்கையினை இந்திய அரசு மேற் கொள்ள வேண்டும் என பிரிட்டனின் இந்திய முஸ்லிம் கவுன்சில் தலைவர் முஹம்மத் முனாஃப் தெரிவித்தார்.
பாப்ரி மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் அரசு ஒப்படைக்க வேண்டும், முஸ்லிம்கள் அந்த இடத்தில் பாப்ரி மஸ்ஜிதை மீண்டும் கட்டிக் கொள்வார் கள் லி என்ற முஹம்மத் முனாஃப், 1528ல் முகலாயப் பேரரசர் பாபரின் கவர்னரால் அயோத்தியில் மஸ்ஜித் கட்டப்பட்டது. பாபரின் படைகள் பதான் மன்னர் சிக்கந்தர் லோடியை வெற்றிக்கொண்ட தின் விளைவாக அயோத்தியில் கட்டப்பட்ட மஸ்ஜித்துக்கு பாப்ரி மஸ்ஜித் என பெயரிடப்பட்டது. பாபர் அயோத் திக்குச் சென்றதாகவோ அப்போது ராமர் கோவில் அந்த இடத்தில் இருந்ததா கவோ ஆதாரம் இல்லை எனக் கூறினார். முதலில் மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும் என உறுதியுடன் முனாஃப் தெரிவித்தார்.
ஹைதராபாத்தில் கடையடைப்பு
பழைய ஹைதராபாத் நகரில் முழுமையான கடையடைப்பு நடந்தது. சார்மினார் மற்றும் மக்கா மஸ்ஜித் பகுதிகள் வெறிச்சோடிச் காணப்பட்டன. அனைத்துக் கட்டடங்களின் மீதும் கறுப்புக் கொடிகள் பறந்தன. முழு அடைப்பிற்கு ஹைதராபாத்தின் முக்கியக் கட்சியான மஜ்லிúஸ இத்திஹாதுல் முஸ்லிமீன் அமைப்பு அழைப்பு விடுத்தது.
இந்தியா முழுவதும் பாப்ரி மஸ்ஜிதை மீண்டும் கட்டமைக்க வேண்டும் என்ற போராட்டங்கள் நடைபெற்றன.
இந்திய மக்கள் அனைவரும் மத வேறுபாடின்றி பாப்ரி மஸ்ஜித் விவகாரத் தில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக அணிவகுத்தனர்.
பாப்ரி மஸ்ஜிதை மீண்டும் கட்டி யெழுப்ப வேண்டும் என்பதை ஜனநாயகரீதியில் பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி 13 ஆண்டுகளாக தமுமுக போராட்டம் நடத்தி வருகிறது.
அதுவரை பாப்ரி மஸ்ஜித் விவகாரத் தில் கறுப்புக் கொடி ஏற்றுதல் கறுப்புநாள் என அறிவித்தல் என்பதோடு தங்கள் கடமை முடிந்து விட்டது என அன்றைய முஸ்லிம் அமைப்புகள் கருதின. டிசம்பர் 6 வருவதற்கு முன்பாகவே முஸ்லிம் இளைஞர்களை வளைத்துப் பிடித்து காவல்துறை கைது செய்வதும் நடக்கும். காவல்துறை யினரின் அதிரடி சோதனைகளால் பல்வேறு இடங்களில் முஸ்லிம்களுக்கு துயரங்கள் தொடர்ந்தன.
மஸ்ஜிதை இடித்தவர்களை எதுவும் செய்யாமல் விட்டுவிட்டு மஸ்ஜிதை இழந்த மக்களை துன்புறுத்திய கொடுமை தொடர்ந்த போது வெகுண் டெழுந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் பிரச்சினையை அதன் பீடத்திலேயே சந்திக்க ஆயத்த மாகியது.
தேடித்தேடி கைது செய்கிறாயா வா, வந்து இனி எங்களை கைது செய், கைது செய்து கைது செய்து களைத்துப் போவாய்' எனக் கூறி அதிரடியாய் இறங்கிய தமுமுக உரிமைப் போராளி களின் படை அதுவரை காவல்துறை நடத்திய டிசம்பர் 6 அடாவடித் தனங்களை சந்திக்க முடிவு செய்தது. தேடித்தேடி கைது செய்த காவல்துறை, ஆயிரக்கணக்கில் திரண்ட முஸ்லிம் இளைஞர்களைக் கண்டு திணறித்தான் போனது.
தமுமுகவின் எழுச்சியால், டிசம்பர் 6ஐ காரணம் வைத்து நசுக்கும் அதிகார வர்க்கம் தனது எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை வந்தது.தலைநகர் தொடங்கி பட்டி தொட்டி யெங்கும் நடைபெற்ற டிசம்பர் 6 போராட்டங்களின் மூலம் தமிழகம் கிடுகிடுக்கத் தொடங்கியது.
டிசம்பர் 6 வந்தால் துரத்தி துரத்தி கைது செய்யப்பட்ட இளைஞர்கள் ஜனநாயக ரீதியிலான போராட்டங் களால் தன்னெழுச்சியாக பாப்ரி மஸ்ஜிதைக் கட்டித் தரவேண்டும் என போராடி கைதாயினர்.
தமுமுகவின் இந்த அறப்போராட்ட எழுச்சி பற்றிப் பரவிய எழுச்சித் தீ திக்கென பரவியது.
கடந்த ஆண்டு 42 இடங்களில் தமுமுக உரிமைப் போராளிகள் கறுப்புக் கொடிகளுடன் நெருப்பு விழிகளுடன் போராட்டக் களம் புகுந்தனர்.
அதனைத் தொடர்ந்து சில வாரங் களிலேயே அமெரிக்க கொடுங்கோலர் களால் மாவீரன் சதாம் ஹுஸைன் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டு ஆர்த்தெழுந்த கழகம் அறுபதுக்கு மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டங் களை நடத்தியது.
கடந்த ஆண்டு சில வாரங்களுக்கு இடையே ஏற்பட்ட எழுச்சி இந்த ஆண்டு சில நாட்களிலேயே நிகழ்த்திக் காட்டி விட்டனர் கழகக் கண்மணிகள்.
வரலாற்று திருப்புமுனையாய் திகழ்ந்த நன்றியறிவிப்பு மாநாட்டை நவம்பர் 24ல் பல்லாயிரக்கணக்கில் மக்களை திரட்டி நடத்திக் காட்டி சென்னையை திணறடித்த பின்னர் சில நாட்களிலேயே டிசம்பர் 6 போராட்டத் தினை சென்னை உயர்நீதிமன்றம் தொடங்கி மாவட்ட நீதிமன்றங்கள் வரை முற்றுகையும் ஆர்ப்பாட்டமும் நடத்தி தேசிய அளவில் கவன ஈர்ப்பை ஏற்படுத்தி விட்டது தமுமுக.
தமுமுகவின் டெல்லிப் பேரணி, முஸ்லிம் அமைப்புகளுக்கு தன்னம்பிக் கையையும் ஒரு புத்தெழுச்சியையும் ஏற்படுத்தியது.
இதனை நிரூபிக்கும் விதமாக டெல்லியில் முஸ்லிம் அமைப்புகள் டிசம்பர் 6 போராட்டத்தினை முன்னெடுத் துள்ளன. தமுமுக, முஸ்லிம் இயக்கங் களுக்கு முன்னோடி இயக்கமாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுவிட்டது.
ஆண்டுகள் 15 கழிந்து விட்ட போதிலும் பாப்ரி மஸ்ஜிதை மீண்டும் கட்டும் அறப்போர் களத்தில் வீரியத் துடன் போராடுவோம். எத்தகைய தியாகத்தையும் செய்து அயோத்தியில் இறைவனின் இல்லத்தை விரைவில் கட்டுவோம் (இன்ஷா அல்லாஹ்) என தமுமுக சூளுரைக்கிறது
Subscribe to:
Posts (Atom)
