Tuesday, June 24, 2008
மும்பை குண்டு வெடிப்பு பின்னணியில் பஜ்ரங்தள்!மகாராஷ்ட்ர மாநிலம் தானே மாவட்டத்தில் நவி மும்பைப் பகுதியில் கலையரங்கில் நிகழ்ந்த குண்டு வெடிப்புக்கு சங் பரிவார் இயக்கத் தின் துணை இயக் கங்களில் ஒன்றான பஜ்ரங்தள் என்ற பயங்கரவாத இயக் கத்திற்கும் தொடர்பு இருப்பதாக மகா ராஷ்ட்ரா மாநில உளவுத்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது.இந்நாட்டின் பழம்பெரும் பயங்கரவாத இயக்கமான சங்பரிவார் சக்திகளுக்கும் நாட்டில் நடைபெற்ற பல்வேறு சதிச் செயல் களுக்கும் தொடர்பு இருப்பதாக கடந்த அறுபதாண்டு காலமாகவே குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் நவி மும்பையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பிலும் மேற்படியாளர்களின் கை வரிசை இருப்பதாக மகராஷ்ட்ரா உளவுத்துறை போலிசார் கூறியுள்ளனர்.Aamhi Pachpute என்ற மராத்தி நாடகம் சஞ்சய் பவார் என்பவரால் இயக்கப்பட்டது. இந்த நாடகம் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நவி மும்பையில் காத்கரி ரங்யா தன் கலையரங்கில் திரையிடப்பட்ட போது கடும் வன் முறையில் இறங் கிய பஜ்ரங்தளத் தினர் அந்த நாட கத்தை தடுத்து நிறுத்தினர். அதே கலையரங்கில் தற்போது குண்டு வெடித்துள்ளது.இந்த குண்டு வெடிப்புகளின் பிண்ணயில் பஜ் ரங்தளம் இருப்ப தாக 'தானே' காவல் துறை இணை ஆணையர் மதுகர் ஷிண்டே சந்தேகம் தெரிவித்திருக்கிறார்.நான்டெட், தென்காசி போன்ற இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு களில் ஈடுபட்ட சங்கும்பலே இந்த சதிச் செயலையும் இழைத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்ட நிலையில் நவி மும்பை குண்டு வெடிப்புகளில் பஜ்ரங்தள் பயங்கரவாத அமைப்பு பின்னணியில் உள்ளதாக கூறப்படும் தகவல்கள் அலட்சியப்படுத்தக் கூடியவை அல்ல
Posted by mannady at 2:29 PM 0 comments
abusalih news
மன்னிப்பு கேட்ட மகாராஷ்டிரா சி.ஐ.டி.போலிஸ் மகாராஷ்டிரா மாநில போலிஸ் ஹுவாஜா யூனுஸ் என்ற இளைஞரின் மீது வழக்கு விசாரணையை மேற்கொண்டதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டது. மேலும் தங்களால் இந்த வழக்கை விசாரிக்க இயலாது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் காவல்துறை உயர் அதிகாரிகள் அரசியல் சக்தி மிகுந்த இடங்களில் செல்வாக்குமிகுந்தவர்கள். எனவே ஹுவாஜா யூனுஸ் வழக்கில் தங்களால் விசாரணை செய்ய முடியாது. சுயேச்சையான ஒரு விசாரணைக் குழுவினரே இதனை விசாரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.யார் அந்த ஹுவாஜா யூனுஸ்? 2002 ஆம் ஆண்டு கட்கோபாரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் இருவர் இறந்தனர். 50 பேர் காயமடைந்தனர். அந்த குண்டு வெடிப்பு தொடர்பாக வளைகுடாவில் வாழ்ந்து வந்த கணினி மென்பொருள் பொறியாளரான ஹுவாஜா யூனுஸை போலிஸ் கைது செய்தது. காவல் நிலைய லாக்கப் அறையில் காவல்துறையினரின் கடும் சித்திரவதைகளால் ஹுவாஜா யூனுஸ் ஜனவரி 2003 ஆம் ஆண்டு மரணமடைந்தார். இந்நிலையில் காட்கோபார் வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்ட டாக்டர்.அப்துல் மதீன் உட்பட இதனைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட காவல் துறையினர் மீதும் வழக்கு தொடர மகாராஷ்ட்ரா மாநில சி.ஐ.டி. போலிஸ் மகாராஷ்ட்ரா மாநில அரசிடம் அனுமதி கோரியது. ஆனால் மகாராஷ்ட்ரா மாநில அரசு நான்கு காவல்துறையினர் மீது மட்டுமே வழக்குத் தொடர அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து மகாராஷ்ட்ரா மாநில சி.ஐ.டி. காவல்துறை சி.பி.ஐ.யிடம் இவ்வழக்கை ஒப்படைக்கு மாறு கேட்டுக்கொண்டுள்ளது. இது மகாராஷ்டிரா மாநில சி.ஐ.டி.காவல்துறையின் வெளிப்படையான தன்மையையும் அதே பரிதாபகரமான தோல்வியையும் மகாராஷ்டிரா அரசின் உள்நோக்கத்தையும் காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். எட்டு பேரை குற்றமற்றவர்கள் என மும்பை பொடா நீதிமன்றம் விடுதலை செய்தது. போலிஸ் காவலில் இறந்த ஹுவாஜா யூனுஸின் மர்ம மரணம் குறித்த சந்தேகம் வலுப்பெற்றது. ஹுவாஜா யூனுஸை சித்திரவதை செய்து படுகொலை செய்ததாக பதினான்கு காவல்துறை உயர் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன
Posted by mannady at 2:26 PM 0 comments
abusalih news
இந்தோனேஷியாவில் அனாதைகளாக்கும் பெற்றோர்கள்! இந்தோனேஷியாவில் தொடரும் உணவுப் பொருட்கள் விலையேற்றத்தால் வறுமையில் சிக்கிய இந்தோனேஷிய பெற்றோர் தங்களின் குழந்தைகளை அநாதை இல்லங்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். இத்தகவலை ஜகார்த்தா போஸ்ட் வெளியிட்டுள்ளது.சுனாமி என்ற ஆழிப்பேரலையில் ஏராளமான குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்தனர். அப்போது ஏராளமான அனாதை இல்லங்கள் நிறுவப் பட்டன. சமூகநலத் துறையின் சார்பிலும் ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் யூனிசெஃபின் அனாதை நிலையங்களும் இங்கு ஏராளமாக உள்ளன.5 லட்சம் குழந்தைகளைக் கொண்ட அனாதை நிலையங்களில் வெறும் 6 சதவீத குழந்தைகளே உண்மையில் அநாதைகள் என்றும் மற்றவர்கள் பெற்றோர்களால் அனுப்பப்பட்ட குழந்தைகள் என்றும் தெரிய வந்தது.உணவுப்பொருள் விலையேற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தோனேஷியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
Posted by mannady at 2:25 PM 0 comments
abusalih newsagainst anti dalit atricities
உயர்சாதியினரால் கொல்லப்பட்ட தலித் மூதாட்டி தலித் சமூகத்தைச் சேர்ந்த வயதான பெண்மணி ஒருவர் ஆதிக்கசாதியைச் சேர்ந்த மூவரால் உயிரோடு எரிக்கப் பட்ட சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது.ஆதிக்கசாதியினர் பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் எடுக்கச் சென்ற போது இந்த கொடிய சம்பவம் நடைபெற்றுள்ளது. ஹீராலால், தினேஷ் மற்றும் ராஜேந்திரா என்ற மூவரும் பீரம்பாய் என்ற 55 வயது பெண்மணியை நெருப்பி லிட்டு கொளுத்தினர்.80 சதவீதம் அந்தப் பெண்மணியின் உடல் எரிந்து விட்டதாக கன்ததா பகுதி யின் காவல்துறை அதிகாரி அபிஷேக் ரஞ்சன் தெரிவித்தார்.பீரம்பாய் உயிரோடு கொளுத்தப்பட்ட செய்தி கன்ததா பகுதி முழுவதும் பரவி யது. பெரும் போராட்டத்திற்கு பிறகே படுகொலையாளர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தீயிலிடப்பட்ட பெண்மணியின் கணவரான ஹுகும் சந்த் தெரிவித்தார்
Posted by mannady at 2:23 PM 0 comments
abusalih news about food crisis
விலைவாசி உயர்வு: பாதிப்பில் 10 கோடி பேர்! உலகத்தில் உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் 10 கோடி மக்கள் நிரந்தர பாதிப்பில் தள்ளப்படும் அபாயத்தில் இருப்பதாக உலகத் தலைவர்கள் அபாய அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இத்தாலி தலைநகர் ரோமாபுரியில் உச்சி மாநாட்டை நடத்தியது. இத்தாலிய அதிபர் ஜியோர்ஜியா நேப்லிடானோவின் துவக்க உரையைத் தொடர்ந்து உலகத் தலைவர்கள் உரையாற்றினர். கடந்த இரண்டு ஆண்டுகளில் உணவுப் பொருட்களின் விலை இரண்டு மடங்குகளாக உயர்ந்துள்ளது. அரிசி, சோளம், கோதுமையின் விலை எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தை அடைந்துள்ளது. சில உணவுப் பொருட்களின் விலை கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. 44 நாடுகளின் தலைவர்கள் ரோம் உச்சி மாநாட்டில் பங்கேற்றனர்.ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மத் நிஜாத் முதன்முறையாக ஐரோப்பாவில் கலந்துகொண்ட பொது நிகழ்ச்சியாக இது அமைந்தது. உலகில் உணவுப் பொருட்க ளின் விலையேற்றத்திற்கு மேற்கு நாடுகளே முக்கியக் காரணம்; குறிப்பாக அமெரிக்கா இதற்கு முக்கியப் பொறுப்பேற்க வேண்டி யதிருக்கும் என்று அஹ்மத் நிஜாத் தெரிவித்தார்
Posted by mannady at 2:21 PM 0 comments
abusalih news about food crisis
விலைவாசி உயர்வு: பாதிப்பில் 10 கோடி பேர்! உலகத்தில் உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் 10 கோடி மக்கள் நிரந்தர பாதிப்பில் தள்ளப்படும் அபாயத்தில் இருப்பதாக உலகத் தலைவர்கள் அபாய அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இத்தாலி தலைநகர் ரோமாபுரியில் உச்சி மாநாட்டை நடத்தியது. இத்தாலிய அதிபர் ஜியோர்ஜியா நேப்லிடானோவின் துவக்க உரையைத் தொடர்ந்து உலகத் தலைவர்கள் உரையாற்றினர். கடந்த இரண்டு ஆண்டுகளில் உணவுப் பொருட்களின் விலை இரண்டு மடங்குகளாக உயர்ந்துள்ளது. அரிசி, சோளம், கோதுமையின் விலை எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தை அடைந்துள்ளது. சில உணவுப் பொருட்களின் விலை கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. 44 நாடுகளின் தலைவர்கள் ரோம் உச்சி மாநாட்டில் பங்கேற்றனர்.ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மத் நிஜாத் முதன்முறையாக ஐரோப்பாவில் கலந்துகொண்ட பொது நிகழ்ச்சியாக இது அமைந்தது. உலகில் உணவுப் பொருட்க ளின் விலையேற்றத்திற்கு மேற்கு நாடுகளே முக்கியக் காரணம்; குறிப்பாக அமெரிக்கா இதற்கு முக்கியப் பொறுப்பேற்க வேண்டி யதிருக்கும் என்று அஹ்மத் நிஜாத் தெரிவித்தார்
Posted by mannady at 2:21 PM 0 comments
abusalih article about social justice
மத்திய அமைச்சரவையில் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுகிறதா?மத்திய அமைச்சரவையில் இடஒதுக்கீடு முறையாக அமுல்படுத்தப்படுகிறதா? என்பதைக் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக விபரங்கள் அறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.34 காபினெட் அமைச்சர்கள், 22 ராஜாங்க அமைச்சர்கள் தொடர்பான துறைகளின் மீது நடத்தப்பட்ட ஆய்வில் பொதுப்பிரிவில் 203 அதிகாரிகளையும், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வெறும் 23 பேர் மட்டுமே அதிகாரிகளாக அமர்த்தப்பட்டுள்ளனர்.தேவ் ஆசிஷ் பட்டாச்சார்யா என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத் தின்படி இந்தக் கேள்விகளை எழுப்பினார்.மண்டல் பரிந்துரைகளுக்குப்பின் தேசிய அளவில் ஏற்பட்ட சமூக நீதி எழுச்சிக்குப்பின் கூட குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை என்பது அதிர வைக்கும் தகவலாகும்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment